<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>india</title><atom:link href="https://tamil.abplive.com/india/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 18:01:39 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Kerala: பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா..  மாநில அரசிடம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்ற குடிமகன்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/customer-won-rs-25-thousand-compensation-after-ksbc-charged-rs-10-extra-for-beer-bottle-263480</link><comments>https://tamil.abplive.com/news/india/customer-won-rs-25-thousand-compensation-after-ksbc-charged-rs-10-extra-for-beer-bottle-263480#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 12:30:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/customer-won-rs-25-thousand-compensation-after-ksbc-charged-rs-10-extra-for-beer-bottle-263480</guid><description><![CDATA[&lt;p&gt;மதுபானக்கடையில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசு குடிமகனுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கேரளம் மாநில அரசின் கீழ் கேரள மாநில பானங்கள் கழகம் (KSBC) செயல்படுகிறது. அதாவது நம் ஊரில் டாஸ்மாக் கடைகள் இயங்குவது போல அங்கு KSBC கடைகள் செயல்படுகிறது. இதனிடையே அங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு குடிமகன் 650 மில்லி அளவு கொண்ட பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக அவர் ரூ.180 கொடுத்துள்ளார். ஆனால் அந்த பீர் பாட்டிலில் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.170 என தெரிவிக்கப்பட்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Raghava Lawrence | TARGET &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;!TEAM &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட் | Annamalai | Vijay | TVK&quot; src=&quot;https://www.youtube.com/embed/Sv5wTt0oFVQ&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கப்பட்டது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மதுபானக்கடை ஊழியர்கள் தரப்பு பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைத் தான் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரிடம் முரட்டுத்தனமாகவும் நடந்துக் கொண்டனர்.&amp;nbsp;ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் போய் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாகவும் பதிலளித்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் தனக்கு நியாயமும், தகுந்த இழப்பீடும் கிடைக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.10 அதிகம் வசூலிக்கப்பட காரணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பீர் பாட்டிலின் அதிக்கப்பட்ச சில்லறை விலையான &amp;nbsp;ரூ.170ஐ விட கூடுதலாக ரூ.10 வசுலிக்கப்பட்டதை கேரள மாநில பானங்கள் கழகம் ஒப்புக்கொண்டது. அதுமட்டுமல்லாமல் அதற்கு காரணமாக கேரளம் அரசு அறிமுகப்படுத்திய சமூகப் பாதுகாப்பு வரி விதிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து மதுபான விலைகளில் செய்யப்பட்ட திருத்தங்களே இந்த உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;a title=&quot;Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/liquor-rs-10-additional-fee-tasmac-employee-says-after-10-days-we-will-sort-out-this-issue-262861&quot; target=&quot;_self&quot;&gt;Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விலையில் மாற்றம் வரும்போதெல்லாம் ஏற்கனவே பழைய விலை அச்சிடப்பட்ட மதுபாட்டில்களில் மீண்டும் புது விலைக்கான லேபிள் ஒட்டுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவும் வாதிடப்பட்டது. திருத்தப்பட்ட விலைகள் குறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட மதுபானக் கடையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மனுதாரர் ஊழியர்களை திட்டி அன்றைய நாளின் விற்பனையை சீர்குலைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆனால் வர்த்தக விதிகளின்படி, &amp;nbsp;எந்தவொரு முன் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருளையும், அதன் அச்சிடப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட அதிக விலையில் விற்பனை செய்வதை குற்றம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதனால் இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். அரசின் உத்தரவுகளை எல்லாம் நுகர்வோர்கள் அறிந்திருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. விலை உயர்வை அவர்கள் அறியாமலும் இருந்திருக்கலாம். MRP விலை என்பது மனுதாரருக்கும், மதுபான விற்பனையாளருக்கும் இடையிலான ஒப்பந்த விலையாகும். அதுமட்டுமல்லாமல் &amp;nbsp;நுகர்வோர் உரிமைகளை நிலைநாட்ட மனுதாரர் பல இடங்களுக்கு அலைந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எனவே, கூடுதல் தொகையான ரூ.10ஐ, இந்த புகார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 9% வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் எனவும், ரூ.15,000 இழப்பீடாகவும், ரூ.10,000 வழக்குச் செலவுகளுக்காகவும் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் கேரள மாநில பானங்கள் கழகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/healthy-food-are-you-eating-it-the-right-way-263377&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/748358e558a24562c24b021899248e4817811611617261322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்]]></title><link>https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-12th-cm-vijay-in-nithi-ayok-meeting-war-in-middle-east-strait-of-hormuz-closed-263473</link><comments>https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-12th-cm-vijay-in-nithi-ayok-meeting-war-in-middle-east-strait-of-hormuz-closed-263473#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 11:05:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-12th-cm-vijay-in-nithi-ayok-meeting-war-in-middle-east-strait-of-hormuz-closed-263473</guid><description><![CDATA[&lt;ul style=&quot;list-style-type: square;&quot;&gt;
&lt;li&gt;டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளார்.&lt;/li&gt;
&lt;li&gt;டெல்லியில் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;திமுக கூட்டணியில் CPI தற்போது இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேட்டி.&lt;/li&gt;
&lt;li&gt;அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் பதவியை பறித்தும் திரும்ப வழங்காததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;உடல்நலக்குறைவால் உயிரிழந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல். அவரது அர்ப்பணிப்பு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகழாரம்.&lt;/li&gt;
&lt;li&gt;சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.5,600 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிராம் ரூ.13,500ம், ஒரு சவரன் ரூ.1,08,000 ஆகவும் விற்பனையாகிறது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;திமுக ஆட்சியில் VB-G RAM G திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது செயல்படுத்த திட்டம் என தகவல்.&lt;/li&gt;
&lt;li&gt;ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமான நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசு சம்மன்.&lt;/li&gt;
&lt;li&gt;ஈரான் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/know-how-many-cups-of-black-coffee-can-you-drink-in-a-day-263449&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/12/9826d789cb1a1463ee79005ef40a3aeb17732940051981322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/india/major-change-in-education-loans-opportunity-to-secure-a-loan-of-up-to-20-lakh-without-collateral-263379</link><comments>https://tamil.abplive.com/news/india/major-change-in-education-loans-opportunity-to-secure-a-loan-of-up-to-20-lakh-without-collateral-263379#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 13:39:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/major-change-in-education-loans-opportunity-to-secure-a-loan-of-up-to-20-lakh-without-collateral-263379</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்லூரி படிப்பை நிறைவேற்றுவது வங்கிகள் வழங்கக்கூடிய கல்விக் கடன்கள் தான். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் தனக்கு பிடித்த படிப்பை படிக்க வேண்டும் என விரும்புகிறார் ஆனால் அவருடைய பெற்றோரிடம் அதற்கு ஏற்ப நிதி வசதி இல்லை. இந்த சூழலில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று அந்த படிப்பை முடிக்கலாம். படிப்பை முடித்த பின் கல்வி கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்தி விட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/53237e4581443ecaacdb96b4f2c7aac81781078901358193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மாணவர்களின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவது வங்கிகள் வழங்கக்கூடிய இந்த கல்வி கடன்கள் தான். தற்போது கல்வி கடன் வழங்கக்கூடிய விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. தற்போது கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெற்று வரக்கூடிய வேளையில் ஏராளமான மாணவர்கள் கல்விக்கடன்களை நாடி வங்கிகளுக்கு செல்ல இருக்கக்கூடிய சூழலில் மத்திய அரசு இந்த முக்கியமான ஆலோசனையை நடத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வங்கிகள் 7.5 லட்சம் ரூபாய் வரை எந்த ஒரு அடமானமும் பெறாமல், எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் கல்வி கடன்களை வழங்குகின்றன. 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செல்லும்போது அதற்காக ஏதேனும் ஒரு collateral காட்ட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் free collateral education loan பிரிவில் அதாவது எந்த ஒரு அடமானமும் இல்லாமல் கடன் பெறுவதற்கான கல்வி கடன் உச்ச வரம்பை தற்போதுள்ள 7.5 லட்சத்திலிருந்து இன்னும் அதிகமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/000733f15e2436c6b5cdb7333aaac7d81781078779154193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு 7.5 லட்சம் லட்சத்திற்கும் அதிகமான பணம் தங்களுடைய மேற்படிப்புக்காக எந்த ஒரு அடமானமும் இல்லாமல் கடனாக கிடைக்கும். மத்திய அரசின் இந்த அனுமதி வந்துவிட்டால் வங்கிகளும் தயங்காமல் மாணவர்களுக்கான கடன் வரம்பினை அதிகரிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் கல்வி கட்டண செலவுகள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் பணம் இல்லாததால் மாணவர்களின் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது, வங்கியில் போதிய கடன் கிடைக்காததால் ஒரு மாணவரின் எதிர்கால கனவு நின்று போய் விடக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த கடன் வரம்பை உயர்த்த ஆலோசனை நடத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டால் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை எந்த ஒரு அடமானமும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கடனாக வாங்க முடியும். இது கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் உயர் படிப்பு கனவை நிறைவேற்ற உதவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/000733f15e2436c6b5cdb7333aaac7d81781078779154193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்]]></title><link>https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-10th-government-honor-for-barathiraja-s-mortal-remains-cm-vijay-to-meet-pm-modi-us-iran-war-again-263359</link><comments>https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-10th-government-honor-for-barathiraja-s-mortal-remains-cm-vijay-to-meet-pm-modi-us-iran-war-again-263359#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 11:11:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-10th-government-honor-for-barathiraja-s-mortal-remains-cm-vijay-to-meet-pm-modi-us-iran-war-again-263359</guid><description><![CDATA[&lt;ul style=&quot;list-style-type: square;&quot;&gt;
&lt;li&gt;தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.&lt;/li&gt;
&lt;li&gt;இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு மு.க. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;, இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல்.&lt;/li&gt;
&lt;li&gt;நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; டெல்லி பயணம். நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரை சந்திப்பதோடு, பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.&lt;/li&gt;
&lt;li&gt;தமிழ்நாட்டில் இன்று முதல் 70 குழுக்களாக பிரிந்து சிங்கப்பெண் அதிரடிப் படையினர் ரோந்துப் பணி.&lt;/li&gt;
&lt;li&gt;நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/li&gt;
&lt;li&gt;தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து மக்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Bharathiraja Passed Away | இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார் சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!&quot; src=&quot;https://www.youtube.com/embed/lTiYOakHDs0&quot; width=&quot;756&quot; height=&quot;425&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;ul style=&quot;list-style-type: square;&quot;&gt;
&lt;li&gt;இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு, ஜப்பானைத் தொடர்ந்து, நேபாளத்திலும் தடை. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரசாயன பூச்சிக்கொல்லி இருப்பதாக விளக்கம்.&lt;/li&gt;
&lt;li&gt;அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து, கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை. மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்.&lt;/li&gt;
&lt;li&gt;ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி. சிட்னியில் நடந்த போட்டியில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/hero-splendor-plus-flex-fuel-know-how-many-variants-price-features-263297&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/12/9826d789cb1a1463ee79005ef40a3aeb17732940051981322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/india/karnataka-sees-steady-rise-in-hiv-aids-cases-among-men-report-263304</link><comments>https://tamil.abplive.com/news/india/karnataka-sees-steady-rise-in-hiv-aids-cases-among-men-report-263304#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 17:33:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/karnataka-sees-steady-rise-in-hiv-aids-cases-among-men-report-263304</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக எச்ஐவி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. 18-35 வயது வரையான இளைஞர்கள் மத்தியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இளைஞர்களிடையே அதிகரிக்கும் எய்ட்ஸ்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகாவில் ஆண்களுக்கு இடையேயான பாலியல் தொடர்பு &amp;nbsp;காரணமாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்புகள் சீராக அதிகரித்து வருகின்றன. கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் தரவுகளின்படி, சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2023-2024ல் 44,581 ஆக இருந்து, 2024-2025ல் 62,664 ஆகவும், 2025-26ல் 66,606 ஆகவும் உயர்ந்துள்ளது. 18-25 மற்றும் 26-35 வயதுப் பிரிவினரிடையே பாதிப்புகள் கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, கல்லூரி விடுதிகள் மற்றும் பெருநிறுவன அலுவலகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/pM5rwL1NaNM?si=jRFGoxXcJT1nE1h0&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;18-25 வயதுக்குட்பட்டோருக்கான பாதிப்புகள் 2023-24ல் 3,732 ஆக இருந்து, 2024-2025ல் 6,962 ஆக அதிகரித்து, பின்னர் 2025-2026ல் 6,283 ஆகச் சிறிதளவு குறைந்தது. 26-35 வயதுக்குட்பட்டோருக்கான பாதிப்புகள் 2023-2024ல் 9,351 ஆக இருந்த நிலையில், 2025-2026ல் 14,555 ஆகப் பதிவாகியுள்ளன. பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களில், இந்த ஆண்டு 417 புதிய பாதிப்புகளுடன், எச்.ஐ.வி தொற்று மாநிலத்தில் மிகவும் பொதுவானதாக நீடிக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதுதொடர்பாக கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் திட்ட இயக்குநர் பத்மா கூறுகையில், &amp;ldquo;ஒரே பாலினத்தவர் இடையேயான நெருக்கம் தொடர்பான பாதிப்புகள், பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்கள் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தங்கும் விடுதிகளில் ஏற்பட்ட நோய்ப் பரவல்கள் காரணமாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்கள், பெண் பாலியல் தொழிலாளர்களுடன் உடலுறவு கொண்டு, பின்னர் தங்களுக்குள்ளும் உடலுறவு கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவும் பல பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அரசு, தனது முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி மற்றும் பிற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களுக்கான அபாயத்தை மதிப்பிடவும், அதன் 'பிரேக்ஃப்ரீ' (BreakFree) செயலியில் இணையுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறது. மேலும், கேஎஸ்ஏபிஎஸ் அமைப்பானது, மாநிலம் முழுவதும் உள்ள 442 ரெட் ரிப்பன் கிளப்புகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில் 40-க்கும் மேற்பட்டவை பெங்களூருவில் அமைந்துள்ளன. இதன் மூலம் இளைஞர்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு, பாலியல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் தேர்வுகள் குறித்துக் கல்வி புகட்டப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆதரவு வழங்க எங்களிடம் 1097 என்ற உதவி எண்ணும் உள்ளது. நாங்கள் பெருநிறுவன அலுவலகங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். மேலும் பரிசோதனைக்காக இரண்டு மாத கால முகாம்களையும் அமைத்து வருகிறோம்,&quot; என்று பத்மா மேலும் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஆண்களுடன் ஆண்கள் பாலியல் உறவு&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்கள் (MSM) குறித்த தனது மருத்துவ அனுபவத்தைப் பற்றி, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் (தொற்று நோய்கள்) மருத்துவருமான டாக்டர் ஸ்வாதி ராஜகோபால் கூறுகையில், &amp;ldquo;டேட்டிங் செயலிகள் மூலம் அதிகரித்துள்ள சமூக வலைப்பின்னல், துணைவர்களைக் கண்டறிவதை எளிதாக்கியுள்ளது. இது அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொடர்புகளுக்கு வழிவகுக்கும். சீரற்ற ஆணுறைப் பயன்பாடு, எச்.ஐ.வி-யைத் தாண்டி பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) குறித்த குறைந்த விழிப்புணர்வு மற்றும் ஆபத்து குறித்த குறைவான புரிதல் ஆகியவையும் முக்கியமான காரணிகளாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/velmurugan-raised-question-what-is-the-reason-for-the-power-cuts-in-tamil-nadu-263292&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் எப்படி? - வேல்முருகனின் நியாயமான கேள்விகள் - தவெக அரசின் பதில் என்ன?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சமீபத்திய ஆண்டுகளில், சிபிலிஸ் மற்றும் கொனோரியா நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதை சுகாதாரப் பணியாளர்கள் கவனித்துள்ளனர். சிகிச்சையளிக்கப்படாத பாலியல் நோய்த்தொற்றுகள் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுப்பதுடன், எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான அல்லது அதனைப் பரப்புவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்தப் போக்கு கவலை அளிக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குக் கட்டுப்படாத கொனோரியா நோய் தோன்றுவது மற்றொரு சவாலாகும், இது சிகிச்சையை மேலும் கடினமாக்குகிறது&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/eating-mangoes-at-night-healthy-habit-or-bad-idea-263263&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/09/0a98cacf595de5b66fffe08d0be815861781006563179113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?]]></title><link>https://tamil.abplive.com/news/india/bengaluru-techie-got-six-figure-salary-works-as-rapido-rider-on-weekends-263259</link><comments>https://tamil.abplive.com/news/india/bengaluru-techie-got-six-figure-salary-works-as-rapido-rider-on-weekends-263259#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 12:18:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/bengaluru-techie-got-six-figure-salary-works-as-rapido-rider-on-weekends-263259</guid><description><![CDATA[&lt;p&gt;பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஐடி ஊழியர் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றும், வார இறுதியில் ரேபிடோ டாக்ஸி ஓட்டும் சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற ஆதங்கம் இன்றைய காலத்தில் பல துறைகளிலும் பணியாற்றுபவர்கள் இடையே உள்ளது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது, தனியாக சொந்தமாக பிசினஸ் கவனிப்பது என பல விஷயங்களில் நாம் நாட்டம் செலுத்தி வருவதை பார்த்திருக்கலாம். நம்மை சுற்றியிருக்கும் அனைத்தின் விலையும் உயர்ந்து விட்டது. ஆனால் சம்பளம் மட்டும் அப்படியே இருப்பதாக பலரும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதாவது எக்ஸ் வலைத்தளத்தில் ஷபாஸ் என்ற நபர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சர்வதேச கம்பெனி ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றும் 35 வயது நபரை சந்தித்தேன். பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டாவிற்குப் பயணம் செய்தபோது ராபிடோ முன்பதிவு செய்தேன். அந்த நபர் தான் பைக் டாக்ஸி ஓட்டுநராக வருகை தந்தார். நாங்கள் பயணத்தை தொடங்கியபோது அவர் என்னிடம் கன்னடத்தில் பேச தொடங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;DMK vs CPIM: திமுக தயவில் ஆட்சி? &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;-உதய் vs சண்முகம்.. வெடித்த வார்த்தைப்போர் | MK Stalin&quot; src=&quot;https://www.youtube.com/embed/_L51x7Q1190&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் நான் சரியாக கன்னடம் பேசவில்லை என்பதால் ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று அவர் கேட்க, நான் ஐடி துறையில் பணியாற்றுவதாக சொன்னேன். தானும் அதே துறையில் ஊழியர் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கம்பெனி பெயரை சொல்லி, லட்சத்தில் சம்பளம் பெறுவதாகவும் கூறினார். அந்த பைக் டாக்ஸி ஓட்டுநருக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. இதில் கிடைக்கும் வருமானம் தனது குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்ற பயன்படுவதாக அவர் கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக இதுபோன்ற லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களில் சிலர் தங்களது தேவையை பூர்த்தி செய்ய அந்த பணம் போதவில்லை என கூறி பார்ட் டைம் வேலைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதை இந்த சம்பவம் காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உண்மையிலேயே என்னைச் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல ஐடி வேலையும், ஆறு இலக்கச் சம்பளமும் வாங்கும் ஒருவருக்கே வார இறுதி நாட்களில் ஒரு பகுதி நேர வேலை தேவை என்று தோன்றினால், பெங்களூரு மற்றும் பிற முதல் நிலை நகரங்களில் வாழ்க்கை எவ்வளவு விலை உயர்ந்ததாகிவிட்டதா? என அந்த நபர் கேள்வியெழுப்பியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Also Read: &lt;a title=&quot;Viral Video: நடுரோட்டில் துண்டுடன் ஆடிய இந்தியப் பெண்.. வியட்நாமில் பறிபோன மானம்.. டென்ஷனாகும் நெட்டிசன்கள்!&quot; href=&quot;https://tamil.abplive.com/news/world/young-woman-dance-performed-with-towel-in-the-middle-of-a-street-vietnam-viral-video-263250&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Viral Video: நடுரோட்டில் துண்டுடன் ஆடிய இந்தியப் பெண்.. வியட்நாமில் பறிபோன மானம்.. டென்ஷனாகும் நெட்டிசன்கள்!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இது சமூக கலாச்சாரம் மற்றும் வேலை - வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது. அதேசமயம் சிலர் சமூகத்தில் மனநிறைவு, மகிழ்ச்சி ஏற்பட்ட மக்களுடன் பழகுவதற்காகவும் இத்தகைய பார்ட் டைம் பணிகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/kitchen-tips-how-to-care-for-eggs-ordered-online-know-more-details-262902&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/09/d0c2f953f34fcea6b90b197e354a721917809876009061322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?]]></title><link>https://tamil.abplive.com/news/india/pm-modi-breaks-nehru-record-for-longest-serving-pm-know-details-263254</link><comments>https://tamil.abplive.com/news/india/pm-modi-breaks-nehru-record-for-longest-serving-pm-know-details-263254#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 11:59:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/pm-modi-breaks-nehru-record-for-longest-serving-pm-know-details-263254</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;உலகின் அரசியல் வரலாற்றில், நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் யார் என்று விவாதிக்கப்படும் போதெல்லாம், பல சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் வெளிப்படுகின்றன. ஜனநாயகத்திற்கும் முடியாட்சிக்கும் இடையிலான இந்த நீண்ட அதிகாரப் பயணத்தை காண்பது வியப்பளிக்கிறது. இன்றைய இந்தியாவின் அரசியல் களத்தைப் பார்க்கும்போது, ​​ஒரு புதிய வரலாறு உருவாகி வருவதை காண்கிறோம். இன்று, ஜூன் 9-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர இந்தியாவின் முந்தைய சாதனையை முறியடித்து, இந்தியாவில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். இது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த ஒரு புதிய விவாதத்தையும் தூண்டியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்தியாவில் மோடியின் புதிய சாதனை&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்திய அரசியலில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமும், வரலாற்றுத் திருப்புமுனையும் நிகழ்ந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சாதனையை, பிரதமர் &lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நரேந்திர மோடி&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt; முறியடித்துள்ளார். பிரதமர் மோடி தற்போது நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 2024 ஜூன் 9-ம் தேதி அன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூன்றாவது பதவிக்காலத்திற்காக, பிரதமராகப் பதவியேற்றார். இன்று அவர் தனது 12 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதையடுத்து பாஜகவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe title=&quot;Minister Vignesh on Tasmac | &amp;quot;717 டாஸ்மாக் மூடிட்டோம் ரூ.8,000 கோடி நஷ்டம்&amp;quot; அமைச்சர் விக்னேஷ் ஓபன்&quot; src=&quot;https://www.youtube.com/embed/OkhgdmQgwA0&quot; width=&quot;756&quot; height=&quot;425&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நாட்கள் மற்றும் தேதிகளின் முழுமையான கணக்கீடு&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த அரசியல் பயணத்தின் புள்ளிவிவரங்களை நாம் உன்னிப்பாக ஆராய்ந்தால், பிரதமர் மோடி முதன்முதலில் 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இன்று, 2026-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி, அவர் 4,398 நாட்கள் பதவியில் இருந்து நிறைவு செய்துள்ளார். இந்த எண்ணிக்கையின் மூலம், அவர் இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதற்கு முன்னர், இந்த சாதனையை நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு வைத்திருந்தார். அவர் 1952-ம் ஆண்டு மே 13-ம் தேதி முதன்முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4,397 நாட்கள், அதாவது 12 ஆண்டுகள் மற்றும் 14 நாட்கள் அப்பதவியில் இருந்தார். பிரதமர் மோடி 4,398 நாட்கள், அதாவது 12 ஆண்டுகள் மற்றும் 15 நாட்கள் பதவியில் இருந்து, பண்டிட் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நேருவின் இடைக்கால பதவிக்காலம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மொத்த பதவிக்காலம் குறித்து அடிக்கடி குழப்பம் நிலவுகிறது. இதை புரிந்துகொள்வது அவசியம். நேரு உண்மையில் 1947, ஆகஸ்ட் 15 அன்று பிரதமரானார். ஆனால், 1952-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் வரை, அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் ஒரு இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகவே இருந்தது. அந்த காலகட்டத்தில், அவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராகவில்லை. இதனால்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் மோடியின் பதவிக்காலம், நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலத்தை இப்போது விஞ்சியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;உலகிலேயே அதிக காலம் பிரதமராக பணியாற்றியவர்கள் யார்.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்களை கருத்தில் கொண்டால், பஹ்ரைன் முதலிடம் வகிக்கிறது. பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, உலகில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற தனித்துவமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளார். அவர் 1971-ல் பிரதமரானார். நவம்பர் 2020-ல் தனது இறுதி மூச்சு வரை அந்த பதவியில் தொடர்ந்து நீடித்தார். இளவரசர் கலீஃபாவின் பதவிக்காலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள். அதாவது, மொத்தம் 50 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் நீடித்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-benefits-of-honey-soaked-oats-weight-loss-recipe-263202&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;முடியாட்சிகளை தவிர்த்து, முற்றிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கருத்தில் கொண்டால், ​​நவீன வரலாற்றில் சிங்கப்பூர் சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூ, ஜனநாயக உலகில் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக கருதப்படுகிறார். அவர் 1959 முதல் 1990 வரை தொடர்ச்சியாக சிங்கப்பூரின் பிரதமராக பணியாற்றினார். லீ குவான் யூ 31 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியதோடு, சிங்கப்பூரை ஒரு நவீன மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/28/2e5f7e28896f10ada1db766b8519991117799378451611368_original.png" width="220"/></item><item><title><![CDATA[Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங்  - 11 மணி வரை இன்று]]></title><link>https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-9th-anbumani-met-cm-vijay-singappenscheme-ujjwala-gold-price-world-news-263239</link><comments>https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-9th-anbumani-met-cm-vijay-singappenscheme-ujjwala-gold-price-world-news-263239#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 10:57:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/top-10-news-headlines-today-june-9th-anbumani-met-cm-vijay-singappenscheme-ujjwala-gold-price-world-news-263239</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;இன்று முதல் சிங்கப் பெண் அதிரடி பிரிவு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; இன்று தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் இந்த சிறப்பு பிரிவு செயல்பட உள்ளது.&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உயர்ந்த தங்கம் விலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 கூடி ரூ.1,13,600க்கு விற்பனை.ஒரு கிராம் மீது 130 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எதிராக அமைச்சருக்கு தவெக வேட்பாளர் புகார்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கிள்ளியூர் MLAவும், காங். அமைச்சருமான ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாததாக அறிவிக்க வேண்டும் என மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய கிள்ளியூர் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; வேட்பாளர் சபின். ராஜேஷின் வெற்றியில் முறைகேடு நடந்ததாகவும், விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-food-should-not-be-kept-in-plastic-containers-details-in-pics-263231&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;முதலமைச்சரை சந்தித்த அன்புமணி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பாமக தலைவர் அன்புமணி 2 எம்எல்ஏக்கள் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு. தமிழ்நாட்டில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க கோரி முதலமைச்சர் விஜயுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சாலை விபத்தில் கர்ப்பிணி பலி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அரவக்குறிச்சி: ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பைக் மீது மோதாமல் இருக்க, காரை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காரில் இருந்த இருந்த 3வயது 3வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி - போலீஸ் விசாரணை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புதியதாக 3 அமைச்சர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி&lt;br /&gt;ராஜவேலு, ராஜசேகரன், சிவக்கொழுந்து ஆகியோர் ஜூன் 17ம் தேதி அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஷாக் தந்த மத்திய அரசு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;உஜ்வாலா திட்டத்தில் மானிய விலையில் ஆண்டுதோறும் வழங்கும் வீட்டு சிலிண்டர் எண்ணிக்கையை 9லிருந்து 4-ஆக குறைத்த மத்திய அரசு; சாமானிய மக்கள் அதிர்ச்சி.&lt;br /&gt;கடந்தாண்டு இதே எண்ணிக்கை 12லிருந்து 9 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நேதன்யாகுவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தனித்து விடப்படுவீர்கள் என&lt;br /&gt;நெதன்யாகுவுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை. இஸ்ரேல் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தவதாக அறிவித்த ஈரான், லெபனானை தாக்கினால் மீண்டும் தாக்குவோம் என்றும் எச்சரிக்கை.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் வம்சாவளி பெண்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அமெரிக்கா: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயருக்கான முதற்கட்ட தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த நித்யா ராமன் 28.55% வாக்குகளுடன் 2ம் இடத்துக்கு முன்னேற்றம். தற்போதைய மேயர் பாஸ் 34.32% வாக்குகளுடன் முதலிடம். முதற்கட்ட தேர்தலில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகள் |பெறவில்லை என்றால் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் நவம்பரில் நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலில் போட்டியிடுவார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;டி20 மும்பை லீக் தொடரில், பந்தாரா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ARCS அந்தேரி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.. ARCS அந்தேரி அணி வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும், பேட்டிங்கில் 34 பந்துகளில் 66 ரன்கள் விளாசியும் அசத்தல் - ஆட்டநாயகன் விருதையும் வென்றார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/09/502e932954d5e08c160a07ab0e49011e1780981837194732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[LPG Cylinder:  இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்]]></title><link>https://tamil.abplive.com/news/india/govt-cuts-subsidised-lpg-cylinders-under-ujjwala-from-9-to-4-amid-price-hike-crisis-congress-slams-pm-modi-263235</link><comments>https://tamil.abplive.com/news/india/govt-cuts-subsidised-lpg-cylinders-under-ujjwala-from-9-to-4-amid-price-hike-crisis-congress-slams-pm-modi-263235#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 10:31:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/govt-cuts-subsidised-lpg-cylinders-under-ujjwala-from-9-to-4-amid-price-hike-crisis-congress-slams-pm-modi-263235</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;LPG Cylinder Ujjwala:&lt;/strong&gt; உஜ்வாலா திட்டத்தின் தொடக்கத்தின் போது 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்லப்பட்ட நிலையில், தற்போது அது படிப்படையாக 4 ஆக குறைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இனி 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றான உஜ்வாலா திட்டத்தின் கீழ், இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்த திட்டத்தை தொடங்கும்போது, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த மானிய ஒதுக்கீடு ஒன்பது சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மேலும் 5 சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நான்கு சிலிண்டர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளர்களின் சராசரி குடும்ப நுகர்வு அளவுகளுக்கு ஏற்ப, மானிய விலையிலான சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மல் கானூஜா அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/diabetes-and-disease-risk-these-health-problems-more-common-details-in-pics-263094&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிலிண்டருக்கு ரூ.300 மானியம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தூய்மையான சமையல் எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அதன் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், அரசாங்கம் 2022ம் ஆண்டின் மே மாதம், 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.200 என்ற மானியத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை ஒவ்வொரு முறை சிலிண்டர் நிரப்பும்போதும், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. 2023 அக்டோபரில், இந்த மானியம் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு ரூ.300 ஆக உயர்த்தப்பட்டதுடன், விகிதாசார அடிப்படையில் இந்தச் சலுகை 5 கிலோ சிலிண்டர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது எல்பிஜி விலை உயர்வைத் தொடர்ந்து, மானிய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/m7Pm3MXwBbs?si=toK-ohXRV3fOyuuw&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எகிறும் சிலிண்டர் விலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அமெரிக்கா -ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் கேஸ் சிலிண்டர்கள் என அனைத்து வகையான எரிபொருட்களின் விலையும்&amp;nbsp; உயர்ந்துள்ளது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான விலை, கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 7ம் தேதி 60 ரூபாய் மற்றும் ஜுன் 7ம் தேதி 29 ரூபாய் என மொத்தம் 89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 14.2 கிலோ எடையிலான வணிக சிலிண்டரின் விலை 957 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. இப்படி அனைத்து வகையிலான எரிபொருட்களின் விலையும் உயரும் நிலையில், மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருப்பது பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி&quot; href=&quot;https://tamil.abplive.com/auto/hyundai-bayon-could-get-petrol-turbo-cng-power-compete-with-maruti-fronx-tata-punch-know-more-spec-feat-price-auto-news-263212&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;காங்கிரஸ் விமர்சனம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மானிய சிலிண்டர்களுக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.&amp;nbsp; இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், &amp;ldquo;ஏழை பெண்களுக்கு மோடி பரிசு. உஜ்வாலா திட்டம் பாஜகவினரின் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது. 2016ம் ஆண்டில் 12 சிலிண்டர்களுக்கு மானியம். கடந்த ஆண்டில் 9 சிலிண்டர்களாக குறைப்பு, இன்று வெறும் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம். ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது. சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான் என்று அரசு சொல்கிறது. உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் சிலிண்டரை குறைவக பயன்படுத்துகின்றனர்,&amp;nbsp; தேவை இல்லாததால் அல்ல. இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்&amp;rdquo; என பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/06ec7d5d4817deb085a4622f89c9c3f01780930067243708_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Youtubeல் ஹோம் டூர் வீடியோ.. வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய கும்பல்.. அதிர்ச்சியில் பெண் பிரபலம்!]]></title><link>https://tamil.abplive.com/crime/robbed-worth-rs-10-lakh-gold-after-youtuber-gives-home-tour-video-in-madhya-pradesh-263213</link><comments>https://tamil.abplive.com/crime/robbed-worth-rs-10-lakh-gold-after-youtuber-gives-home-tour-video-in-madhya-pradesh-263213#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 07:56:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/robbed-worth-rs-10-lakh-gold-after-youtuber-gives-home-tour-video-in-madhya-pradesh-263213</guid><description><![CDATA[&lt;p&gt;மத்தியப்பிரதேசத்தில் ஹோம் டூர் என்ற பெயரில் தன்னிடம் இருக்கும் நகைகள் பற்றி வீடியோ வெளியிட்ட பெண்ணின் வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்ட இந்த காலத்தில் குற்றச்சம்பவங்கள் பல வகையிலும் நடைபெறுகிறது. இதனிடையே யூட்யூபில் ஹோம் டூர் என்ற நிகழ்வு மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி இருந்து வருகிறது. அதாவது ஒருவர் தனது வீட்டு வாசல் தொடங்கி பீரோவில் இருக்கும் துணிகள், சமையலறை என சகல விஷயங்களையும் காட்டி தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை இந்த ஹோம் டூர் வீடியோவில் தெரிவிக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தர்ம சங்கடமான நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். அதாவது அங்கிருக்கும் மோகனி கிராமத்தில் ரச்னா குர்ஜார் என்ற பெண் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்குள் திடீரென வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரச்னாவையும், அவரது குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், பணத்தையும் அள்ளிச் சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Son in law marries Mother in law | MAMA-க்கு ஷாக் கொடுத்த மாப்ள.. மாமியாரை கரம்பிடித்த மருமகன்!&quot; src=&quot;https://www.youtube.com/embed/q14tsm5lIik&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக சிவ்புரி மாவட்ட போலீசாரிடம் ரச்னா புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, &amp;ldquo;கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலையில் திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் தங்கள் முகங்கள் பதிவாகாதபடி அதன் கோணங்களை மாற்றியுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு குடும்பத்தினர் கண் விழித்தபோது தான் அறைக்கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து செல்போன் மூலம் உறவினரை வரவழைத்து வெளியே வந்து பார்த்தபோது தான் இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;குற்றவாளிகளை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இந்த குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த நபராக இருக்கலாம் எனவும் போலீசார் முதலில் தெரிவித்தனர். ஆனால் இந்த திருட்டு சம்பவம் நடைபெற முதல் காரணமே ரச்னா வெளியிட்ட ஒரு வீடியோ தான் என தெரிய வந்துள்ளது. ரச்னா குர்ஜார் &amp;nbsp;ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட தனது யூட்யூப் பக்கத்தில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;Also Read: &lt;a title=&quot;CM Vijay: தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா முதல்வரே... விஜயை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா!&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/bjp-h-raja-has-been-criticized-cm-joseph-vijay-rule-over-on-one-month-of-tvk-government-263209&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;CM Vijay: தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா முதல்வரே... விஜயை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அதில், வீட்டின் நுழைவாயில் முதல் அறைகள் வரையிலான பல்வேறு பகுதிகளைப் பதிவு செய்து பெருமைப் பொங்க பேசியுள்ளார். மற்றொரு வீடியோவில் வீட்டில் இருக்கும் நகைகள், பணம் அனைத்தையும் காட்டியுள்ளார். இந்த வீடியோ திருட்டிற்கு அடிப்படையாக இருக்கலாம் என கருதியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/kitchen-tips-how-to-care-for-eggs-ordered-online-know-more-details-262902&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/09/30552db56236527373ad282a70cbc7d417809719673611322_original.jpg" width="220"/></item></channel></rss>