Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ரோட்ரிக்ஸின் அபார சதத்தால் இந்திய அணி 337 ரன்களை விளாசி அசத்தியது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஆடி வருகிறது. இந்த இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடந்தது.
மந்தனா அசத்தல்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிரிதி மந்தனா தொடக்கம் அளித்தனர். பிரதிகா ராவல் 1 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ஹர்லின் தியோல் 4 ரன்னில் அவுட்டானார். இருவரும் 18 ரன்களுக்குள் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மந்தனாவிற்கு ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி நங்கூரமிடும் முன் டார்க்சென் இந்த ஜோடியை பிரித்தார்.
டார்க்சென் பந்தில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 20 பந்துகளில் 6 பவுண்டரி விளாசி 28 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்து ரோட்ரிக் - மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடியது. இருவரும் இணைந்து அதிரடியாக ஆட இந்தியாவின் ஸ்கோர் ஏறியது. சிறப்பாக ஆடிய மந்தனா அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய உடனே அவர் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மந்தனா 63 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ரோட்ரிக்ஸ் சதம்:
இதன்பின்னர், ரோட்ரிக்ஸ் - தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பவுண்டரிகளாக விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க கிளாஸ், கிளெர்க், டெர்க்சன், லாபா, சங்கஸ் ஆகியோரை மாறி, மாறி தென்னாப்பிரிக்க கேப்டன் பயன்படுத்தினார். ஆனால், இந்த ஜோடியின் அபார ஆட்டம் இந்தியாவின் ரன்களை எகிறச் செய்தது. அபாரமாக ஆடிய ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா இருவரும் அரைசதம் விளாசினர்.
இந்திய அணிக்காக அபாரமாக ஆடிய ரோட்ரிக்ஸ் சதம் விளாசினார். 24 வயதே ஆன ரோட்ரிக்ஸிற்கு இது இரண்டாவது சதம் ஆகும். மறுமுனையில் தீப்தி சர்மாவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். சதத்தை கடந்தும் அதிரடி காட்டிய ரோட்ரிக்ஸ் 123 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அவர் 101 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்ஸருடன் அவுட்டானார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் டுத்து அவுட்டானார்.
தீப்தி 93 ரன்கள்:
தீப்தி சர்மா அதிரடியால் இந்தியா 300 ரன்களை கடந்தார். சதத்தை நெருங்கிய தீப்தி சர்மா 1 பந்து மீதம் இருக்கும்போது அவுட்டானார். அவர் 84 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 93 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தற்போது 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.





















