மேலும் அறிய

"குற்றவாளிகளை விட புத்திசாலித்தனமா இருக்கனும்" போலீசுக்கு ஜனாதிபதி முர்மு அட்வைஸ்!

காவல்துறையினர் குற்றவாளிகளை விட புத்திசாலித்தனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதன் மூலம் மட்டுமே குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை விட காவல்துறை அதிகாரிகள் புத்திசாலித்தனமாக இருந்தால் மட்டுமே குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குஜராத் காந்திநகரில் இன்று நடைபெற்ற தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

குடியரசுத் தலைவர் என்ன பேசினார்?

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நீதி அமைப்பு நமது நாட்டில் சிறப்பாக உள்ளது என்றார். கடந்த சில ஆண்டுகளில், தடய அறிவியலின் பங்கை வலுப்படுத்தவும், இந்தத் துறையில் வசதிகள், திறன்களை மேம்படுத்தவும் அரசு பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு நீதி அமைப்பும் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே அது வலிமையானதாகக் கருதப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், குறிப்பாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான, விரைவான நீதியை வழங்குவதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டின் நல்லாட்சிக்குத் தடயவியல் மாணவர்கள் தங்கள் பங்கினை ஆற்ற முன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் குற்றப் புலனாய்வு மற்றும் சாட்சியங்கள் தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"குற்றவாளிகளை விட புத்திசாலித்தனமா இருக்கனும்"

தண்டனைக் காலம் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்கும் வழக்குகளில், தடயவியல் நிபுணர் குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தின் படி, அனைத்து மாநிலங்களிலும் தடயவியல் வசதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் தடய அறிவியல் நிபுணர்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக மாற்றத்தின் காரணமாக, குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில், தடய அறிவியல் நிபுணர்களின் திறன்கள் அதிகரித்து வருவதாகவும், குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

நமது காவல்துறையினர் குற்றவாளிகளை விட புத்திசாலித்தனமாகவும், விரைவாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதன் மூலம் மட்டுமே குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார்.

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன், ஒரு வலுவான தடயவியல் அமைப்பு உருவாக்கப்படும் என்றும், தண்டனை விகிதம் அதிகரிப்பதன் மூலம் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்ய பயப்படுவார்கள் என்றும் இதனால் குற்றங்கள் குறையும் என்றும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
Embed widget