பாட்டு பாடு அசத்திய பார்வையற்ற குழந்தைகள்.. பிறந்தநாளன்று உருகிய ஜனாதிபதி முர்மு
ஜனாதிபதி முர்முவின் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பார்வையற்ற குழந்தைகள் பாட்டு பாடி அசத்தினர். இதை பார்த்த அவர் கண் கலங்கி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பார்வையற்ற குழந்தைகள் பாட்டு பாடி அசத்தினர். இதை பார்த்த முர்மு கண் கலங்கி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாட்டு பாடு அசத்திய பார்வையற்ற குழந்தைகள்:
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தை (NIEPVD) பார்வையிட்டார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு குழந்தைகள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
இதை பார்த்த அவர், மேடையிலேயே கண் கலங்கி அழுதார். பின்னர் பேசிய அவர், "என் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. அவர்கள் மிகவும் அழகாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் மனதிலிருந்து பாடுகிறார்கள்.
பிறந்தநாளன்று உருகிய ஜனாதிபதி முர்மு:
அவர்களின் திறமை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சில சிறப்புத் திறன்களுடன் பிறக்கிறார்கள் என்ற எனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அவர்களின் வெற்றி நிச்சயம். அவர்கள் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.
அரசின் கொள்கைகள் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் வளர சம வாய்ப்புகளை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி குழந்தைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன்.
இந்தியாவின் வரலாறு மனித நேயம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையால் நிறைந்துள்ளது. மேலும், கல்வி மூலம் அதிகாரம் பெறுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு குழந்தைகளைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதையடுத்து, குழந்தைகள் மத்தியில் பேசிய உத்தரகாண்ட் ஆளுநர் குர்மீத் சிங், "நாடு ஒரு மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் 2047 ஆம் ஆண்டுக்குள் வலுவான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கி நாம் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறோம். தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்தப் பயணத்தில் நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறீர்கள்" என்றார்.
President Droupadi Murmu gets emotional while attending an event at the National Institute for Empowerment of Persons with Visual Disabilities, Dehradun on her birthday
— STAR Boy TARUN (@Starboy2079) June 20, 2025
May your year ahead be filled with health, happiness, and continued inspiration for all.
Wishing you a very… pic.twitter.com/iDNKfpISoF
தொடர்ந்து பேசிய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் நாடு தொடர்ந்து பெற, அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அவரது வாழ்க்கை போராட்டங்களால் நிறைந்தது. மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்த அவர், உயர்ந்த பதவிகளுக்கு உயர்ந்தார். மேலும் தாழ்த்தப்பட்ட பிரிவுகளின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டார்" என்றார்.





















