மேலும் அறிய
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மதுரையில் டயர் உருட்டி ஆர்ப்பாட்டம் !
மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி டயர்களை ஓட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டயர் உருட்டி ஆர்ப்பாட்டம்
Source : whatsapp
உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் உயர்வு
இந்தியாவில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு குறித்த ஒரு விரிவான விளக்கத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், இந்திய நுகர்வோர் அதன் முழுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், எரிபொருள் விலையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) எதிர்கொண்டு வரும் கடும் நிதி நெருக்கடி காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும், சிஎன்ஜி விலையில் கிலோவுக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97.77 ரூபாய்க்கும், டீசல் 90.67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேசிய தலைநகரில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 79.09 ரூபாயாக உள்ளது.
டயர்களை ஓட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வாடகை வண்டி ஓட்டுபவர்களுக்கும், சுவிகி, சோமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை அரசரடி பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி டயர்களை ஓட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















