பிஆர் எஸ் கட்சியின் மூத்த தலைவர்களை குறித்து விமர்சனங்களை எடுத்து வைத்ததாகவும் கட்சிக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில் எம்.எல்.சி கவிதா அக்கட்சியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூத்த தலைவர்கள் மீது விமர்சனம்
கவிதா தனது இடைநீக்கத்திற்கு முன்னர் பிஆர்எஸ் கட்சிக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் . கேசிஆர்-இன் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார். கட்சியின் மூத்த தலைவர் டி. ஹரிஸ் ராவ் மற்றும் முன்னாள் எம்பி மேகா கிருஷ்ணா ரெட்டி மீது கவிதா கடுமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்திருந்தார், மேலும் ஊழல் வழக்கில் தனது தந்தையை பலிகடா ஆக்க விரும்புவதாகவும் கூறினார். கவிதாவே ராஜினாமா செய்வதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.
கே. கவிதாவின் இடைநீக்கம் குறித்து கட்சி என்ன கூறியது?
கவிதாவின் இடைநீக்கம் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பி.ஆர்.எஸ். தெரிவித்துள்ளது. கட்சி ஒரு பதிவின் மூலம், " கட்சி எம்.எல்.சி. கே. கவிதாவின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கட்சி விரோதப் பணிகள் பி.ஆர்.எஸ்.-க்கு தீங்கு விளைவிக்கின்றன. கட்சித் தலைமை இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ், உடனடியாக கட்சியில் இருந்து கே. கவிதாவை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் தோல்வியும் கருத்தும்
2023 ஆம் ஆண்டு பி.ஆர்.எஸ் தோல்விக்குப் பிறகு, கட்சியின் உள் விவகாரங்களை கவிதா வெளிப்படையாக விமர்சித்தார் . இது சந்திரசேகர் ராவ் மற்றும் பிற தலைவர்களால் ஒழுக்கமின்மை என்று கருதப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியையும் கவிதா எதிர்த்தார். இதனுடன், அவர் பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு எதிராக பொது அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இப்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.