School Leave: ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..! எங்கு? எதற்கு தெரியுமா..?
அடுத்த சில நாட்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான குளிர் மற்றும் மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் கடும் குளிர் தாக்கி வருகிறது. வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜனவரி 8 ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Punjab Govt has extended winter holidays in all the government, private and aided schools till January 8, 2023
— ANI (@ANI) January 1, 2023
All schools in the state would not open on January 2nd as announced earlier. The schools would now open on January 9, 2023: School Education Minister Harjot Singh Bains
மாநிலத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் குளிரைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 8 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தெரிவித்துள்ளார். முதல் உத்தரவில் 2023 ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது அனைத்து பள்ளிகளும் 2023 ஜனவரி 9 ஆம் தேதி மட்டுமே திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடுமையான குளிர்:
அடுத்த சில நாட்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான குளிர் மற்றும் மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், கடும் குளிர் காரணமாக மக்களிடையே குளிர் காய்ச்சலின் தாக்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனுடன், கடுமையான மூடுபனி மற்றும் குளிர் அலையுடன், நாட்டின் பல மாநிலங்களில் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, இமயமலைப் பகுதியில் இருந்து வரும் வடமேற்கு காற்று சமவெளிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மத்திய இந்தியாவிலும் இதன் தாக்கத்தை காணலாம். குளிர்ந்த காற்று காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தில் ஜனவரி 1, 2023 வரையிலும், பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஜனவரி 4, 2023 வரையிலும், ஹரியானா மற்றும் சண்டிகர் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் ஜனவரி 4 வரையிலும் குளிர் அலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
ஹரியானா: பஞ்சாப் தவிர, ஹரியானா அரசு 2023 ஜனவரி 1 முதல் 15 வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டுக்கான போர்டு தேர்வுகளை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
டெல்லி: குளிர்கால விடுமுறைக்காக டெல்லி அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இருப்பினும், பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கும் மாணவர்களின் கற்றல் அளவிலான கல்வித் திறனை மேம்படுத்துவதற்கும் 9 ஆம் வகுப்பு முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 2 முதல் 14 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets