மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவுகள் 2025

(Source:  ECI | ABP NEWS)

Crime News: இரக்கமில்லாத கொடூரன்.. சொத்துக்காக தாயைக் கொன்ற மகன்! உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்த பின், தன் குற்றத்தை மறைக்க கிஷன், தாயின் உடலை கயிற்றில் தொங்கவிட்டுத் தற்கொலை போல சித்தரித்துள்ளார்,

உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டம்  நிலம் மற்றும் பணத்தின் பேராசையில் ஒரு மகன் தன் தாயையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது

பேராசையால் நடந்த கொலை

மஞ்சன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெர்வா கிராமத்தைச் சேர்ந்த கிஷன் கிஷோர் (30) என்பவர் தனது தாயார் ஷீலா தேவி (55)யுடன் சில நாட்களாக மனக்கசப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.  குடும்ப சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் பணம் இருந்துள்ளது

ஷீலா தேவி, தனது நிலத்தையும் பணத்தையும் மற்றொரு மகனின் பெயரில் மாற்றப் போகிறார் என்ற சந்தேகம் கிஷனுக்குள் கோவமாக மாறியது. அதே கோபத்திலும் பேராசையிலும், கடந்த வியாழக்கிழமை மாலை தாயை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை போல நாடகம்

கொலை செய்த பின், தன் குற்றத்தை மறைக்க கிஷன், தாயின் உடலை கயிற்றில் தொங்கவிட்டுத் தற்கொலை போல சித்தரித்துள்ளார், இந்த சம்பவத்தை முதலில் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆரம்பத்தில் இது தற்கொலை என கருதப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மையான காரணம் வெளிச்சமிட்டது — மரணம் கழுத்தை நெரித்தல் காரணமாக ஏற்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் வெளிச்சம்

கௌசாம்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மின்னணு ஆதாரங்கள், தொலைபேசி பதிவுகள் மற்றும் சம்பவ இட ஆய்வுகள் மூலம் கிஷன் கிஷோரின் மீது சந்தேக நிழல் விழத் தொடங்கியது.

பின்னர் தீவிர விசாரணையில், கிஷன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில், “தாய் நிலத்தை மற்ற மகனுக்குக் கொடுக்கப் போகிறார் என்ற சந்தேகம் தான் இந்தச் செயலுக்கு காரணம்” என கூறியுள்ளார்.

உறவினர் வீடில் நடந்த கொலை

இறந்த ஷீலா தேவி, சித்ரகூட் மாவட்டத்தின் கதவானியா கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், சில மாதங்களாக கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள உறவினர் ஜெய் சிங்கின் வீட்டில் தங்கி வந்தார்.அங்கு தங்கியிருந்தபோது தன் தாயைத் தன் கைகளால் கொன்ற கிஷனின் செயல், கிராமத்தை உலுக்கி விட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையிலும், மின்னணு ஆதாரங்களிலும் கிஷன் கிஷோரின் குற்றம் உறுதியாகியதும், போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகாரிகள் பேச்சு

“பிரேத பரிசோதனை அறிக்கையால் தற்கொலை என்ற சந்தேகம் முற்றிலும் நீங்கியது. மின்னணு ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், மகனே தாயை கொன்றது உறுதி செய்யப்பட்டது,” என காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறினார்.இந்த சம்பவம், குடும்ப உறவுகள் சிதைந்து பேராசை எவ்வளவு கொடூரமாக மாற முடியும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
“பணம் மற்றும் சொத்துக்காக தாயையே உயிரோடு கொல்வது மனிதநேயத்தின் எல்லைகளை மீறிய செயல்,” என அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?
Bihar Election 2025 | மீண்டும் அரியணையில் நிதிஷ்?36 வயதில் சாதிப்பாரா தேஜஸ்வி!காங்கிரஸ் நிலைமை என்ன?
Tejashwi Yadav | பெற்றோரை CM ஆக்கிய தொகுதி! தேஜஸ்விக்கு கைகொடுக்குமா? ராகோபூர் தொகுதி சுவாரஸ்யம்
Sundar c quits thalaivar 173|என்னால முடியல’’சுந்தர்.சி-யின் திடீர் முடிவு!ரஜினியின் அடுத்த DIRECTOR?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on Defeat: “நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
“நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை“ - பீகார் தோல்விக்குப் பின் ராகுல் கூறியது என்ன.?
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
முதல்வர் ஸ்டாலின் மாஸ்டர்பிளான்..! திமுகவில் முதன்முறையாக பிராமணருக்கு கட்சிப் பதவி.!
Edappadi Palanisamy: ’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
’’இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்’’ - பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி
Prashant Kishor: கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
கணக்குப் போட்டவர் கோட்டை விட்டார்; டக் அவுட் ஆன பிரசாந்த் கிஷோர் - அரசியலை விட்டு விலகலா.?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது! இறுதியில் உயிர் தப்பிய விமானி! நடந்தது என்ன?
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
பீகார் முடிவு... செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது
Gold Rate Nov. 14th: உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
உன்னால சந்தோஷம் கூட தர முடியுமா.? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் - தற்போது விலை என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 15-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Embed widget