ரெகுலேட்டர் சேதத்தால் மோசமடைந்த வெள்ள நிலைமை… ராணுவம், என்டிஆர்எஃப் உதவியை நாடிய கெஜ்ரிவால்!

டெல்லி நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ரெகுலேட்டர் ஒன்று, இந்திரபிரஸ்தா பேருந்து நிலையம் மற்றும் வடிகால் எண் 12 இல் உள்ள WHO கட்டிடம் அருகே சேதம் அடைந்தது.

Continues below advertisement

யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டெல்லி தொடர்ந்து கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை ராணுவம் மற்றும் என்டிஆர்எஃப் உதவியை நாடியுள்ளார்

Continues below advertisement

யமுனை ஆறு நீர்மட்டம்

யமுனை ஆறு 205.33 மீட்டரான அபாயக் குறியைத் தாண்டிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஐடிஓ, சாந்தி வான், ராஜ்காட், அங்கூரி பாக் மற்றும் பல பகுதிகளில் அதிக நீர் தேங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, பழைய ரயில்வே பாலத்தில் (ORB) யமுனை நதியின் நீர்மட்டம் காலை 9 மணிக்கு பதிவானதை விட சற்று குறைவாகவே பதிவாகியுள்ளது. காலை 9 மணிக்கு 208.40 மீட்டராக இருந்த நிலையில், 10 மணி நிலவரப்படி 208.38 மீட்டராக உள்ளது என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

கெஜ்ரிவால் ட்வீட்

"யமுனை ஆற்றில் நீர் அளவு உயர்ந்ததால், ITO மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. பொறியாளர்கள் இரவு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். ராணுவம்/NDRF உதவியை நாடுமாறு தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன், இதை அவசரமாக சரிசெய்ய வேண்டும்" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். நிலைமையை ஆய்வு செய்ய முதல்வர் சம்பவ இடத்திற்கு வருகை தருவார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Veeramuthuvel Chandrayaan : சந்திராயன் 3-க்கு மூளையாக செயல்பட்ட தமிழன்.. ஐஐடி மெட்ராஸில் படிப்பு.. உலக நாடுகளை மிரள வைத்த வீரமுத்துவேல்

ரெகுலேட்டர் சேதம்

டெல்லி நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ரெகுலேட்டர் ஒன்று, இந்திரபிரஸ்தா பேருந்து நிலையம் மற்றும் வடிகால் எண் 12 இல் உள்ள WHO கட்டிடம் அருகே சேதம் அடைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. ஏனெனில், உடைந்துள்ளது ரெகுலேட்டர், யமுனை நீரை நகரத்தை நோக்கிப் பாயும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அதிகப்படுத்தி உள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று, அதனை சரி செய்ய உத்தரவிட்டார். ரெகுலேட்டர் சேதமடைந்ததால் டெல்லியில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க என்டிஆர்எஃப் மற்றும் ராணுவத்தின் உதவியை நாடுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

உடனடி நடவடிக்கைகள்

"தேவைப்பட்டால், NDRF மற்றும் ராணுவத்தின் அனைத்து பொறியியல் பிரிவுகளும் இந்த விஷயத்தில் உதவுமாறு கோரப்படும். தலைமைச் செயலர், முதல்வர், I&FC அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சரிடம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்," என்று அதிஷி கூறினார். டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ரெகுலேட்டருக்கு ஏற்பட்ட சேதம் குறித்த விஷயத்தை முன்னுரிமையின் அடிப்படையில் எடுத்து பிரச்சனையை தீர்க்குமாறு தலைமைச் செயலாளருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement