புதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் 9450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது. இதனிடையில் புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 1ஒருவர் உயிரிழந்த்துள்ளனர், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1601 ஆக உயா்ந்தது. இந்த நிலையில், 1215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96.731 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 462 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 323 பேரும், கொரோனா சிகிச்சை மையங்களில் 296 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,126 பேரும் என மொத்தம் 9498 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரேபிட் டெஸ்ட் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ரெங்கசாமி முடிவு செய்துள்ளார்.