<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>india</title><atom:link href="https://tamil.abplive.com/india/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 09:45:33 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/india/discover-the-rare-4-celestial-events-happening-on-august-12-including-a-6-planet-parade-total-solar-eclipse-and-perseid-meteor-shower-tnn-270882</link><comments>https://tamil.abplive.com/news/india/discover-the-rare-4-celestial-events-happening-on-august-12-including-a-6-planet-parade-total-solar-eclipse-and-perseid-meteor-shower-tnn-270882#respond</comments><pubDate>Wed, 12 Aug 2026 09:31:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/discover-the-rare-4-celestial-events-happening-on-august-12-including-a-6-planet-parade-total-solar-eclipse-and-perseid-meteor-shower-tnn-270882</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கும் இயற்கை விரும்பிகளுக்கும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக அமையவுள்ளது. ஏனெனில், 24 மணி நேர கால இடைவெளியில் நான்கு வெவ்வேறான அரிதான வானியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழவுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்தாலும், இந்த நான்கு நிகழ்வுகளும் ஒரே நாளில் இணைந்து வருவது வானியல் வரலாற்றில் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விடியற்காலையில் ஆறு கோள்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகஸ்ட் 12 அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக, விண்வெளியில் ஒரு அபூர்வ காட்சி அரங்கேறவுள்ளது. வியாழன், புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் வானில் கிழக்கு முதல் மேற்கு வரை ஒரே நேர்கோட்டில் வரிசையாகக் காட்சியளிக்கும் கோள்களின் அணிவகுப்பு நிகழவுள்ளது. இந்த வரிசையில் செவ்வாய் மற்றும் சனி கோள்களைப் பொதுமக்கள் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும் என்றும், தொலைவில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களைத் தொலைநோக்கி மூலம் தெளிவாகக் காண முடியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பகலை இரவாக்கும் பூரண சூரிய கிரகணம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று பகல் நேரத்தில், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சரியாகக் கடந்து செல்லும் பூர்ண சூரிய கிரகணம் நிகழவுள்ளது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பகல் நேரமே இருண்டு இரவாக மாறும் அளவுக்கு இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இருப்பினும், இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 9:45 மணி முதல் அதிகாலை 2:15 மணி வரை நிகழ்வதாலும், அக்காலத்தில் சூரியன் நமது பகுதி அடிவானத்திற்கு கீழே இருப்பதாலும் இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பெர்சீட் விண்கல் மழைக்கு வழிவகுக்கும் இருண்ட அமாவாசை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூரிய கிரகணம் நிகழும் அதே நாளில் நிலவு தனது முழுமையான அமாவாசை கட்டத்தை எட்டுவதால், இரவு வானம் முற்றிலும் ஒளி இன்றி இருண்டு காணப்படும். இந்த இருண்ட சூழல், ஆண்டின் மிகச் சிறந்த விண்வெளி நிகழ்வான பெர்சீட் விண்கல் மழைக்கு மிகச் சிறந்த பின்னணியை அமைத்துக் கொடுக்கிறது. நிலவொளி தொந்தரவு இல்லாததால், ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரையிலான அதிகாலை வேளையில் மணிக்கு நூறு விண்கற்கள் வரை எரியும் அற்புதக் காட்சியை விண்வெளி ஆர்வலர்கள் மிகத் தெளிவாகக் கண்டு ரசிக்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/12/1e6d7b21bb4c5cf88f4ca3ec88ad61fa17865072704361319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு]]></title><link>https://tamil.abplive.com/news/india/independence-day-2026-celebrations-importance-for-gen-z-vande-mataram-know-details-270784</link><comments>https://tamil.abplive.com/news/india/independence-day-2026-celebrations-importance-for-gen-z-vande-mataram-know-details-270784#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 12:47:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/independence-day-2026-celebrations-importance-for-gen-z-vande-mataram-know-details-270784</guid><description><![CDATA[&lt;p&gt;2026 சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஜென்ஸி தலைமுறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;80வது சுதந்திர தினம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நம் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மொழி தொடங்கி உணவு வரை பல வகைகளில் நாம் பிரிந்திருந்தாலும் தேசிய ஒற்றுமை என வரும்போது நாம் அனைவரும் பாரத அன்னையின் குழந்தைகள் தான். இந்தியாவின் 80வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஜென்ஸி தலைமுறைக்கு முன்னுரிமை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;செங்கோட்டையில் மத்திய அரசின் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் அங்கு ஜென்ஸி தலைமுறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை செயலாளர் நரேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு கௌரவிக்கப்படும். முதல் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்படவுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;EPS Vs Sengottaiyan | Edappadi Palaniswami's Sarcasm! Sengottaiyan Gets Tense, DMK Members Applaud&quot; src=&quot;https://www.youtube.com/embed/RiBvk-t5WH0&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் &amp;nbsp; மெட்ரோ சேவைகள் இலவசமாக வழங்கப்படும். தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் மழை அங்கிகள் போன்ற வசதிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வந்தே மாதரம் &amp;nbsp;பாடலின் 150வது ஆண்டு விழாவை சிறப்பிக்கப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் காணும் பொருட்டு டெல்லி காவல்துறை &amp;nbsp;அபிஞ்ஞான் செயலி மூலம் முகத்தை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் கொண்டாட்டங்களுக்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி வரை டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை வ்திக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாறும் அரசியல் களம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக ஜென்ஸி தலைமுறையினரின் வாக்குகள் அமைந்தது. அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டம் வெடித்தது. இதில் இளம் வயதினர் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் அனைத்து கட்சியினரின் பார்வையும் ஜென்ஸி தலைமுறையை நோக்கி திரும்பியுள்ளது. அந்த வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-consuming-dates-with-ghee-270388&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/391a5c7453c58ba69400943dde3aed2817864325947961322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!]]></title><link>https://tamil.abplive.com/news/india/independence-day-2026-vande-mataram-will-be-sung-from-red-fort-reflecting-influence-of-genz-270709</link><comments>https://tamil.abplive.com/news/india/independence-day-2026-vande-mataram-will-be-sung-from-red-fort-reflecting-influence-of-genz-270709#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 19:17:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/independence-day-2026-vande-mataram-will-be-sung-from-red-fort-reflecting-influence-of-genz-270709</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் 80வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த முறை செங்கோட்டையில் &amp;nbsp;Gen-Z-யின் தாக்கம் மேலோங்கியிருக்கும். இதற்கான திட்டத்தை அரசு தயாரித்துவிட்டது. டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல் முறையாக செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து தேசியப் பாடல் 'வந்தே மாதரம்' பாடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் குமார் சிங் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது, 80வது சுதந்திர தின விழாவை பிரதமர் மோடி டெல்லியின் செங்கோட்டையிலிருந்து தலைமையேற்பார். அழைக்கப்பட்டவர்களுக்கு மெட்ரோ சேவைகள் காலை 4 மணி முதல் இலவசமாக கிடைக்கும். தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள், கிளாக்க்ரூம், குடிநீர், கழிப்பறை மற்றும் ரெயின்கோட் போன்ற வசதிகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/YVSp9c3PGLE?si=VKLhWB2Iku75JeMA&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காட்டப்படும். இதனுடன், பெண் தொழில்முனைவோர், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் பெயர் பெற்ற இளைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கப்படுவார்கள். சர்வதேச ஒலிம்பியாடில் பதக்கம் வென்ற பத்தொன்பது மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த விழா 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இது முதல் முறையாக செங்கோட்டையிலிருந்து பாடப்படும். இளைஞர்களின் பங்கேற்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதற்கிடையில், சுதந்திர தின விழாவுக்கு முன்னதாக செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் சந்தேகத்திற்குரிய மற்றும் தேடப்படும் நபர்களை அடையாளம் காண டெல்லி போலீஸ் 'அபிஜ்ஞான்' ஆப் மற்றும் &amp;lsquo;ஃபேஷியல் ரெகக்னிஷன் சிஸ்டம்&amp;rsquo; பயன்படுத்தும். ஆகஸ்ட் 15 விழாவுக்காக டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளின் சுமார் 15000 முதல் 20000 வீரர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ட்ரோன்-காத்தாடி பறக்கத் தடை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சுதந்திர தின விழாவுக்காக தலைநகரில் ஆகஸ்ட் 2 முதல் 16 வரை ட்ரோன்கள் உட்பட அனைத்து வகையான சிறிய வான்வழி தளங்களை பறக்க விடுவதற்கு டெல்லி போலீஸ் முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கு மேலாக, பாதுகாப்பு காரணங்களால் நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள செங்கோட்டை அருகே காத்தாடி பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. BNSS-இன் பிரிவு 163ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு ஆகஸ்ட் 16 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/cda92a5c2cff84a034d411644f0569de17863628895831368_original.png" width="220"/></item><item><title><![CDATA[Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!]]></title><link>https://tamil.abplive.com/news/india/khudiram-bose-history-in-tamil-sentenced-death-just-18-years-old-youngest-revolutionary-martyrs-270712</link><comments>https://tamil.abplive.com/news/india/khudiram-bose-history-in-tamil-sentenced-death-just-18-years-old-youngest-revolutionary-martyrs-270712#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 18:25:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/khudiram-bose-history-in-tamil-sentenced-death-just-18-years-old-youngest-revolutionary-martyrs-270712</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இந்திய சுதந்திரப் போராட்டம் என்றதும் நம் எல்லோருக்கும் மகாத்மா காந்தி, நேதாஜி, பகத் சிங் போன்றோரின் பெயர்கள்தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால், தனது 18ஆவது வயதிலேயே தாய்நாட்டிற்காகச் சிரித்துக்கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்ட இளம் புரட்சியாளர் குதிராம் போஸின் தியாகம் பலருக்கும் தெரிவதில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இளம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், 23 வயதில் உயிரிழந்த கதையை அறிந்திருப்போம். 18 வயதுச் சிறுவன் குதிராஸ் கதையை தெரிந்திருக்கிறோமா?&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;யார் இந்த குதிராஸ்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;1889ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் பிறந்தவர் குதிராம் போஸ். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவரை, மூத்த சகோதரிதான் வளர்த்தார். அக்கால நம்பிக்கையின்படி, தம்பியின் ஆயுளைக் காக்க சில கைப்பிடி தவிட்டை (வங்காள மொழியில் Khud) கொடுத்து அவரை அடையாளப்பூர்வமாக வாங்கினார் சகோதரி. அதனாலேயே அவருக்கு குதிராம் என்ற பெயர் வந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;உதிரத்தில் சுதந்திரத் தீ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அரவிந்தர், நிவேதிதா தேவி ஆகியோரின் முழக்கங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தனது ஒன்பதாம் வகுப்பிலேயே படிப்பைக் கைவிட்டு 'அனுசீலன் சமிதி' என்ற ரகசியப் புரட்சி அமைப்பில் இணைந்தார். 1905-ல் நடந்த வங்கப்பிரிவினை குதிராம் போஸின் ரத்தத்தில் சுதந்திரத் தீயை மூட்டியது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அக்காலகட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கடுமையாகத் தண்டித்து வந்த கொடூரமான ஆங்கிலேய மாஜிஸ்திரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல புரட்சியாளர்கள் திட்டமிட்டனர். இந்தப் பொறுப்பு குதிராம் போஸ் மற்றும் பிரபுல்லா சாகி ஆகிய இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;குதிரை வண்டியின் மீது வெடிகுண்டு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;1908-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி, பீகாரின் முசாபர்பூரில் கிங்ஸ்ஃபோர்டு வருவதாக நினைத்து ஒரு குதிரை வண்டியின் மீது குதிராம் போஸ் வெடிகுண்டு வீசினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வண்டியில் நீதிபதி இல்லை; மாறாக இரண்டு ஆங்கிலேயப் பெண்கள் உயிரிழந்தனர்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தப்பியோடிய இருவரில், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பிரபுல்லா சாகி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். வைனி ரயில் நிலையத்தில் குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில்தான் செய்ததை தைரியமாக ஒப்புக்கொண்ட அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;18 வயதில் வீர மரணம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி, பகவத் கீதையைக் கையில் ஏந்தியபடி, முகத்தில் புன்னகையுடனும், 'வந்தே மாதரம்' முழக்கத்துடனும் எந்தவித பயமும் இன்றி தூக்கு மேடை ஏறினார் குதிராம் போஸ். அப்போது அவருக்கு வயது 18 ஆண்டுகள், 8 மாதங்கள் மட்டுமே! &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்காகத் தூக்கிலிடப்பட்ட மிக இளம் வயது தியாகிகளில் ஒருவராக குதிராம் போஸின் பெயர் வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/mobile-phone-addiction-follow-these-5-easy-tips-270660&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/3b04964573e9223c0538fe7a3aa959c61786366421908332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/politics/bjp-government-may-be-going-slow-on-fcra-to-woo-dmk-ncp-sp-for-delimitation-stalin-modi-tn-politics-270649</link><comments>https://tamil.abplive.com/news/politics/bjp-government-may-be-going-slow-on-fcra-to-woo-dmk-ncp-sp-for-delimitation-stalin-modi-tn-politics-270649#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 09:01:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/bjp-government-may-be-going-slow-on-fcra-to-woo-dmk-ncp-sp-for-delimitation-stalin-modi-tn-politics-270649</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;BJP DMK FCRA Bill:&lt;/strong&gt; தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு பெறுவதற்காக FCRA மசோதாவை மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாமதமாகும் FCRA மசோதா..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அதன் கடைசி வாரத்தை எட்டியுள்ளது. ஆனால், கடந்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட FCRA மசோதா, திங்கட்கிழமை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக பல்வேறு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ள இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு உள்நோக்கத்துடன் மெத்தனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திமுக மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸின் ஆதரவு வேண்டி இருப்பதால், அவர்களை திருப்திபடுத்தும் விதமாக அந்த கட்சிகள் எதிர்க்கும் FCRA மசோதாவை தாமதப்படுத்தும் முடிவினை பாஜக எட்டியுள்ளதாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/when-to-change-break-fluid-auto-news-details-in-pics-270575&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விவாத அட்டவணையில் இல்லாத FCRA மசோதா..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 13 அன்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. மீதமுள்ள நான்கு நாட்களில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எடுத்துக்கொள்ள வேண்டுமானால், அதன் மீதான விவாதத்திற்கான கால அட்டவணையை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதன்படி, வரவிருக்கும் நிகழ்ச்சி நிரல் அம்சங்களை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற உள்ள மக்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என கூறப்படுகிறது. தற்போது வரை திங்கட்கிழமை நிகழ்ச்சி நிரலில் நான்கு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தாலும், வெளிநாட்டு பங்களிப்பு (FCRA) திருத்த மசோதா குறித்த எந்த விவரமும் அதில் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/DYHkC1M4uj4?si=3aDG86K8k_UP8Nf2&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சிறுபான்மையினர்கள் கடும் எதிர்ப்பு..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த மசோதா கடந்த மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக கிறிஸ்தவ அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக இதுவரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. வெளிநாட்டு நிதியுதவியைப் பெருமளவில் பெறும் கிறிஸ்தவக் குழுக்கள், சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தங்களின் தொண்டுப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தங்களின் FCRA உரிமம் திரும்பப் பெறப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாவிட்டாலோ அரசாங்கம் தங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய இது வழிவகுக்கும் என்றும் கவலை தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/cm-vijay-will-move-a-govt-resolution-in-assembly-today-making-it-mandatory-for-the-tamil-thai-vaazhthu-270643&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாஜகவிற்கான அரசியல் சிக்கல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தேவாலயங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது பரிசீலனைக்காக ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு திமுக தலைவர் மு.க. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; ஆதரவளித்து இருக்கிறார். இது பாஜகவுக்கு அரசியல் ரீதியாக மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திமுகவின் ஆதரவை நாடும் பாஜக..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2029 முதல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதுடன், தொகுதி மறுவரையறைப் பணிகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீண்டும் ஒருமுறை முயற்சி செய்வதற்கு முன்னர், திமுகவின் கவலைகளைத் தணித்து அதனைத் தன் பக்கம் ஈர்க்க அரசு முயன்று வருகிறது. எனவே FCRA மசோதாவைக் கொண்டு வந்து திமுகவிற்கு கடினமான சூழலை நோக்கி தள்ள பாஜக அரசு விரும்பாமல் இருக்கலாம் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ள கட்சியாக அரசாங்கத்தால் கருதப்படும் மற்றொரு கட்சியான தேசியவாத கட்சியை கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சூலேவும். எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவை எதிர்த்துள்ளார். இதனை கருத்தில் கொண்டே FCRA மசோதா மீதான விவாதம் தாமதமாக்கப்பட்டுள்ளதாம். ஒருவேளை மேற்கூறிய நிகழ்வுகள் உறுதியாகும்பட்சத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளிப்பது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/d62f06553484462908ca9f47bc533fe51786332616139732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி -  ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/india/jharkhand-exam-paper-leak-students-protest-assembly-march-270645</link><comments>https://tamil.abplive.com/news/india/jharkhand-exam-paper-leak-students-protest-assembly-march-270645#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 07:24:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/jharkhand-exam-paper-leak-students-protest-assembly-march-270645</guid><description><![CDATA[&lt;h2&gt;தொடரும் மாணவர்கள் போரட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பல இடங்களுக்கும் பரவியது. இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனையடுத்து நீட் தேர்வு உள்ளிட்ட வினாத்தாள்கள் கசிவிடப்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனையடுத்து போராட்டம் டெல்லியில் ஓய்ந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு பணிகள் தேர்வாணயத்தில் வினாத்தாள்கள் கசிந்ததாக கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;முடிவை எட்டாத மாணவர்கள் போராட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;அந்த வகையில், ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவர்கள் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 25 ஆம் தேதி முதல் இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கும் மாணவர்கள் அமைப்பிற்கும் இடையே நடைபெற்ற கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது வினாத்தாள் கசிவான அரசு பணியாளர் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தால் தோல்வியை நோக்கி பேச்சுவார்த்தை முடிவு சென்றது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;சிபிஐ விசாரணை வேண்டும்- மாணவர்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;ஆனால் மாணவர்களின் கோரிக்கை 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் அமைப்பு 13 தேர்வுகளில் 3 தேர்வகளை மட்டும் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத என கூறினார். எனவே தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே அரசின் செயலை கண்டித்தும், தங்களது கோரிக்கை வலியுறுத்தியும் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடப்போவதாக மாணவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் கட்சி சார்பின்றி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;சட்டமன்ற முற்றுகை போராட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கள் போராட்டம் &amp;nbsp;அமைதியானதாகவும் ஜனநாயக ரீதியிலானதாகவும் இருக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு எந்தவொரு அரசியல் கட்சி மற்றும் அமைப்பின் கொடியும் இன்றி நடைபெறும் போராட்டத்திற்குப் பெற்றோர்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறும் மாணவர்கள் அமைப்பு கேட்டுகொண்டுள்ளது. இன்றைய போராட்டதின் காரணமாக ஜார்கண்ட் தலைமைசெயலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/has-your-phone-been-hacked-these-10-signs-will-reveal-the-truth-270524&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/cc4d905066a2f76fa5673ccfa7c274fe17860805839101169_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/news/india/important-announcement-for-sabarimala-pilgrims-new-rules-for-procurement-procedures-here-are-the-details-270535</link><comments>https://tamil.abplive.com/news/india/important-announcement-for-sabarimala-pilgrims-new-rules-for-procurement-procedures-here-are-the-details-270535#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 17:17:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/important-announcement-for-sabarimala-pilgrims-new-rules-for-procurement-procedures-here-are-the-details-270535</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான அனைத்து கொள்முதல்களிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று கோயிலை நிா்வகித்து வரும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/b2020dd4497da42654f7cae9402773911786189606652193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சபரிமலை கோயிலுக்கு கடந்த ஐயப்ப பக்தா்கள் சீசனின்போது&amp;nbsp; கேரள மாநில அரசுக்குச் சொந்தமான மில்மா நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கேரள உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அந்தக் குழு நடத்திய விசாரணையில், மில்மாவிடம் இருந்து செய்யப்பட்ட நெய் கொள்முதலால் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு ரூ.2.27 கோடி இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய ஆணையரின் ஆட்சேபத்தை மீறி, கேரள பால் பண்ணை விற்பனை கூட்டுறவு அமைப்பான மில்மாவுக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டதும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போதிய தர பரிசோதனை நடத்தாததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் முன்னாள் தலைவா் பி.எஸ். பிரசாந்த் உள்ளிட்ட 3 போ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது அந்த வாரிய தலைவா் கே. ஜெயகுமாா் கூறியதாவது, அதுபோல முறைகேடுகள் மீண்டும் நடக்காது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான அனைத்து கொள்முதல்களில் இனி வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும். 24 பொருள்களுக்கு வெளிப்படையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/b5b26d9c03735c52ebdd2d5edea8b3cd1786189568069193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, போட்டி ஆகியவற்றை ஏற்படுத்துவது தொடா்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வது குறித்து இன்றைய திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல், ஒப்பந்தப்புள்ளி ஏல முறைகளிலும் புதிய வழிகாட்டுதல்களை திருவிதாங்கூா் தேவஸ்வம் ஏற்படுத்தும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;a title=&quot;சபரிமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/sabarimala&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;சபரிமலை&lt;/a&gt; கோயிலுக்கு நெய், வெல்லம் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை நாங்கள் கொள்முதல் செய்கிறோம். இ-ஒப்பந்தப்புள்ளி முறையிலேயே இந்த கொள்முதல்கள் நடக்கின்றன. ஆதலால் இதுகுறித்து அறிய திருவிதாங்கூா் தேவஸ்வம் அலுவலகத்துக்கு மக்கள் நேரில் வர வேண்டியதில்லை. இணையதளம் மூலமாகவே விளக்கம் பெறலாம். அனைத்து கொள்முதல் நடைமுறைகளும் நவம்பா் மாதத்துக்கு முன்பு நிறைவடையும். இந்த விவகாரத்தில் அவசரம் காட்டவோ, தவறு செய்யவோ வாரியம் விரும்பவில்லை என்றாா்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/b5b26d9c03735c52ebdd2d5edea8b3cd1786189568069193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/india/independence-day-2026-theme-honoring-freedom-inspiring-future-india-15-august-270510</link><comments>https://tamil.abplive.com/news/india/independence-day-2026-theme-honoring-freedom-inspiring-future-india-15-august-270510#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 13:44:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/independence-day-2026-theme-honoring-freedom-inspiring-future-india-15-august-270510</guid><description><![CDATA[&lt;p&gt;2026ம் ஆண்டுக்கான சுதந்திர தினத்தைக் கொண்டாட ஒட்டுமொத்த இந்திய நாடே தயாராகி வரும் நிலையில் நடப்பாண்டுக்கான தீம் (Theme) என்னவென்று பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;80வது சுதந்திர தினம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நம் இந்திய நாடு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது நாம் அனைவரும் அறிந்த, என்றும் மறவாத ஒரு நிகழ்வாகும். சுதந்திர தினம் என சொல்லும்போதே நம் மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி இருக்கும். பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் இந்த நாளில் நாம் சுதந்திர தினத்தை நினைவுக்கூறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்போம். ஏதோ நாமே சுதந்திரத்திற்காக பாடுபட்டு அதனை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுத்த உணர்வை கொண்டிருப்போம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Udhayanidhi vs CTR | &amp;quot;No answer to the question asked,&amp;quot; Udhayanidhi furious at CTR for diverting ...&quot; src=&quot;https://www.youtube.com/embed/w3tr1i_-PpI&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் கிழமைகள் மாறுமே தவிர ஆகஸ்ட் வந்தாலே எப்போது சுதந்திர தினம் வரும் என்பது தான் நம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த வகையில் 2026ம் ஆண்டு 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியெற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;2026 சுதந்திர தின கருப்பொருள் இதுதான்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;80வது சுதந்திர தினத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ கருப்பொருளை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் விக்சித் பாரத் 2047 என்ற இலக்கின் கீழ் &quot; சுதந்திரத்தைப் போற்றுவோம், எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்&quot; என்ற முழக்கத்தின் கீழ் நாடு தழுவிய பரப்புரை கொண்டாட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;2026 சுதந்திர தினம் என்ன ஸ்பெஷல்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சுதந்திர தின அணிவகுப்பின் போது ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு இணங்க முதல் முறையாக, துப்பாக்கி மரியாதை செலுத்துதலின் போது பயன்படுத்தப்படும் சம்பிரதாய பீரங்கிகளும் உபகரணங்களும் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;பிரதமர் மோடி அளிக்கும் உரை நிகழ்நேரத்தில் 22 இந்திய மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு ஏஐ தொழில்நுட்ப உதவியுடன்டிஜிட்டல் இந்தியா பாஷினி தளம் மூலம் ஒளிபரப்பப்படும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த நாள் ஆகஸ்ட் 15ம் தேதியாகும். இதனால் இந்தியாவின் கடைசி வைசிராயான லார்ட் மவுண்ட் பேட்டன் பிரபு இந்த நாளை தேர்வு செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தார்.&amp;nbsp; மேல் பகுதி காவி, நடுப்பகுதி வெள்ளை, கீழ்ப்பகுதி பகுதி பச்சை, வெள்ளைப்பகுதியின் நடுவே 24 ஆரங்களைக் கொண்ட அசோகச்சக்கரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்திய தேசிய கொடியை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-how-to-lose-5-kg-of-weight-in-a-month-270335&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/b2bba2953967e4248893fc961371c67517861766517541322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!]]></title><link>https://tamil.abplive.com/news/india/children-under-13-could-be-barred-from-making-accounts-on-social-media-270506</link><comments>https://tamil.abplive.com/news/india/children-under-13-could-be-barred-from-making-accounts-on-social-media-270506#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 13:11:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/children-under-13-could-be-barred-from-making-accounts-on-social-media-270506</guid><description><![CDATA[&lt;p&gt;13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் சமூக வலைத்தளக் கணக்குகள் தொடங்க தடை விதிக்கப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இந்தியா முதன்மை நாடாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். பல வகையான சமூக வலைத்தளங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதன் மூலம் மோசடியும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை மிரட்டி &amp;nbsp;பண மோசடி தொடங்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது வரை பல வகையான குற்ற சம்பவங்கள் நிகழ்கிறது. இப்படியான நிலையில் குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Udhayanidhi vs CTR | &amp;quot;No answer to the question asked,&amp;quot; Udhayanidhi furious at CTR for diverting ...&quot; src=&quot;https://www.youtube.com/embed/w3tr1i_-PpI&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியான நிலையில் கோடிக்கணக்கான இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் தங்கள் எதிர்கால வாழ்க்கையை பாழ்ப்படுத்தி வருவதாகவும், இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதில் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டாவால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா நேற்று அறிமுகப்படுத்தப்படவிருந்த இரண்டு தனிநபர் மசோதாக்களில் ஒன்றாகும். ஆனால் கடும் அமளி காரணமாக இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. வரும் வாரத்தில் விவாதம் நடைபெறலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&amp;nbsp;ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெற்றோரின் சரிபார்க்கப்பட்ட ஒப்புதல் இல்லாமல் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் கணக்குகளை தடை விதிக்கப்படலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதுமட்டுமல்லாமல் தளங்கள் சிறார்களைக் கண்காணிப்பது, அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பது அல்லது தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் அவர்களைக் குறிவைப்பது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படலாம். மேலும் இந்த மசோதா திரை நேரத்தைக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கும் பெற்றோர் கட்டுப்பாட்டு டாஷ்போர்டுகளையும் முன்மொழிகிறது. இந்த சட்ட மசோதா 18 வயதுக்குட்பட்ட எவரையும் குழந்தை என வரையறுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆபாசப் படங்கள், சூதாட்டம் மற்றும் போலிப் பந்தயங்கள், வன்முறை அல்லது தீவிரவாத உள்ளடக்கம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கங்களுக்குக் குழந்தைகள் ஆளாகாமல் தடுக்கவும் தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சட்டத்தை மீறும் &amp;nbsp;சமூக வலைத்தளங்களுக்கு ரூபாய் 10 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். தொடர்ச்சியாக மீறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் இந்தியாவில் &amp;nbsp;சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை இதுபோன்று 12 சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் கட்சி பேதமின்றி அனைத்து எம்பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் கண்டிப்பாக இந்த மசோதாவும் வெற்றிக்கரமாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-how-to-lose-5-kg-of-weight-in-a-month-270335&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/ec694385b8ebe160a8ef846450ecc21e17861747971691322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/amit-shah-visits-tiruvannamalai-arunachaleswarar-temple-spiritual-political-significance-tnn-270491</link><comments>https://tamil.abplive.com/news/politics/amit-shah-visits-tiruvannamalai-arunachaleswarar-temple-spiritual-political-significance-tnn-270491#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 11:43:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/amit-shah-visits-tiruvannamalai-arunachaleswarar-temple-spiritual-political-significance-tnn-270491</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்குச் செல்கிறார். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகத் திகழும் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரையும், உண்ணாமுலையம்மனையும் நேரில் தரிசித்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கிறார். தற்போது திருவண்ணாமலையில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில், நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவின் இந்த ஆன்மீக விஜயம் தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எதிரிகளை அழிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலை தரிசனத்தின் சிறப்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சைவ சமயத்தின் தலையாய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை, நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய பூமி என்று போற்றப்படுகிறது. அக்னி வடிவமாக இறைவன் எழுந்தருளியுள்ள இத்தலத்தில் இறைவனை தரிசிப்பது, ஒருவரது வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் எதிர்ப்புகளையும் சுட்டெரிக்கும் ஆற்றல் கொண்டது என்பது ஆன்மீக நம்பிக்கை. &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யாரை மனமுருகி வழிபடும் போது, மறைமுக எதிரிகள், பொறாமை, எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீவினைகள் அனைத்தும் சாம்பலாகி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். மேலும், ரமண மகரிஷி உள்ளிட்ட மகான்கள் தவம் இயற்றிய இந்த அக்னி பூமி, மன அமைதியைத் தருவதோடு, தலைமைத்துவப் பண்பை வலுப்படுத்தவும் எடுக்கும் காரியங்களில் வெற்றியைத் தரவும் கூடிய மகத்தான தபோவனமாகப் பார்க்கப்படுகிறது. அத்தகைய சக்திவாய்ந்த அக்னித் தலத்தில் அமித் ஷா மேற்கொள்ளும் வழிபாடு ஆன்மீக ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்களின் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆன்மீகப் பயணத்தின் போது, 'தமிழகத்தின் அமித் ஷா' என்று பாஜக தொண்டர்களால் அழைக்கப்படும் மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்திய அமைச்சரை நேரில் வரவேற்று நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு இறங்குதளத்தில் அமித் ஷா வருகை தந்தது முதல், கோயிலில் நடைபெறும் சாமி தரிசனம் மற்றும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரம வழிபாடு வரை முன்னணி தலைவர்கள் அவருடன் பயணிக்கின்றனர். ஆன்மீக நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயணத்தின் முக்கிய பின்னணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதுச்சேரியில் நடைபெறவுள்ள மாநிலக் காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு வண்ண விருது (President's Colour) வழங்கும் விழாவில் அமித் ஷா நாளை பங்கேற்க உள்ளார். அந்த அரசு நிகழ்வுக்கு முன்பாக, திருவண்ணாமலையில் ஆன்மீக வழிபாடுகளை நிறைவு செய்துவிட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பகுதிகள் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் திரட்டப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/ac170f3bac79e369acc535614020dd2117861695536171319_original.jpg" width="220"/></item></channel></rss>