Breaking LIVE: ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

இன்றைய தினத்தின் செய்திகள் உடனுக்குடன்...

இரவாதன் Last Updated: 24 Aug 2022 05:59 PM
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகளை கையாளுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள், மன நலம் குன்றியோரை கையாளும் வகையில், காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சியளிக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றது

எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது

இலக்கிய உலகின் மிகப்பெரிய விருதான சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் அவர் எழுதிய மல்லிகாவின் வீடு என்ற சிறுகதைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் காளிமுத்துவுக்கு சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தொடங்க இருந்த பி.இ பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

நாளை தொடங்க இருந்த பி.இ பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். 

லால் பிரசாத்துக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ ரெய்டு..!

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

பொங்கல் வேட்டி, சேலை திட்டம் டெண்டர் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. 


1, 683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்கும் இந்த புதிய டெண்டருக்கு செப்டம்பர் 9 ம் தேதி கடைசி நாள் என்றும், இதன் மூலம், சுமார் 1. 80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வு தேதி வெளியீடு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 தேர்வு தேதி வெளியீடு : இன்று முதல் செப். 21 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கொரோனா தொற்று 

கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் - மகாராஷ்ட்ரா

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் :  மகாராஷ்ட்ரா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

பொறியியல் மாணவர்கள் 2 பட்டங்களை பெற முடியும்

இனி பொறியியல் மாணவர்கள் 2 பட்டங்களை பெற முடியும் : புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது அண்ணா பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆக. 30 ல் ஆலோசனை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் மிதமான மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

Background

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை வருகிறது. 


அதன்படி, அடையாறு, நந்தனம், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், சென்ட்ரல், மாம்பலம், புரசைவாக்கம், பெசன்ட் நகர், குரோம்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை,கிண்டி, கேகேநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல, சென்னை அடுத்த புறநகர் பகுதியான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன் தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. 


24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


26.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


27.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.