கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், சபரிமலை கோயி​லில் இந்தாண்டுக்கான மண்டல, மகர விளக்கு வழிபாடு  கடந்த 17-ம் தேதி முதல்  வழி​பாடு நடந்து வரு​கிறது. தொடக்க நாட்​களில் வரையறை​யின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​ட​தால் கடும் நெரிசல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, உடனடி தரிசன புக்​கிங் 20 ஆயிரத்​தில் இருந்து 5 ஆயிர​மாக குறைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கேரள டிஜிபி ரவுடா சந்​திரசேகர் நேற்று சன்னி​தானத்​தில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்​தார். பின்​னர், 2-வது பிரிவு காவலர் குழு நேற்று கோயில் பாது​காப்​புக்​குப் பொறுப்​பேற்​றது. இதில் 1,543 பேர் உள்​ளனர். இந்​தக் குழு​வில் ஒரு உதவி சிறப்பு அதி​காரி (ஏஎஸ்​ஓ), 10 துணைக் கண்​காணிப்​பாளர்​கள், 34 ஆய்​வாளர்​கள் உள்​ளனர். சிறப்பு அதி​காரி எம்​.எல்​.சுனில், பக்​தர்​களை கையாள்​வது குறித்த இவர்​களுக்கு பயிற்சி அளித்​தார். இதையடுத்​து, பெரிய நடைப் பந்​தலில் 2-ம் பிரிவு போலீ​சார் உறு​தி​மொழி ஏற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். இந்​நிலை​யில், சுவாமி தரிசனத்​துக்​கான ஆன்​லைன் முன்​ப​திவு​கள் ஜன. 10-ம் தேதி வரை நிறைவடைந்​துள்​ளன. பக்​தர்​களின் கூட்​டத்​துக்கு ஏற்ப ஸ்பாட் புக்​கிங் மாற்றி அமைக்​கப்​படு​வதுடன், பல மணி நேரம் பதிவுக்​காக காத்​திருக்​கும் நிலை​யும் உள்​ளது. நேற்று வரை தரிசனம் செய்த பக்​தர்​களின் எண்​ணிக்கை 8 லட்​சத்​தைக் கடந்துள்ளது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.