Breaking News Tamil LIVE : பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது.. கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது.. கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வருகிற மே 24ம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 31 வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் தங்க பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் கட்சியினர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வரை கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினார்கள்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது. நீர் இருப்பு 86.24 டிஎம்சியாக உள்ளது. இதையடுத்து, தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3,006 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதினம் நாற்காலி பல்லக்கில் சென்று குருமூர்த்தத்தில் வழிபாடு நடத்தினார். குரு பூஜையை முன்னிட்டு திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் ஆதீனத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு
திருப்பதூர் : ஆம்பூர் நேதாஜி ரோடு அருகே சாலையோரம் உறங்கிய பெண்ணுக்கு கத்திக்குத்து
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
உலகளவில் இதுவரை 52.63 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 49.60 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய தொற்றால் இதுவரை 62.98 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு : 5,529 காலி பணியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
Background
சென்னையில் 45வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர்.
பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர். 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர் உயர்ந்துள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சமன் செய்ய எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட வேண்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எதிர்காலம், அமெரிக்க எண்ணெய் அளவுகோல், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பீப்பாய்க்கு 130.50 டாலராக ஆக உயர்ந்தது. கடந்த 2008 ஜூலைக்குப் பிறகு, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவுகோலான பிரென்ட் கச்சா, ஒரே இரவில் ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 139.13 டாலரை எட்டியது. இது கடந்ந்த 2008 ஜூலைக்குப் பிறகு இதுவும் அதிகபட்சமாக இருந்தது.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை பூர்த்தி செய்ய வெளிநாட்டு கொள்முதலை நம்பியுள்ளது. இது ஆசியாவில் அதிக எண்ணெய் விலைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும்.எண்ணெய் விலைகள் ஏற்கனவே இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. மேலும் பலவீனமான ரூபாய் மதிப்பு நாட்டின் நிதியைப் பாதிக்கலாம், புதிய பொருளாதார மீட்சியை உயர்த்தலாம் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டலாம்.
2017 ஆம் ஆண்டு முதல், எரிபொருள் விலைகள் சர்வதேச விலைக்கு ஏற்ப தினசரி மாற்றியமைக்கப்படும். ஆனால் 2021 நவம்பர் 4 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) தகவல்களின்படி, மார்ச் 1ஆம் தேதி இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 111 டாலருக்கு மேல் உயர்ந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்காத நேரத்தில் இந்திய கச்சா எண்ணெயின் பீப்பாய் விலை சராசரியாக 81.5 டாலராக ஆக இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -