Breaking LIVE: பெரியார் பல்கலை.பாலியல் வழக்கில் சிக்கிய பொறுப்பு பதிவாளர் சஸ்பெண்ட்..!
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 26 Jul 2022 07:42 PM
Background
முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது....More
முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்தது. ஆனால்அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கான ஒப்பந்தம் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. இதேபோல் திருநெல்வேலி – செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலையை விரிவுபடுத்தி பலப்படுத்துவதற்கான ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மேலும் இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விசாரித்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் நீண்ட கால நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தும் பட்டியலில் சேர்க்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பெரியார் பல்கலை.பாலியல் வழக்கில் சிக்கிய பொறுப்பு பதிவாளர் சஸ்பெண்ட்..!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.