Exit Polls 2022 LIVE: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உடனுக்குடன்..
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்
ABP NADULast Updated: 07 Mar 2022 07:37 PM
Background
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates: உத்தரப்பிரதேசம், உத்தராக்கண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட...More
ABP Cvoter Exit Polls 2022 Results LIVE Updates: உத்தரப்பிரதேசம், உத்தராக்கண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகளை நாடே உற்று நோக்கியுள்ளது. இவை தவிர பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
ABP C Voter Exit Poll 2022 LIVE:- உத்தரப்பிரதேசத்தில் பாஜகா தான் மீண்டும் ஆட்சியா?
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 228 முதல் 244 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி 132 முதல் 148 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 21 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Exit Poll 2022 LIVE: மணிப்பூரில் ஆட்சியை பிடிப்பது யார்?
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 21 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். ஏபிபி-சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 23 முதல் 27 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. என்.பிஎஃப் 3 முதல் 7 இடங்களும், என்பிபி கட்சி 10 முதல் 14 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP C Voter Exit Poll 2022 LIVE:கோவாவில் மீண்டும் ஆட்சி அமைக்குமா பாஜக?
கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 21 இடங்களை வெல்லும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி கோவாவில் காங்கிரஸ் கட்சி 12 முதல் 16 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 13 முதல் 17 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1 முதல் 5 இடங்களும், என்ஜிபி கூட்டணி 5 முதல் 9 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கோவாவில் யார் ஆட்சி அமைப்பதில் இம்முறை சுயேட்சைகளின் பங்கு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்குமா ஆம் ஆத்மி:
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 59 இடங்களில் வெற்றிப் பெற்றும் பட்சத்தில் ஆட்சியை பிடிக்கும். அந்தவகையில் ஏபிபி-சிவோட்டர்ஸ் நடத்திய பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 51-61 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது. ஆகவே அங்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது.
Exit Poll 2022 LIVE: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 22 முதல் 28 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 7முதல் 13 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 61 இடங்களும்,அகாலி தளம் கூட்டணி 20 முதல் 26 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: உத்தராகண்ட்டில் காங்கிரஸ் ஆட்சியா?
உத்தராகண்ட் மாநிலத்தில் 36 சட்டப்பேரவை இடங்களை பிடிக்கும் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஏபிபி-சி வோட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி 38 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exit Poll 2022 LIVE: உத்தராக்கண்ட்டில் ஆட்சியை யார் பிடிக்கப்போவது யார்?
ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் ஆகியோரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி உத்தராக்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
ABP C Voter Exit Poll 2022 LIVE: உத்தராக்கண்ட் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கூறியது என்ன?
2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரக்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 32 முதல் 38 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 26 முதல் 32 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 2 இடங்களும்,சுயேட்சைகள் 3 முதல் 7 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது
இன்னும் சற்று நேரத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை ஏபிபி மற்றும் சி வோட்டர்ஸ் ஆகியவை சேர்ந்து நடத்தியுள்ளன.