= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் - தேனி போலீஸ் நடவடிக்கை பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோயமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் கார் மற்றும் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சவுக்கு சங்கர் மீதும் தேனி மாவட்டம் பழனி செட்டி பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையில், ஆட்சியர் ஷஜீவனா உத்தரவில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி தமிழக அரசுக்கு எதிராக பொதுமக்களை போராட தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர ஆணையர் உத்தரவில் பதியப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அண்மையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வரும் 16ஆம் தேதி நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு! சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: பாகிஸ்தான் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முன்னாள தலைவர் ஸ்பைஸ் ஹமீதுவை ராணுவம் கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறியதாக ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்பைஸ் ஹமீதுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 12: முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை - நீர்திறப்பு 35,000 கன அடியாக உயர்வு! ஒக்கேனக்கல் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒக்கேனக்கல் காவிரி ஆற்றவில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியிலில் இருந்து 45,000 கன அடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டிய நிலையில் நீ திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக 13,500 கன அடியும் நீர்மின் நிலையன் வழியாக 21,500 கன அடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 12: நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வகையில் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. மீனவர்கள், விவசாயிகள் இதை உணர்ந்துள்ளனர். 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE: காளியம்மாளுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பிறந்தநாள் வாழ்த்து எளிய பின்புலத்தில் நாட்டின் கடைக்கோடியில் பிறந்து, தனது தனித்துவமிக்கப் பேச்சுத்திறனாலும், ஒப்பற்ற அறிவாற்றலாலும் பெரும் ஆளுமையாக உயர்ந்து, மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலைக் கட்டியெழுப்பி வரும் நாம் தமிழர் கட்சி எனும் மக்கள் இராணுவத்தின் முதன்மைத்தளபதிகளுள் ஒருவராகத் திகழும் என்னுயிர் தங்கை பி.காளியம்மாள் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 12: உலக யானைகள் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு! தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக யானைகள் தினம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 12: இரவு ஏழு மணி 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் நீட்டிப்பு! சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றத்தை 4 நாட்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
"அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும்" - ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருந்தால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" - ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Kanguva Trailer : 'கங்குவா' படத்தின் ட்ரெயிலர் வெளியானது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தின் ட்ரெயிலர் வெளியானது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
நாகை: கடன் சுமை.. குழந்தையின்மையால் விரக்தி.. கணவன், மனைவி தற்கொலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் குழந்தையின்மை மன உளைச்சலாம் உயர் மின் அழுத்த மின் கம்பியைப் பிடித்து தம்பதி தற்கொலை குமரேசன் (35) மனைவி புவனேஸ்வரி (28) இருவரும் இன்று காலை வீட்டின் மாடிக்கு சென்று அங்கு மின் கம்பத்தில் இருந்த மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு போலீசார் விசாரணை
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Thirupathi Two Wheeler Restriction : திருப்பதி மலைப்பாதையில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை Thirupathi Two Wheeler Restriction : திருப்பதி மலைப்பாதையில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை
திருப்பதி மலைப்பாதையில் வரும் செப்டம்பர் மாதம் வரை, இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை இரு சக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வனவிலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால், மலைப்பாதையில் விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கைது செய்த சிபிஐ - உச்சநீதிமன்றத்தை நாடிய அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதுதொடர்பான அவரது கோரிக்கையை, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. பிஎம்எல்ஏவின் 45வது பிரிவின் கீழ் மூன்று ஜாமீன் உத்தரவுகள் இருந்தபோதிலும்,சிபிஐ கைது நடவடிக்கையால் கெஜ்ரிவால் இன்னும் சிறையில் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பட்டாசு வெடித்து கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள் காரைக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதை, பட்டாசு வெடித்து கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வயநாடு நிலச்சரிவு : மொய் விருந்து நடத்தும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர் புதுக்கோட்டை: வயநாடு நிலச்சரிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தேநீர் மொய் விருந்து நடத்தி நிதி திரட்டுகிறார் தேநீர் கடை உரிமையாளர் சிவக்குமார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200-க்கு உயர்ந்துள்ளது Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200-க்கு உயர்ந்துள்ளது
தங்கம் விலை ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ.200-க்கு உயர்ந்து, ரூ.51,760-க்கு விற்பனையாகிறது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மரக்காணம் பகுதியில் 3 நாட்களாக பெய்த கனமழையால் கடல் போல் காட்சியளிக்கும் உப்பளங்கள் மரக்காணம் பகுதியில் 3 நாட்களாக பெய்த கனமழையால் கடல் போல் காட்சியளிக்கும் உப்பளங்கள்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு "வெள்ளை யானை" வீதி உலா கோலாகலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு "வெள்ளை யானை" வீதி உலா கோலாகலம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
4 மணிநேரம் பெய்த கனமழை : பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு 4 மணி நேரம் பெய்த கனமழையால் பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோடு, நாகவரா சந்திப்பு, ஹெப்பல் மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Chengalpattu : செங்கல்பட்டு: மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை.. நெற்பயிர்கள் நாசம்.. Chengalpattu : செங்கல்பட்டு: மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், 500 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கள்ளக்குறிச்சி: 3 நாட்களாக பெய்து வரும் மழை.. வட செட்டியந்தல் கிராமத்தில் வீடுகளில் புகுந்த மழைநீர் கள்ளக்குறிச்சி: 3 நாட்களாக பெய்து வரும் மழையால் சங்கராபுரம் அருகே உள்ள வட செட்டியந்தல் கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த மழை நீர். அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 311 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 40 கன அடியாக அதிகரிப்பு.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 95 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 95 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறப்பு.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking News LIVE, Aug 12: மீண்டும் முழு கொள்ளளவை (120 அடி) எட்டிய மேட்டூர் அணை! நடப்பாண்டில் 2வது முறையாக மீண்டும் முழு கொள்ளளவை (120 அடி) எட்டிய மேட்டூர் அணை!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
புழல் ஏரிக்கு நீர்வரத்து 108 கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 108 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2483 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Zomato Dosa Missed : ஆர்டர் செய்த உணவில் தோசையை காணவில்லை.. சொமேட்டோவிற்கு ₹15,000 அபராதம்! Zomato Dosa Missed : ஆர்டர் செய்த உணவில் தோசையை காணவில்லை.. சொமேட்டோவிற்கு ₹15,000 அபராதம்!
திருவள்ளூர் : ஆர்டர் செய்த உணவில் தோசை, ஊத்தப்பத்தைக் காணவில்லை என வாடிக்கையாளர் ஆனந்த் சேகர் புகார். சொமேட்டோவிற்கு ரூ.15000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் குறைதீர் ஆணையம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பீகாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூரில் உள்ள பாபா சித்நாத் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தகவல்