மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள சுஹாகி மலைப் பகுதியில் நேற்று பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கி இந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் பயண செய்த அனைவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சென்றும் கூறப்படுகிறது. 






காயமடைந்த 40 பேரில், 20 பேர் உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 


இதுகுறித்து ரேவா பகுதி காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் பாசின் தெரிவிக்கையில், “ இந்த பேருந்து ஹைதராபாத்தில் இருந்து கோரக்பூருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் இருந்த அனைவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.