மேலும் அறிய

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் கோதாவரி ஆற்றில் ஐந்து இளைஞர்கள், புனித நீராடும்போது மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில் நகரமான பாசரில் புனித நீராடுவதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மரணம்:

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும், ஹைதராபாத்தில் உள்ள சிந்தால் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 18 பேர், சரஸ்வதி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் புனித நீராடுவதற்கும் பாசருக்குச் சென்றிருக்கின்றனர்.

ஆற்றங்கரையில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த நீச்சல் வீரர்களின் உதவியுடன் உடல்களை வெளியே எடுத்தனர்.

ஆற்றின் மேல் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர் ஓட்டம் அதிகரித்தது. இறந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக் மற்றும் பாரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள். உடல்கள் பைன்சாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்:

கோதாவரி ஆற்றில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த செய்தி தனக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீர்நீர்வீழ்ச்சிகளை பார்வையிடும் மக்கள் கவனமாக இருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். நீர்த்தேக்கங்கள், ஆறுகளின் ஆழம் குறித்து மக்களை எச்சரிக்கும் பலகைகளை நிறுவவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொண்டபோச்சம்மா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆழமான நீரில் தவறி விழுந்ததாகவும் பிரபாகர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா தடுப்பணையில் ஆறு இளைஞர்கள் மூழ்கி இறந்ததாக அமைச்சர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget