மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் விரதம், சிவ பெருமான் அருள்! அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் & வழிபாடு முறைகள்!

கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி திங்கள்கிழமை பிறக்கிறது. மிக விசேஷமாக இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாள் சோமவார பிரதோஷ தினமாக அமைந்துள்ளது.

கார்த்திகை மாதம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். கார்த்திகை முதல் தேதி அன்றே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கருப்பு அல்லது காவி நிற உடை உடுத்தி, துளசி மணி மாலை அணிந்து, விரதத்தை துவக்கி விடுவார்கள். கார்த்திகை முதல் நாளில் விரதத்தை துவங்கி, தொடர்ந்து 41 நாட்கள் ஐயப்ப பக்தர்கள் மண்டல விரதம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டும் சபரிமலை யாத்திரைக்கான ஏற்பாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்து வருகிறது.


சபரிமலை ஐயப்பன் விரதம், சிவ பெருமான் அருள்! அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் & வழிபாடு முறைகள்!

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி திங்கள்கிழமை பிறக்கிறது. மிக விசேஷமாக இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாள் சோமவார பிரதோஷ தினமாக அமைந்துள்ளது. சிவ பெருமானுக்குரிய பிரதோஷ நாளில், ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதத்தை துவக்குவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் சுவாமி ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து கொள்வதால் ஐயப்பனின் அருளும், சிவபெருமானின் அருளும் சேர்ந்தே கிடைக்கும்.

கார்த்திகை முதல் தேதி பிரதோஷ தினத்தில் வருவதால் அன்று எப்போது வேண்டுமானாலும் மாலை அணிந்து, விரதத்தை துவங்கலாம். இருந்தாலும் ராகு காலம், எம கண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் மாலை அணிந்து கொள்வது சிறப்பு. அன்று திங்கள்கிழமை என்பதால் காலை 07.30 முதல் 9 மணி வரை ராகு காலமும், காலை 10.30 முதல் பகல் 12 வரை எமகண்டமும் உள்ளது. இந்த நேரங்களை தவிர்த்து விட்டு, மற்ற நேரத்தில் மாலை அணிந்து கொள்ளலாம்.


சபரிமலை ஐயப்பன் விரதம், சிவ பெருமான் அருள்! அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் & வழிபாடு முறைகள்!

கார்த்திகை மாதம் சுவாமி ஐயப்பனுக்கு மட்டுமின்றி, முருகப் பெருமான் மற்றும் சிவபெருமானுக்கும் ஏற்ற மாதமாகும். அதனால் திருக்கார்த்திகை தீபத்திற்காக விரதம் இருப்பவர்களும் கார்த்திகை முதல் நாளில் விரதத்தை துவக்கலாம். ஆன்மீகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் கார்த்திகை மாதம் தீப வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி தந்து, லிங்கோத்பவராக வெளிப்பட்ட மாதம் என்பதால் கார்த்திகை மாதம் சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவனுக்கு நடத்தப்படும் சங்காபிஷேகம் மிகவும் சிறப்புக்குரியதாகும். இது தவிர கார்த்திகை மாதத்தில் சிவனுக்கு நெய் அபிஷேகம் செய்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் வீட்டில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழிபடுவது சிறப்பு. மகாலட்சுமி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அந்த வகையில் மகாலட்சுமி, தீபத்தின் சுடரில் வாசம் செய்யும் மாதமே கார்த்திகை மாதமாகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget