தமிழ்நாடு:



  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 144 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது.

  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிப்பு - ஓபிஎஸ், இபிஎஸ் நினைவிடத்தில் அஞ்சலி

  • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

  • தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி சேலம் மத்திய சிறையில் திடீர் ஆய்வு

  • விழுப்புரம்: மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். 

  • பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.

  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 8ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் என அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சீராய்வு மனு


இந்தியா:



  • குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சபர்மதி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வரிசையில் நின்று வாக்களித்தார்.

  • பிரதமர் மோடி தலைமையிலான ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

  • பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு, சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

  • குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட தேர்தலில் 67% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • பிரதமர் மோடியின் கொள்களைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு - காங்கிரஸ்


உலகம்:



  • இந்தோனேசியாவில் எரிமை வெடிப்பு : 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு

  • அமேசான் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • ஹெட்ஃபோன், இசை நிகழ்ச்சிகளால் உலகில் 1 பில்லியன் இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிக்கும் அபாயம் இருப்பதாக தகவல்

  • மியான்மரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை


விளையாட்டு:



  • ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • அர்ஜுனா விருதை எனது தாத்தா-பாட்டிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் தெரிவித்தார்.

  • இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர் கருத்து