Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Petrol - Diesel Price Hike: இந்தியா முழுவதும் 4 ஆண்டுகளுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.10 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விற்பனையில் கடுமையான தட்டுப்பாட்டை பல்வேறு நாடுகளும் சந்தித்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. ஏற்கனவே இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனினும் நிலைமையை சமாளிக்க கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.80 விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.103.90 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.08 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ரூ.92.39ல் இருந்து ரூ.95.47 ஆக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். மேற்காசியாவில் போர் நிலவி வரும் நிலையில் வீட்டிலிருந்து வேலை, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்துதல் போன்ற பல வேண்டுகோள்களை அவர் விடுத்தார். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அடுத்த 2-3 வாரங்களுக்கு இந்த போர் தொடர்ந்தால், மேலும் ஒன்று அல்லது இரண்டு எரிபொருட்களின் விலை உயர்வுகளை நாம் காணக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















