தமிழ்நாடு:



  • தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

  • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக சிவசேனாபதி நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

  • பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்துக்கு பேராசிரியர்‌ அன்பழகனின்‌ பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சூட்டினார்.

  • அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • விவசாயிகளுக்கு யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

  • அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

  • தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


இந்தியா:



  • 25 விமான நிலையங்கள் 2025ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

  • கர்நாடக மகாராஷ்ட்ரா இடையே வலுக்கும் எல்லை பிரச்சனை காரணமாக கொங்னோலி டோல் பிளாசா அருகே போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  • இந்தியா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகளும் தான் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • மராட்டியத்தில் பஸ் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி- 10 பேர் படுகாயம்

  • சபரிமலையில் கடந்த 32 நாட்களில் மட்டும் 20.88 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.


உலகம்:



  • சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

  • அணு ஆயுத பயன்பாடு குறித்து இந்திய பிரதமர் மோடி கவலை தெரிவித்திருப்பது ரஷியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

  • நான் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா?: கருத்துக்கணிப்பை தொடங்கிய எலான் மஸ்க்

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.15 கோடியாக உயர்ந்துள்ளது. 


விளையாட்டு:



  • இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி

  • ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- கேரளா அணிகள் இன்று மோதல்

  • அர்ஜெண்டினா அணிக்காக தேசிய போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மெஸ்ஸி அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.