Breaking News Live : பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

மாநில அரசின் அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதைக் கண்காணித்து, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மேல்நிலைப் பள்ளிகள்‌ அங்கீகாரம்‌ வழங்கும்‌ விதிகளில்‌, மேல்நிலைப்பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையின்‌போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள்‌ பாடப்பிரிவு வாரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2022-2023ஆம்‌ கல்வியாண்டிலும்‌ மேல்நிலைக்‌ கல்விக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌பொழுது, மாநிலத்தின்‌ அதிகார வரம்பிற்குள்‌ செயல்படும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளிலும்‌ (சிறுபான்மை கல்வி நிலையங்கள்‌ நீங்கலாக) பழங்குடியினர்‌, ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும்‌ விகிதத்தில்‌ கடைபிடிக்கப்பட
வேண்டும்‌.


மேற்கண்ட அட்டவணையில்‌ தெரிவித்துள்ளவாறு மாணவர்‌ சேர்க்கையின்போது பொதுப் பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல்‌ முதலில்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌. இதில்‌ மாணவர்கள்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும்‌, பொதுப்பிரிவினர்‌, ஆதி திராவிடர், பழங்குடியினர்‌, பிற்படுத்தப்பட்ட பிரிவினர்‌என்ற எவ்விதப் பாகுபாடின்றித் தயாரித்திடவும்‌ அறிவுறுத்தப்படுகிறது. அதன்‌ பின்னர்‌ அந்தந்தப் பிரிவுக்கான பட்டியல்‌ தயாரிக்கப்பட வேண்டும்‌.

மாநிலத்தின்‌ அதிகாரவரம்பிற்குள்‌ செயல்படும்‌ அனைத்து வகைப் பள்ளிகளிலும்‌ (சிறுபான்மை கல்வி நிலையங்கள்‌ நீங்கலாக) பாடப்‌ பிரிவு வாரியாக மேற்கூறப்பட்ட விகிதத்தில்‌ இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெற வேண்டும்‌ என அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. 

அனைத்துப்‌ பள்ளிகளுக்கும்‌ இந்த செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம்‌ பெற்று தங்கள்‌ கோப்பில்‌ வைக்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மேலும்‌, மேற்கூறியவாறு அனைத்துப் பள்ளிகளிலும்‌ மாணவர்‌ சேர்க்கையை உறுதி செய்யுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்தபோதும் பெரும்பாலான பள்ளிகள், இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
21:04 PM (IST)  •  25 Jun 2022

பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் முன் விரோதத்தால் ஞானப்பிரகாஷ் என்பவரை, கொலை செய்யும் நோக்கில்  பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவனர்களில் 6 பேர் பள்ளி மாணவர்கள் என தகவல். மேலும் அவர்களிடம் கத்திகள் மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

19:15 PM (IST)  •  25 Jun 2022

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம்-ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

19:11 PM (IST)  •  25 Jun 2022

நில அபகரிப்பு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி-க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

நில அபகரிப்பு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காத பதிவுத்துறை ஐ.ஜி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

16:57 PM (IST)  •  25 Jun 2022

தாய்- சேய் நல டெண்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசின் தாய்- சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

13:46 PM (IST)  •  25 Jun 2022

"தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு"

மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

13:09 PM (IST)  •  25 Jun 2022

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

13:09 PM (IST)  •  25 Jun 2022

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

12:37 PM (IST)  •  25 Jun 2022

தூத்துக்குடியில் ஒரே கல்லூரியின் 30 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

தூத்துக்குடியில் 30 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

12:24 PM (IST)  •  25 Jun 2022

'முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல்'

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக அவரின் வழக்கறிஞர் பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

12:23 PM (IST)  •  25 Jun 2022

'முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல்'

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக அவரின் வழக்கறிஞர் பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

12:18 PM (IST)  •  25 Jun 2022

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலைமிரட்டல் - டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான சி.வி.சண்முகத்திற்கு கொலைமிரட்டல் புகார் விடுக்கப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

11:32 AM (IST)  •  25 Jun 2022

'ஜூலை 11 பொதுக்குழுவில் இபிஎஸ் தலைமை ஏற்பார்'

ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.

10:24 AM (IST)  •  25 Jun 2022

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 முடித்து மாணவர்களுக்கு உயர் கல்வியில் வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

08:35 AM (IST)  •  25 Jun 2022

காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு - 2 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழக காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு 443 இடங்களில் 2 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர். 

Sponsored Links by Taboola