மேலும் அறிய

Budget 2024:வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்; சுவாரஸ்ய வரலாற்று தகவல்கள்!

Budget 2024: நாடாளுமன்ற பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றம் குறித்து வரலாற்று தகவல்களை இங்கே காணலாம்.

ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 23-ம் தேதி 2024-2025-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக்க் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் முதலாவது மத்திய பட்ஜெட் இது. 

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக முழுநேர நிதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். ஆறு முறை நிதி அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனைச் சேரும். முன்னாள் பிரதமர் மோராஜி தேசாயின் சாதனை சமன் செய்தார். 18-வது மக்களவைத் தேர்தலுக்கு முன் நடந்த இடைக்கால பட்ஜெட் என்பதால் ஜூலை 23-ம் தேதி நடைபெறும் பட்ஜெட் தாக்கல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆறாவது முறையாக கணக்கில் கொள்ளப்ப்படுகிறது. 23-ம் தேதி காலை 11 மணிக்கு நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நேரம் முன்பு மாலை 5 மணியாக இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் எப்படி மாறியது என்று காணலாம். 

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் பட்ஜெட்  மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வசதியாக இருந்தது, ஏனெனில், இந்தியாவில் மாலை 5 மணி எனும்போது லண்டலின் ( GMT+ 5.30 மணி நேரம்) காலை 11.30 மணியாக இருக்கும். இதனாலேயே மாலை 5 மணிக்கு தாக்கல் செய்ய ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், 1999 வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு 1999- இந்த நடைமுறையை மாற்றியது. சுதந்திரத்திற்கு பிறகும் லண்டல் நேர முறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை; பட்ஜெட்டில் அறிவிப்புகள் குறித்து ஆரோக்கியமான கலந்தாலோசனை நடைபெற வேண்டும் ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது. 1999-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இந்த மாற்றத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். 

போலவே, பிப்ரவரி மாதம் கடைசி நாளில்தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வழக்கம் இருந்தது. அதை முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாற்றினார். அதிலிரிந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடங்கும் புதிய நிதியாண்டிற்கான (ஏப்ரல், 1) நேரம் இருப்பதால், திட்டங்களை அமல்படுத்த நேரம் இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

  • 1947-1955 வரை மத்திய பட்ஜெட் ஆங்கில மொழியில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது,. நாட்டின் மூன்றாவது நிதி அமைச்சரான சி.டி. தேத்முக் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நிதி அறிக்கை வெளியிட முடிவு செய்தார். இவர் நிதியமைச்சராவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநராக பொறுப்பி வகித்தார். 
  • 2017-ம் ஆண்டிற்கு முன்பு வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 
  • 1924- 2016-ம் ஆண்டுவரை ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் இரண்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது. 
  • 2021-ம் ஆண்டு முதல் காகிதம் இல்லாத டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget