Breaking News LIVE, Aug 13: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு

Breaking News LIVE, Aug 13: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்

சுதர்சன் Last Updated: 13 Aug 2024 06:18 PM
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

"5000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்!" - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பு

"ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது சென்னை ஐஐடி! கிராமப்புற பகுதிகளுக்கும் முறையான, தரமான கல்வி போய் சேர வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக 5000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்!" - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பு

ஹின்டன்பெர்க் அறிக்கை விவகாரம்; 22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

ஹிண்டன்பெர்க் அறிக்கை விவகாரத்தில் வரும் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ஹின்டன்பெர்க் அறிக்கை விவகாரம்; 22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

ஹிண்டன்பெர்க் அறிக்கை விவகாரத்தில் வரும் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

டாக்கா கலவரம்; முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு

வங்கதேசத்தில் நடைபெற்ற டாக்கா கலவரத்தில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE, Aug 13: நில மோசடி: அதிமுக முன்னாள் MLAவின் கணவர் கைது
Breaking News LIVE, Aug 13: கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது -முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!

இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். NIRF தரவரிசையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட மிகவும் முன்னணியில் இருக்கிறது என்றும் தலைமையிடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 





Breaking News LIVE: இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகளை கடத்திச் சென்ற தூத்துக்குடி சென்ற மூவர் கைது

இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகளை கடத்திச் சென்ற தூத்துக்குடி சென்ற மூவர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை


தூத்துக்குடி மாவட்டம் இனிகோ  நகர் கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் சுமார் 2 டன் எடை கொண்ட பீடி  இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்திச் சென்ற போது இலஙலகை கல்பிட்டி கடல் பகுதியில்  ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர்  நாட்டுப்படகையும் அதிலிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ஜேசுராஜ், பிராங்பட்டு, ராஜுவ் ஆகிய மூவரின் கைது செய்து கல்பிட்டி கடற்படை முகாமிற்கு அழைப்பு சென்றுள்ளனர்.


இவர்களிடமிருந்துதமிழக நாட்டுப்படகில் இருந்து   பறிமுதல் செய்யப்பட்ட பீடி இல்ல பண்டல்களை  சுங்கத்துறை அலுவலகத்தில்  ஒப்படைத்து பின் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், இன்று கூட்டம் நடைபெறுகிறது. 

Breaking News LIVE, Aug 13: ஆளுநர் தேநீர் விருந்து - காங்கிரஸ் புறக்கணிப்பு..!

Breaking News LIVE, Aug 13: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

உச்சத்தில் கேரட் விலை; சரிவில் புதினா விலை: அனைத்து காய்கறிகள் விலை நிலவரம்..!

இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்: ( சென்னை கோயம்பேடு மார்க்கெட் )


காய்கறிகள்: தரங்கள் நிலையில் விலை


வெங்காயம் 45/40/38


தக்காளி 25/24/20


உருளை  45/35/30


சின்ன வெங்காயம் 65/60/50


ஊட்டி கேரட்


100/90/80 


கர்நாடக கேரட் 60/50


பீன்ஸ் 40/35/30


பீட்ரூட். ஊட்டி 60/50


கர்நாடக பீட்ரூட் 20/15


சவ் சவ் 30/20


முள்ளங்கி 20/10


முட்டைகோஸ் 20/15


வெண்டைக்காய் 20/15


உஜாலா கத்திரிக்காய்


30/25


வரி கத்திரி 20/15


காராமணி 40/30


பாவக்காய் 40/30


புடலங்காய் 30/2


சுரைக்காய் 25/15


சேனைக்கிழங்கு 68/65


முருங்கைக்காய் 30/20


சேனைக்கிழங்கு 40/30


காலிபிளவர் 30/25


வெள்ளரிக்காய் 20/18


பச்சை மிளகாய் 60/55


பட்டாணி 140/120


இஞ்சி 140/135/125


பூண்டு 280/230/130


அவரைக்காய் 35/30


மஞ்சள் பூசணி 25/20


வெள்ளை பூசணி.20


பீர்க்கங்காய் 30/20


எலுமிச்சை 120/100


நூக்கல் 20/14


கோவைக்காய் 25/20


கொத்தவரங்காய் 35/30


வாழைக்காய் 7/6


வாழைத்தண்டு,மரம் 30/25


வாழைப்பூ 20/15


குடைமிளகாய் 60/50/40


வண்ண குடைமிளகாய் 80


கொத்தமல்லி 3


புதினா .3


கருவேப்பிலை 25


கீரை வகைகள் 12


மாங்காய் 80/50


 தேங்காய் 30/28

Breaking News LIVE: வயநாடு நிலச்சரிவு - ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிய பிருத்விராஜ்

 


வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் பலர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரள முதலமைச்சரின் பொது நிவாரன நிதிக்கு பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் பிருத்விராஜ் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். 

சென்னை சேத்துப்பட்டு ரவுடி ரோஹித் ராஜை சுட்டுப் பிடித்த போலீஸ்

சென்னை சேத்துப்பட்டு ரவுடி ரோஹித் ராஜை போலீஸ் சுட்டுப் பிடித்தனர். வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த ரோஹித் ராஜ் தேனியில் வைத்து கைது செய்து போலீசார் சென்னை கொண்டு வந்தனர்.

மியான்மரில் லேசான நிலநடுக்கம்..!

மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டது. இது, ரிக்டரில் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது, அதிகாலை 3 .21 மணி அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE, Aug 13: காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து சரிந்து, வினாடிக்கு 40,000 கன அடியாக குறைந்துள்ளது. பாதுகாப்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை 30-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது.

Background

தமிழ்நாட்டு அரசியலில் அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதேநாளில் தான், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது. அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 


இதற்கிடையே, பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.


திமுக மாவட்ட செயலாளர்கள்:


முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வரும் 16ஆம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் இன்று அமைச்சரவை கூட்டமும் நடைபெறுகிறது. 


வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாவின் பிறந்தநாள். அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, செப்டம்பர் 17ஆம் தேதி, திராவிட இயக்கங்களின் முன்னோடியான பெரியாரின் பிறந்தநாள்.


கடந்த 1949 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதிதான், திமுக தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும், முப்பெரும் விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திமுக திட்டமிட்டு வருகிறது.


முக்கிய முடிவு எடுக்கப்போகும் ஸ்டாலின்: 


அந்த வகையில், திமுகவின் முப்பெரும் விழாவை இந்தாண்டு எங்கு கொண்டாடலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில், அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டும் அதே நாளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.