இதுதொடர்பாக மத்திய சுகாதாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855-இல் இருந்து ஒரு  கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335-ஆக அதிகரித்துள்ளது.




ஒரே நாளில் கொரோனாவுக்கு 354 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 114-இல் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 468-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 41 ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 93 ஆயிரத்து 21-இல் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.