Breaking News Tamil LIVE: ரஜினிகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 23 Mar 2022 06:09 PM
ரஜினிகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை படித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் பாராட்டு மகிழ்ச்சியை மட்டுமல்ல, மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது. 

மதிப்பு இருக்கிறது என உண்மையைச் சொல்லி இருக்கிறார் ஓ.பி.எஸ் - சசிகலா

மதிப்பு இருக்கிறது என உண்மையைச் சொல்லி இருக்கிறார் ஓ.பி.எஸ் - சசிகலா

முடிவுக்கு வருகிறது ஊரடங்கு கட்டுப்பட்டுகள்.. மத்திய அரசு அதிரடி முடிவு..

கொரோனா கட்டுப்பாடுகளை வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு..

தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட வாய்ப்பு

இலங்கை சிறையில் இருக்கும் நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட வாய்ப்பு

முல்லை பெரியாறு அணை : சர்வதேச குழு ஆய்வு தேவையில்லை - தமிழ்நாடு அரசு

முல்லை பெரியாறு அணை : சர்வதேச குழு ஆய்வு தேவையில்லை - தமிழ்நாடு அரசு

மதிமுக பொதுக்குழு கூட்டம் : புறக்கணித்த நிர்வாகிகள்

மதிமுக பொதுச்செயலாளர் துரை வையாபுரிக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் சிலர் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1778-ஆக உள்ளது

இந்தியாவில் ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1778-ஆக உள்ளது

அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு நேற்று உயர்ந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரபேல் நடாலுக்கு எலும்பில் விரிசல்

எலும்பில் விரிசல்  - ரபேல் நடால் 6 வாரங்கள் வரை விளையாட முடியாது

ஐ.நா.பொதுச்சபை இன்று கூடுகிறது

உக்ரைன் போர் பற்றி விவாதிக்க சிறப்பு அமர்வுக்காக ஐ.நா.பொதுச்சபை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று கூடுகிறது

மீண்டும் திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில்

ஏப்ரல் 1 முதல் திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 13 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்த தமிழ்நாடு அரசு

வாழத்தகுதியற்ற நாடாகும் இலங்கை

வாழத்தகுதியற்ற நாடாகும் இலங்கை -  தமிழகத்தை நோக்கி அகதிகளாக படையெடுக்கும் மக்கள்

மேகதாது - கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம்

மேகதாது திட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு

இன்று பதவியேற்பு

உத்ரகாண்ட்டின் புதிய அரசு இன்று பதவியேற்பு

Background

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு நேற்று உயர்ந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.