Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 15 Jun 2021 09:41 PM

Background

தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 12 ஆயிரத்து 772 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 1...More

மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 9 ஆயிரத்து 350 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை அந்த மாநிலத்தி்ல் 59 லட்சத்து 24 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் இன்று மட்டும் அந்த மாநிலத்தில் 388 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், மகாராஷ்ட்ராவில் கொரோனா வைரசால் 1 லட்சத்து 14 ஆயிரத்து 154 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.