மேலும் அறிய

கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இணையத்தில் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களே இனக்கலவரம் மோசமாவதற்கு காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மணிப்பூரின் உண்மையான கள நிலவரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (EGI) மணிப்பூர் சென்றது.

பகீர் கிளப்பிய எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவின் அறிக்கை:

மணிப்பூரில் ஆய்வு மேற்கொண்ட எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. மணிப்பூரில்  இணைய சேவை முடக்கப்பட்டதால் செய்திகளை சேகரிப்பதில் பிரச்னை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக குறிப்பிட்ட ஊடகங்கள் ஒரு சார்பாக செய்திகளை வெளியிட்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்தது.

இனக்கலவரத்தின்போது மாநில அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியது. இதை தொடர்ந்து, மணிப்பூரில் மோதலை தூண்ட முயற்சிப்பதாக EGI மீது புகார் அளிக்கப்பட்டது. 

அதன் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக மாநில அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளரான நங்கோம் சரத் சிங், புகார் அளித்தார். இரண்டாவது புகார் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குரையைச் சேர்ந்த சொரோகைபம் தௌதம் சங்கீதா என்பவரால் அளிக்கப்பட்டது.

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா மீது புகார்:

இதற்கிடையே, EGI மீது மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் EGI வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. EGI மீது புகார் அளித்தவர்களை நோக்கி இந்திய தலைமை நீதிபதி இன்றைய விசாரணையின்போது சரமாரி கேள்வி எழுப்பினார்.

"மணிப்பூர் வன்முறை தொடர்பாக EGI வெளியிட்ட அறிக்கை சரியாக இருக்கலாம். தவறாக இருக்கலாம். ஆனால், அதன் கருத்துக்களை வெளியிடுவதற்கு பேச்சுரிமை உண்டு" என சந்திரசூட் தெரிவித்தார். 

"புகார்களில் அவர்கள் மீது கூறப்படும் குற்றங்களில் ஒரு சிறு உண்மை கூட கிடையாது. எந்த விதத்தில் அவர்களின் அறிக்கையின் காரணமாக இந்த குற்றங்கள் நடைபெற்றதாக கூறுகிறீர்கள். இந்திய தண்டனைச் சட்டம் 153A பிரிவின் [வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும்] கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதன் அடிப்படையில் இதன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது? அவர்கள் [EGI] தங்கள் கருத்துக்களை முன்வைக்க உரிமை உண்டு. இது ஒரு அறிக்கை மட்டுமே. எதன் அடிப்படையில் அவர்கள் மீது இந்த குற்றத்தை சுமத்தி இருக்கீறிர்கள்" என இந்திய தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Tenkasi Bus Accident: தென்காசியில் கோர விபத்து.. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 6 பேர் பலி!
Trump Vs Zelensky: கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
கெடு விதித்த ட்ரம்ப்; கூலாக பதிலளித்த ஜெலன்ஸ்கி; திட்டத்தை திருத்திய அமெரிக்கா - நடப்பது என்ன.?
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
தோல்வி தந்த சோகம்! மாணவர் விபரீத முடிவு..அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
kia Upcoming Cars: பீஸ்ட் மோடில் கியா.. ஹைப்ரிட், இன்ஜின், மின்சார எடிஷன் - அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்கள், எகிறும் டிமேண்ட்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
PM Modi G20: ”ஏம்பா முன்னாடியே சொல்ல மாட்டியா” மோடியை கலாய்த்த தென்னாப்ரிக்கா அதிபர் - வீடியோ வைரல்
Embed widget