Breaking LIVE : சென்னை ஆசோக் நகரிலுள்ள தனியார் மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து

Brekaing LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 24 Oct 2022 10:44 AM
Breaking live: சென்னை ஆசோக் நகரிலுள்ள தனியார் மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை ஆசோக் நகரில் உள்ள தனியார் மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நடந்த அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் விவரம் தெரிந்தது

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர், உக்கடத்தைச் சேர்ந்த பழைய துணி வியாபாரி ஜமேசா முபின் என தகவல் தெரிந்தது

Breaking LIVE : மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த இளம் பத்திரிகையாளருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்!

மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த  இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதி வழங்கப்படுள்ளது.


இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்துகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும்,பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து  உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

Breaking LIVE : அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் விளக்குள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.  இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம் லாலா ஜி-யை தரிசனம் செய்தார். இவருடன் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உடன் இருக்கிறார். பிரதமர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தை பார்வையிடுகிறார்.

Breaking LIVE : மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு!

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் தோண்டப்பட்டிருந்த  மழைநீர் வடிகால் பள்ளத்தில் நேற்றிரவு எதிர்பாராவிதமாக முத்துகிருஷ்ணன் விழுந்தார். படுகாயமடைந்த அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். 

ஆந்திராவில் பட்டாசு கடையில் தீ விபத்து - 2 பேர் பலி

ஆந்திராவை அடுத்த விஜயவாடா காந்தி நகரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 85,200 கன அடி தண்ணீர் திறப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 85,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

3-வது முறையாக சீன அதிபராக தேர்வானார் ஜி ஜின்பிங்..!

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆளும் சீன  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் இருந்து இத்தனை லட்சம் பேர் வெளியூருக்கு பயணமா..?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21.10.2022 அன்று சென்னையில் இருந்து 1350 ஆம்னி பேருந்துகளில் 48600 பயணிகளும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 510 ஆம்னி பேருந்துகளில் 18360 பயணிகளும் மற்றும் 22.10.2022   சென்னையில் இருந்து 902 ஆம்னி பேருந்துகளில் 32500 பயணிகளும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 486 ஆம்னி பேருந்துகளில் 17500 பயணிகளும் இரண்டு நாட்களில் 116960 பயணிகள் ஆம்னி பேருந்துகளில் தமிழக முழுவதும் பயணித்துள்ளார்கள்.

பிரதமர் மோடி இன்று அயோத்தி வருகை..!

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - 3 ராக்கெட்..!

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி - 3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 

டி 20 உலகக் கோப்பை தொடர் : இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 155வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 














சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.













கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 155வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.