<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>india</title><atom:link href="https://tamil.abplive.com/india/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 09:30:06 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[விஜய் வருகை முதல் தமிழக மழை அப்டேட் வரை… செப்டம்பர் 17-ன் முக்கிய 10 செய்திகள் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-today-news-september-17-2026-top-10-latest-headlines-today-tnn-274763</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-today-news-september-17-2026-top-10-latest-headlines-today-tnn-274763#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 08:08:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-today-news-september-17-2026-top-10-latest-headlines-today-tnn-274763</guid><description><![CDATA[&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 17, 2026 &amp;ndash; இன்றைய TOP 10 தலைப்புச் செய்திகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1.லண்டன் பயணம் நிறைவு&amp;hellip; முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்புகிறார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது 6 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்புகிறார். லண்டனில் இருந்து புறப்படும் அவர், காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2.தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு&amp;hellip; சென்னை, காஞ்சிபுரத்துக்கும் மழை எச்சரிக்கை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்&amp;hellip; விழாக்கோலம் பூண்ட மதுரை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடவில்லை என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4.தமிழகத்தில் 52 கோவில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் தங்களது செல்போன்களை அவற்றில் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5.காஞ்சிபுரம் உள்பட வட தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு&amp;hellip; வானிலை மையம் புதிய அப்டேட்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை நடவடிக்கை அதிகரிக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிதமான மழைக்கும், திருவள்ளூரில் சனிக்கிழமை கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6.சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு&amp;hellip; இன்று 4 ரயில் சேவைகள் ரத்து!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் இன்று இயக்கப்பட இருந்த நான்கு புறநகர் EMU ரயில் சேவைகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. தினசரி ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;7.சென்னை இரண்டாவது விமான நிலையம்&amp;hellip; செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் முக்கிய தேர்வாகிறதா?&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர், தமிழக அரசின் முதன்மையான தேர்வாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு இந்த இடம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;8.தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்&amp;hellip; விரிவாக்கம் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் இன்று தொடங்க இருந்த நிலையில், முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; லண்டனில் இருப்பதால் செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் இடைத்தேர்தல் காரணமாக அமலில் உள்ள நடத்தை விதிகளுக்கு ஏற்ப தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;9.இந்தியாவின் ஏற்றுமதி 26% உயர்வு&amp;hellip; அமெரிக்காவுக்கான ஏற்றுமதியிலும் பெரிய முன்னேற்றம்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 26.12% உயர்ந்து 43.81 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டும் 21%-க்கும் அதிகமாக உயர்ந்து 8.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;10.இந்திய கடற்படை கப்பல்&amp;ndash;பாகிஸ்தான் கப்பல் மோதல்&amp;hellip; தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வடக்கு அரபிக்கடலில் இந்திய கடற்படை போர்க்கப்பலும் பாகிஸ்தான் கடற்படை கப்பலான PNS Hunain-ம் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் தூதரக பொறுப்பதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய கப்பலுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும், பாகிஸ்தான் கப்பல் சேதமடைந்து துறைமுகத்துக்குத் திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாட்டு கூடுதல் அப்டேட்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் போட்டி இன்று தொடங்குகிறது. ஆசிய விளையாட்டில் முதல் முறையாக இடம்பெறும் Teqball போட்டியில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். அதே நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணி தாய்லாந்தை 3&amp;ndash;1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/ac0045eece28612a99b71d4f523a0bde17883193991851319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உங்கள் பிஎஃப் பணம் சரியாகச் சேர்கிறதா? EPFO-வில் உடனே சரிபார்க்கும் வழி! விபரம் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/india/is-your-pf-money-being-credited-correctly-here-is-how-to-check-immediately-with-the-epfo-274740</link><comments>https://tamil.abplive.com/news/india/is-your-pf-money-being-credited-correctly-here-is-how-to-check-immediately-with-the-epfo-274740#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 21:29:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/is-your-pf-money-being-credited-correctly-here-is-how-to-check-immediately-with-the-epfo-274740</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படும் PF தொகை தான் முதன்மையான சேமிப்பாக இருக்கிறது. நீண்ட காலமாகவே தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கு தங்களுடைய சம்பளம் அதிகரிக்கவில்லை. ஆனால் விலைவாசி அதிகரிக்கிறதே என்ற கவலை இருந்து வருகிறது. இருந்தாலும் நிறுவனங்களே பணத்தை பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை சம்பளமாக போடுவதால் அவர்களுக்கே தெரியாமல் குறிப்பிட்ட தொகை சேமிப்பாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/98fb5f7174af7374afdb2909083aabf01789574310266193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு வருவதற்கு முன்னரே சம்பள தொகையிலிருந்து PF பணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும். ஆனால் இந்தத் தொகை உண்மையிலேயே உங்களுடைய PF அக்கவுண்டுக்கு செல்கிறதா? என்பதை நீங்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். பிஎஃப் தொகையை பொருத்தவரையில் ஒரு ஊழியர் பணி புரியும் நிறுவனம் மற்றும் அவருடைய சார்பிலும் பங்களிப்பு செய்யப்பட வேண்டும். இந்த தொகை ஒரு மாதம் முடிந்த 15 நாட்களுக்குள் ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் ஈபிஎப்ஓ போர்டல் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.EPFO இணையதளத்தில் ஈபிஎஃப் pass book இருக்கும். உங்கள் பங்களிப்பு என்ன?, உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு என்ன? என அனைத்து விவரங்களையும் வெறும் UAN நம்பரை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதில் உங்கள் PF பங்களிப்பு குறித்து மாத வாரியான டேட்டா இருக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் ஏதாவது ஒரு மாதத்தில் உங்கள் PF தொகை செலுத்தப்படவில்லை என்றாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக ஜூலை மாத சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்றால் அந்த மாதத்திற்கான பங்களிப்பு உங்கள் நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கலாம். முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறந்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய யுஏஎன் விவரங்களை பயன்படுத்தி உள்நுழையுங்கள்.&amp;nbsp;பின்னர் மெம்பர் பாஸ்புக் சர்வீசஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களுடைய மெம்பர் ஐடியை வழங்கி PF பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/e789ef5d180935c9ce9c9660769cfe111789574244020193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;EPFO அமைப்பு &quot;பாஸ்புக் லைட்&quot; என்ற வசதியையும் வழங்குகிறது. இதற்கு நீங்கள் உமாங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் யார் வேண்டுமானாலும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யலாம். PF பணம் பிடித்தம் செய்யப்பட்டவுடன் உங்கள் அக்கவுண்டுக்கு வராது என்பதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கென குறிப்பிட்ட காலம் இருக்கிறது. அதாவது பணம் பிடித்தம் செய்யப்பட்டதிலிருந்து 15 நாட்கள். அதன் பிறகு உங்கள் அக்கவுண்டுக்கு பணம் சென்றடையும். அப்போதும் பணம் ஏறவில்லை என்றால் முதலில் HR-ஐ அணுகி பேச வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் தீர்வு கிடைத்தால் சரி. அப்படி இல்லை என்றால் பாதிக்கப்படும் உறுப்பினர்கள் கிரிவன்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இல்லயென்றால் PF அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி சமர்ப்பிக்கலாம். அதற்கு நீங்கள் எழுதும் கடிதத்துடன் பே ஸ்லிப் மற்றும் EPF அறிக்கை போன்ற எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/e789ef5d180935c9ce9c9660769cfe111789574244020193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[IRCTC-யில் புதிய சாதனை: ஒரே நாளில் 20 லட்சம் ரயில் டிக்கெட் முன்பதிவு! முழு விபரம்..]]></title><link>https://tamil.abplive.com/news/india/new-record-for-irctc-20-lakh-train-tickets-booked-in-a-single-day-full-details-274741</link><comments>https://tamil.abplive.com/news/india/new-record-for-irctc-20-lakh-train-tickets-booked-in-a-single-day-full-details-274741#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 21:21:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/new-record-for-irctc-20-lakh-train-tickets-booked-in-a-single-day-full-details-274741</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பண்டிகைக் காலத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்திய ரயில்வே உணவுக் கழகம் மற்றும் சுற்றுலாப் பிரிவு (IRCTC) செப்டம்பர் 7ம் தேதி ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இதுவரை இல்லாத சாதனையைப் படைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/90cb1d06d3b12ab1576d9c2437d366c81789573888285193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தின்போது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பதிவான 18,40,203 டிக்கெட்டு முன்பதிவுகளை முறியடித்து, செப்டம்பர் 7 ஆம் தேதி 20,06,353 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. தற்போது முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளிலும் சுமார் 89% இணையதளம் வாயிலாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து அந்த பிரிவின் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் பயனா் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ரயில் பயணத்துக்காக முன்பதிவு செய்தவா்களில் 89 சதவிகிதம் போ் இணையதளம் வாயிலாகவே முன்பதிவு செய்து டிக்கெட்டுகளைப் பெற்றுள்ளனா்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதனடிப்படையில் பண்டிகைக் கால முன்பதிவாக செப். 7 ஆம் தேதி திங்கள்கிழமை ஒரே நாளில் 20.06 லட்சம் போ் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றது சாதனையாகும். கடந்த ஆண்டு தீபாவளி முன்பதிவாக 18,40,203 போ் இணையதள டிக்கெட் பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் 20,06,353 போ் டிக்கெட் பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. செப்டம்பர் 8 இல் 19,50,699 பேர் டிக்கெட் பெற்ற நிலையில் இரண்டு நாள்களில் மொத்தம் 39.57 லட்சம் பேர் முன்பதிவு டிக்கெட் பெற்றுள்ளனர். இந்த சாதனை பண்டிகைகளுக்கான பயணத் தேவையின் உச்சத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில்வேயின் முன்பதிவு காலம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைக்கப்பட்டதால் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்கு முந்துகின்றனர். தற்போது நாள்தோறும் முன்பதிவில் மட்டும் காலை 8 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் 85 சதவிகிதம் போ் இணையதள முன்பதிவில் டிக்கெட்டை பெறுகின்றனா். முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அதிகமானோா் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுவிடுகின்றனா். இது ஒரே நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச தேவையைக் காட்டுவதாக IRCTC அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/8615fc923888ba7d95242e613bde4ce91789573862986193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகப்படியானோா் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் பிரத்யேக செயலியே காரணமாகும். பிரத்யேக செயலியின் ஒட்டுமொத்த திறன் அதன் முந்தைய அளவை விட சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அசாதாரணமான அதிக ஒரே நேரத் தேவை இருந்தபோதிலும், பிரத்யேக செயலி தளத்தில் எந்தக் கோளாறும் அல்லது செயலிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதே நேரத்தில் தவறான பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையின் விளைவாக 3.04 மில்லியன் பயனர் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், 63.3 மில்லியன் ஐடிகள் மறு சரிபார்ப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும், உண்மையான பயனர்களை உறுதி செய்வதற்காக, 16,041 சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் டொமைன்களும் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ரயில் டிக்கெட் பதிவெண் (பிஎன்ஆா்) அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸாா் 592 புகாா்களைப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் என குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/8615fc923888ba7d95242e613bde4ce91789573862986193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: புரட்டாசி மாத தரிசனத்திற்கு பக்தர்கள் தயார்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/sabarimala-ayyappan-temple-doors-open-devotees-ready-for-purattasi-month-darshan-274747</link><comments>https://tamil.abplive.com/news/india/sabarimala-ayyappan-temple-doors-open-devotees-ready-for-purattasi-month-darshan-274747#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 21:13:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/sabarimala-ayyappan-temple-doors-open-devotees-ready-for-purattasi-month-darshan-274747</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் &amp;nbsp;5 &amp;nbsp;நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/86e0cb8fa79048536873967a23d093431789573400295193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், கடந்த மாதம் ஓணம் பண்டிகை சிறப்பு வழிப்பாட்டிற்காக&amp;nbsp; 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது.&lt;br /&gt;சபரிமலை கோயில் நடை திறப்பு இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக &lt;a title=&quot;சபரிமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/sabarimala&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;சபரிமலை&lt;/a&gt; ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் புரட்டாசி மாத பூஜைகள் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரும் 21-ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடத்துகிறார். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/eef9ec34182ff84afc226333faf15def1789573372564193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?]]></title><link>https://tamil.abplive.com/news/india/union-cabinet-approval-to-change-provident-fund-rule-salary-limit-raised-from-15000-to-25000-rupees-274714</link><comments>https://tamil.abplive.com/news/india/union-cabinet-approval-to-change-provident-fund-rule-salary-limit-raised-from-15000-to-25000-rupees-274714#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 16:30:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/union-cabinet-approval-to-change-provident-fund-rule-salary-limit-raised-from-15000-to-25000-rupees-274714</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள தொழில்துறை ஊழியர்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இபிஎஃப் பங்களிப்புகளுக்கான சம்பள உச்சவரம்பை அரசு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மத்திய அமைச்சர் கூறியது என்ன.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இது குறித்து தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், &quot;தற்போதைய பிஎஃப் (வருங்கால வைப்பு நிதி) விதிகளின்படி, சம்பள வரம்பு 15,000 ரூபாயாக இருந்தது. இந்த வரம்பு 2014-ல் நிர்ணயிக்கப்பட்டு, செப்டம்பர் 2014-ல் திருத்தப்பட்டது. தற்போது, ​​நாங்கள் அதை மாதத்திற்கு 25,000 ரூபாயாக உயர்த்தியுள்ளோம்,&quot; என்று கூறினார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மேலும், &quot;பிஎஃப் பிடித்தங்களுக்கான புதிய வரம்பு மாதத்திற்கு 25,000 ரூபாயாக இருக்கும். இதனால், 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலான சம்பள வரம்பில் உள்ள சுமார் 51 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்கள் இனி புதிய பிஎஃப் விதிகளின் கீழ் வருவார்கள். இந்திய அரசுக்கு ஏற்படும் மதிப்பிடப்பட்ட செலவு ஆண்டுக்கு சுமார் 11,339 கோடி ரூபாயாக இருக்கும்,&quot; என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&amp;ldquo;நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்&amp;ldquo;&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;div class=&quot;mid-taboola&quot;&gt;
&lt;div id=&quot;taboola-mid-article-personalisation-3189729&quot; class=&quot;trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget&quot;&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;தொடர்ந்து, &quot;இது நீண்டகாலமாக இருந்துவந்த கோரிக்கையாகும், பிரதமர் &lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நரேந்திர மோடி&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt; செப்டம்பர் 16-ம் தேதி அன்று இதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த முன்மொழிவு பல்வேறு அமைச்சகங்களிடையே விரிவாக விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செலவின நிதிக் குழு ஜூன் 16, 2026 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில் இதை பரிந்துரைத்தது. ஐந்து ஆண்டுகளில் இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 56,696 கோடி ரூபாய் ஆகும்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;h2 class=&quot;trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget&quot;&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;/div&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இது மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கான அணுகலை வழங்கும். ஊதிய உச்சவரம்பு அதிகரிப்பால், ஊழியர்கள் மூன்று முக்கியப் பலன்களைப் பெறுவார்கள். முதலாவதாக, அவர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியத்தின் (EPF) கீழ் வழக்கமான சேமிப்பிலிருந்து பயனடைவார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இரண்டாவதாக, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) மூலம் ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியப் பாதுகாப்பைப் பெறுவார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மூன்றாவதாக, ஊழியர்களின் வைப்புத்தொகை சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI) கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பும் கிடைக்கும். மேலும், ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் மற்றும் சட்டப்பூர்வ பங்களிப்பு முறை ஆகியவை தற்போதைய ஊதிய நிலைகளுக்கு ஏற்ப மாறும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;முறைசார் வேலைவாய்ப்பு என்பது, ஊதியத்துடன் மட்டும் நின்றுவிடாமல், உறுதியான மற்றும் எளிதில் மாற்றிக்கொள்ளக்கூடிய சமூகப் பாதுகாப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. இந்த புதிய அமைப்பு, இந்த கொள்கையை வலுப்படுத்துகிறது. இந்த முடிவு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், முதலாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கும், திறமையான ஊழியர்களை தக்கவைக்க உதவும். மேலும், நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு பணியாளர் படையை உருவாக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/if-you-want-long-thick-hair-here-are-8-best-home-remedies-hair-growth-tips-274707&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/10/457164c63907f4e175f0c844b30d7c76178903546111478_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி! RailOne சீசன் டிக்கெட் விதிகள் மாற்றம்! 5 பேருக்கு புக்கிங்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/great-news-for-train-passengers-changes-to-railone-season-ticket-rules-booking-for-5-people-274678</link><comments>https://tamil.abplive.com/news/india/great-news-for-train-passengers-changes-to-railone-season-ticket-rules-booking-for-5-people-274678#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 10:35:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/great-news-for-train-passengers-changes-to-railone-season-ticket-rules-booking-for-5-people-274678</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. RailOne செயலியில் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட பயனர் ஒருவர், தனக்கு மட்டுமிம்மாலம் கூடுதலாக 5 பயணிகள் வரையிலும் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். உங்கள் குடும்பத்தினர் அல்லது பிற பயணிகளுக்காக டிக்கெட் முன்பதிவு செய்யத் திட்டமிட்டிருந்தால் வயது வரம்பு, டிக்கெட் செல்லுபடியாகும் காலம் மற்றும் QR குறியீடுகள் தொடர்பான இந்த விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். இந்த புதிய வசதி செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதிலிருந்து பெரும் நிவாரணம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/3c3e0caf7e80b3e749cd70da111d373e1789535065314193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில் பயணிகளுக்காக RailOne செயலியின் சீசன் டிக்கெட் முன்பதிவு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர் ஒருவர் தனக்கும், கூடுதலாக ஐந்து பயணிகள் வரையிலும் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது குடும்பத்தினருக்கோ அல்லது குழுவாகப் பயணிப்பவர்களுக்கோ டிக்கெட் ஏற்பாடு செய்வதை எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.நீங்கள் உங்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், உங்கள் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். மேலும் அந்த டிக்கெட் முன்பதிவு செய்த நாளிலிருந்தே செல்லுபடியாகும். அதே சமயம், மற்றொரு பயணியருக்காக நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் அந்தப் பயணியின் குறைந்தபட்ச வயது 5 ஆக இருக்க வேண்டும். மேலும் அந்த டிக்கெட் அடுத்த நாளிலிருந்து செல்லுபடியாகும். புதிய விதிமுறையின்படி, பதிவுசெய்யப்பட்ட பயனர் ஒருவர் தனக்கு மட்டுமல்லாமல், அதிகபட்சம் 5 பயணிகளுக்குச் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/3eba1ac98f0d77cbc3405c714edeb7fb1789535020954193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரயில் பயணிகள் செல்லுபடியாகும் சீசன் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் தெளிவான QR குறியீடு (மொபைலில் அல்லது அச்சிடப்பட்ட வடிவில்) ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தெளிவான QR குறியீடு மற்றும் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட இரண்டு நிலையங்களுக்கு இடையே தினமும் அல்லது அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்குச் சீசன் டிக்கெட்டுகள் மிகவும் சிக்கனமானவை ஆகும். இது பயணிகளை அந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே பலமுறை பயணம் செய்ய அனுமதிக்கிறது. பொதுவாக, இந்த வசதி இரண்டாம் வகுப்புப் பயணத்திற்கு (second class) கிடைக்கிறது. இது தினமும் பயணம் செய்பவர்களின் செலவை பெருமளவு குறைக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பண்டிகைக் காலங்களில் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு டிக்கெட் புக்கிங் செய்வது சவாலானதாக இருக்கலாம். இந்நிலையில், RailOne செயலியின் இந்த அம்சம் பயணிகளுடன் செல்லும் மற்றவர்களுக்கும் ஒரே இடத்திலிருந்து சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் டிக்கெட் மற்றும் ரயில்வே தொடர்பான இதுபோன்ற விதிமுறைகள் மற்றும் அப்டேட்கள் குறித்து ரயில் பயணிகள் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் வீண் சிரமங்களைத் தவிர்ப்பதோடு ரயில்வே வசதிகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/3eba1ac98f0d77cbc3405c714edeb7fb1789535020954193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[அக்டோபர் 15 முதல் UPI-ல் புதிய மாற்றம்: MDR கட்டணம் எவ்வளவு? முழு விபரம் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/india/new-change-to-upi-starting-october-15-how-much-is-the-mdr-charge-here-are-the-full-details-274675</link><comments>https://tamil.abplive.com/news/india/new-change-to-upi-starting-october-15-how-much-is-the-mdr-charge-here-are-the-full-details-274675#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 10:17:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/new-change-to-upi-starting-october-15-how-much-is-the-mdr-charge-here-are-the-full-details-274675</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;UPI&amp;nbsp; PAYMENT சேவை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வேளையில், இலவசமாக இருக்கும் இச்சேவைக்கு வருகிற அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு அதிகமாக நடைபெறும் வணிகப் பண பரிமாற்றத்திற்கு 0.4% MDR கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதாவது 10000 ரூபாய் ஒரு ஷாப்பிங் மாலில் செலவு செய்தால் இதற்கு 40 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டக 10000 ரூபாய்க்கு UPI மூலம் பணம் செலுத்தினால், MDR கட்டணமாக 40 ரூபாய் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/58692c77ef7621f84db994d6549084361789533732793193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த 40 ரூபாயில் 16 ரூபாய் அதாவது 40% தொகை ஒருவர் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் Issuing Bank-க்கு செல்லும். அடுத்தாக 12 ரூபாய் அதாவது 40 ரூபாய் கட்டணத்தில் 30% தொகை கடைக்காரர் கணக்கு வைத்திருக்கும் Acquiring Bank-க்கு செல்லும்.மீதமுள்ள தொகையில் 8 ரூபாய் அதாவது 20% தொகை UPI செயலியை இயக்கும் போன்பே, கூகுள்பே, பேடிஎம், BHIM செயலிக்கு செல்லும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இறுதியாக 40 ரூபாய் MDR கட்டணத்தில் மீதமுள்ள 4 ரூபாய் அதாவது 10% தொகை, அந்த UPI செயலியுடன் இணைந்து செயல்படும் Payer PSP Bank-க்கு வழங்கப்படும். Payer PSP Bank என்பது போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் ஆப்-களுக்கு உதவி செய்யும் வங்கிகளாகும். UPI என்பது நாம் ஸ்மார்ட்போனில் பாஸ்வார்டு போட்டால் உடனே சென்றுவிடும். ஆனால் இந்த பேமெண்ட் ப்ராசஸ் செய்ய ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு நிறுவன்ம பங்கு வகிக்கிறது. போன்பே, கூகுள்பே, பேடிஎம் செயலிகள் வங்கிகள் அல்ல வெறும் பேமெண்ட் தளம் என்பதால் பணத்தை அனுப்புவோருக்கு பெருவோருக்கு மத்தியில் நடக்கும் செயல்பாட்டை முடிக்க ஒரு வங்கியின் உதவி இந்த நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/438b3e9222b0e8f5b34dd343c5b895fb1789533751493193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த MDR கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க கூடாது என NPCI அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்தாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லை.காரணம், எம்டிஆர் கட்டணம் மூலம் வரும் இந்த கூடுதல் செலவுகளை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது அல்லது கடைக்காரர்கள் பழையப்படி யூபிஐ பேமெண்ட்களை வாங்குவதை தவிர்த்துவிட்டு மீண்டும் ரொக்கமாக பணத்தை செலுத்த வாடிக்கையாளர்களிடம் கோரலாம். இது இரண்டுமே யூபிஐ வளர்ச்சிக்கு பாதிப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எப்படி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்யும் போது சில கடைக்காரர்கள் கூடுதல் கட்டணத்தை கேட்கிறார்களோ அதேபோல் எம்டிஆர் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் இருந்த வசூலிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.மேலும் இந்த புதிய MDR விதிகள் படி சிறு வணிகர்களுக்கு முக்கியமான விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு வணிகர் மாதத்திற்கு UPI மூலம் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பெற்றால், அவருக்கு MDR கட்டணம் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மாதாந்திர வசூல் 1 லட்சம் லிமிட்டை தாண்டும் போது MDR கட்டணம் வரும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/81ca8cd2c9a6e93d6eadff095d69c4991789533711468193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[Kudremukh: குதிரேமுக்கில் பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி! மலை முழுவதும் கண்கவர் காட்சிகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/kudremukh-blue-kurinji-flowers-bloom-a-stunning-natural-attraction-in-karnataka-tnn-274663</link><comments>https://tamil.abplive.com/news/india/kudremukh-blue-kurinji-flowers-bloom-a-stunning-natural-attraction-in-karnataka-tnn-274663#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 08:22:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/kudremukh-blue-kurinji-flowers-bloom-a-stunning-natural-attraction-in-karnataka-tnn-274663</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;Kudremukh Blue Kurinji Bloom:&lt;/strong&gt;&lt;/span&gt; கர்நாடக மாநிலத்தின் இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதிகளில் ஒன்றான குதிரேமுக், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் பசுமை போர்த்திய மலைகள், பரந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் அருவிகள் என குதிரேமுக் பகுதி இயற்கை எழில் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நீல நிறத்தில் காட்சியளிக்கும் குறிஞ்சி மலர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது குதிரேமுக் மலைப்பகுதியில் அரிய வகை நீலக் குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே பூத்துக் குலுங்கி வருகின்றன. பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளுக்கு மத்தியில் நீலம் மற்றும் ஊதா நிறங்களில் மலர்ந்துள்ள குறிஞ்சிப் பூக்கள், மலைப்பகுதியின் அழகை மேலும் அதிகரித்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு குதிரேமுக்கில் நீலக் குறிஞ்சி மலர்கள் அதிகளவில் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சற்று குறைந்த அளவில் மலர்கள் தென்பட்டாலும், இயற்கை ஆர்வலர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அவை வெகுவாக கவர்ந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக் வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்களின் அழகை ரசிப்பதுடன், அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பசுமையான மலைப்புல்வெளிகளுக்கு இடையே காணப்படும் நீலக் குறிஞ்சி மலர்கள், இயற்கை புகைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த காட்சியை வழங்குகின்றன. இதனுடன், தேசிய பூங்கா எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள டிரெக்கிங் பாதைகளில் பயணம் செய்து, மலைகள், காடுகள், புல்வெளிகள் மற்றும் அருவிகளின் இயற்கை அழகையும் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெங்களூருவில் இருந்து 323 கி.மீ. தொலைவில் குதிரேமுக்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக் கர்நாடகாவின் முக்கியமான இயற்கை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெங்களூருவில் இருந்து சுமார் 323 கி.மீ. தொலைவிலும், சிக்கமகளூரில் இருந்து சுமார் 106 கி.மீ. தொலைவிலும் இப்பகுதி அமைந்துள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து குதிரேமுக் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளுக்குச் செல்ல பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதனால் இயற்கையை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலர்களை பறிக்க வேண்டாம்... அதிகாரிகள் அறிவுறுத்தல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக்கில் பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலர்கள் இயற்கையின் அபூர்வமான பரிசாக கருதப்படுவதால், அவற்றை சுற்றுலாப் பயணிகள் பறித்து சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மலர்களை ரசித்து புகைப்படம் எடுக்கலாம் என்றாலும், அவற்றை சேதப்படுத்தாமல் இருப்பதுடன், சுற்றுப்புறங்களில் குப்பைகளை வீசாமல் தூய்மையைப் பாதுகாப்பதும் அவசியம் என சுற்றுலாத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலமே எதிர்கால தலைமுறையினரும் இதுபோன்ற அரிய காட்சிகளை ரசிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக்கை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குதிரேமுக் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியை மட்டும் சுற்றிப் பார்க்காமல், அருகில் அமைந்துள்ள பல்வேறு இயற்கை மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கும் செல்லலாம். களசா, ஹொரநாடு, சிருங்கேரி உள்ளிட்ட இடங்கள் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. இதேபோல் தூனுமன்குந்தி நீர்வீழ்ச்சி, கடம்பி நீர்வீழ்ச்சி, சிரிமனே நீர்வீழ்ச்சி மற்றும் லக்கியா அணை உள்ளிட்ட இடங்களும் இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மலைப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படும் நிலையில், ஆங்காங்கே பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலர்கள் குதிரேமுக்கின் இயற்கை அழகுக்கு மேலும் வண்ணம் சேர்த்துள்ளன. இதனால் தற்போது குதிரேமுக் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பசுமையான மலைக்காட்சிகளுடன் நீலக் குறிஞ்சியின் அழகையும் ஒருசேர ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/9951dc3d67e1e544f072981a5d9a216617895271529631319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[EPFO டிஜிட்டல் புரட்சி: பிஎஃப் தகவல்கள் இனி வாட்ஸ்அப்பில்! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..]]></title><link>https://tamil.abplive.com/news/india/epfo-digital-revolution-pf-details-now-on-whatsapp-here-s-what-you-need-to-know-274623</link><comments>https://tamil.abplive.com/news/india/epfo-digital-revolution-pf-details-now-on-whatsapp-here-s-what-you-need-to-know-274623#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 18:54:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/epfo-digital-revolution-pf-details-now-on-whatsapp-here-s-what-you-need-to-know-274623</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO லட்சக்கணக்கான உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி பிஎஃப் தகவல்களையும் சேவைகளையும் நாம் ஒரு கிளிக்கிலேயே பெற்று கொள்ள முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/8f6d3a0bed7375e796f5a520f01271cc1789478616426193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிஎஃப் சந்தாதாரர்களுக்காக ஈபிஎஃப்ஓ அமைப்பு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் தொடர்பான தகவல்களை நேரடியாக வாட்ஸ்அப் மூலமாகவே பெற்று கொள்ள முடியும். ஈபிஎஃப்ஓ அமைப்பு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கப்பட்டதை அறிவித்துள்ளது. எனவே பயனர்கள் எந்தவொரு சிக்கலான வலைத்தளங்களுக்கோ அல்லது ஆப்ஸ்களுக்கோ செல்லாமல், தங்களுக்கு தேவையான முக்கியமான பிஎஃப் அப்டேட்டுகள் மற்றும் பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் வாட்ஸ்அப்பில் பெற முடியும். பிஎஃப் சந்தாதாரர்கள் இந்த வாட்ஸ் அப் சேனலை லைக் செய்து வைத்து கொண்டால் போதும் அனைத்து பிஎஃப் அப்டேட்களும் உங்களுக்கு வாட்ஸ் அப்பிலேயே தெரிந்து விடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/6862d654bb2304e98ec4e09ac95222921789478630580193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வாட்ஸ்அப் சேனல் வெறும் அறிவிப்புகளை மட்டும் வழங்குவதோடு நிற்காமல், உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பயனுள்ள கல்விசார் இணைப்புகளையும் யூடியூப் வீடியோக்களையும் பகிரும். இதில் குறிப்பாக பிஎஃப் முன்பணம் (அட்வான்ஸ்) எடுக்கும் முறை குறித்த வழிகாட்டுதல்கள், வேலை மாறிய பிறகு மீண்டும் பணியில் சேரும்போது ஈபிஎஃப் பங்களிப்பை தொடர்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோக்களும் அடங்கும். ஈபிஎஃப்ஓ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் வாட்ஸ்அப் சேனலுக்கான நேரடி இணைப்பையும் கியூஆர் கோடையும் பகிர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே நீங்கள் அந்த அதிகாரப்பூர்வ இணைப்பை (https://www.whatsapp.com/channel/0029Vb6kmH48Pgs8ftd6Kw3Y) கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது கியூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ ஈபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் எளிதாக இணைந்து கொள்ளலாம். ஈபிஎஃப்ஓ-வின் உண்மையான அதிகாரப்பூர்வ சேனலில் மட்டுமே இணைய வேண்டும் என்றும், பிஎஃப் சேவைகளை வழங்குவதாக கூறி ஏமாற்றும் போலி கணக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/06b17ec8d404add2271c55a4d004c1741789478682677193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வாட்ஸ்அப் சேனல், ஈபிஎஃப்ஓ தனது சேவைகளை மேலும் எளிமையாக்க மேற்கொண்டு வரும் டிஜிட்டல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் பெருமளவில் மாற்றப்பட்டு டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிஎஃப் முன் பணம் எடுக்க ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்வது, யுஏஎன் நம்பர் ஆக்டிவேட் செய்வது என பெரும்பாலான பிஎஃப் சேவைகளை நாம் டிஜிட்டல் முறையிலேயே பெற முடிகிறது.கூடிய விரைவில் ஈபிஎஃப்ஓ 3.0 அப்டேட் மூலம் நம் வங்கி கணக்கை டிஜிட்டல் முறையில் எப்படி கையாளுகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கையும் கையாளும் முறை வர உள்ளது. இதன்படி பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் யுபிஐ மற்றும் ஏடிஎம் வாயிலாக எடுத்து பயன்படுத்தலாம். விரைவில் இது நடைமுறைக்கு வர உள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/bf7be0fcc667dc85923f5d2252aee6f41789478457481193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[UPI கட்டணம் குறித்து பரவும் தகவல் உண்மையா? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்! விபம் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/india/is-the-information-circulating-about-upi-charges-true-the-central-government-s-official-clarification-here-are-the-details-274622</link><comments>https://tamil.abplive.com/news/india/is-the-information-circulating-about-upi-charges-true-the-central-government-s-official-clarification-here-are-the-details-274622#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 18:46:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/is-the-information-circulating-about-upi-charges-true-the-central-government-s-official-clarification-here-are-the-details-274622</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக UPI முறையில் G PAY, PHONE PE, AMAZON PE, PAYTM, PM UPI போன்ற செயலிகள் வாயிலாக தான் நாம் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளையே மேற்கொள்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/a4f43db5aa2cfc089ee79e072c85b6c21789478119514193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;UPI பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது பராமரிப்பது ஆகியவற்றுக்கு செலவாகிறது. இந்த செலவினை தற்போதைக்கு அரசு தான் ஏற்கிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் Payment and Settlement Systems Act சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதனை அடுத்து UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படும் என தகவல்கள் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், குழப்பங்களை தீர்க்கும் வகையிலும் மத்திய நிதியமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழ் வெளியீட்டின் படி, RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் 2,000 ரூபாய் வரை செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் ஆகியவை மின்னணு செலுத்துதல் முறைகள் (electronic modes of payment) என அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதாவது இரண்டு டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்துபவர்கள் அல்லது பெறுபவர்கள் மீது, எந்தவொரு வங்கியோ அல்லது வழங்குநரோ (system provider) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு கட்டணத்தையும் விதிக்க கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. யுபிஐ முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நுகர்வோர் அதாவது சாதாரண மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சட்ட திருத்தங்களால் மக்கள் எந்தவொரு பரிவர்த்தனை கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு இந்தியரும் தொடர்ந்து எந்தவொரு கட்டணமுமின்றி உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்யலாம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் (P2P - Person to Person) தொடர்ந்து முழுமையாக இலவசமாகவே தொடரும். வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாகவே இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/a6c081542fbbcd0fa12b2b623fbe7b421789478139947193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எதிர்காலத்தில் வர்த்தகர்களுக்கான கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மிக குறைந்த அளவிலான MDR - Merchant Discount Rate கொண்டுவரப்படலாம் என அரசு முன்பே தெரிவித்திருந்தது. அப்படி ஒருவேளை கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது சாதாரண நுகர்வோரை பாதிக்காது. மாறாக, குறிப்பிட்ட வரம்பை தாண்டிய சில வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, வழக்கமான டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கட்டணங்களை விட மிக குறைந்தளவில் பொருந்தும் என சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதாவது எம்டிஆர் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அது 2000 ரூபாய்க்கு மேல் உள்ள கட்டணங்களுக்கே பொருந்தும், மேலும் சாதாரண மக்களான நமக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை மாறாக குறிப்பிட்ட வணிகங்களில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு தான் குறைந்த சதவீதத்தில் கட்டணம் பொருந்தும். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் இல்லை நடைமுறைக்கு வரவும் இல்லை.எனவே ரூ.2,000 வரையிலான சிறிய தொகையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தொடரும், அப்படியே எம்டிஆர் வந்தாலும் சாதாரண மக்களாகிய நமக்கு அதில் எந்த ஒரு கட்டணமும் இல்லை வழக்கம் போல இலவசமாகவே பயன்படுத்தலாம் என்பது தான் அரசின் இந்த அறிவிப்பின் நோக்கமாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/bd6405e52398457032718243fa85ed341789478097792193_original.JPG" width="220"/></item></channel></rss>