Breaking news live : கேன் குடிநீர்: தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு
Breaking Live 26th Feb 2022 : இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ABP NADULast Updated: 26 Feb 2022 05:08 PM
Background
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்பேனியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 15 நாடுகள்...More
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்பேனியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 15 நாடுகள் ஆதரவு அளித்தநிலையில், இந்தியா நடுநிலை வகித்தது. இந்தியாவை தொடர்ந்து இந்த தீர்மானத்திற்கு சீனா, ஐக்கிய அரபு அமீரகமும் உள்பட பல நாடுகள் நடுநிலை வகித்தனர். ஆனால், 15 நாடுகள் கொண்ட கவுன்சிலின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா நிரந்தர உறுப்பினராக வாக்களித்தது.
20 லிட்டர் கேன்களில், லேபிள்கள் முறையாக ஒட்டப்பட்டிருக்கவேண்டும். கேன் தண்ணீர், உணவுப் பொருட்களில் குறைபாடு இருந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.
”கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது” - இந்திய தூதர்
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் ஐநா தீர்மானம் - ”கருத்துகளின் அடிப்படையில் தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது” என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்
3வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதலால் ஒரு லட்சம் உக்ரைன் மக்கள் போலந்தில் தஞ்சம்
3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடரும் நிலையில், ஒரு வாரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் உக்ரைன் எல்லையை கடந்து போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் ரஷ்யா - போலாந்து அணிகள் மோத இருந்தது. போர் தொடர்பாக, மார்ச் 24-ம் தேதி ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற இருந்த போட்டியை தவிர்ப்பதாக போலந்து அறிவித்தது.
தெலுங்கானா ஹெலிகாப்டர் விபத்து : தமிழக பெண் விமானி பலி
தெலுங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவிற்கு பறந்து சென்றது. அப்போது, தல்கொண்டா பகுதிக்கு அருகில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதனால், ஹெலிகாப்டரில் இருந்த தமிழக விமானி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைனிலிருந்து முதற்கட்டமாக 5 தமிழர்கள் மீட்பு...
உக்ரைனிலிருந்து முதல் கட்டமாக சிறப்பு விமானத்தில் நாடு திரும்பும் இந்தியர்களில் 5 தமிழர்கள் உள்ளனர். முதல் கட்டமாக 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் மும்பை அழைத்து வரப்படுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ப.சிதம்பரம்..!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களை ஒன்றிய முன்னாள் அமைச்சரும் - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களின் ஒருவருமான ப.சிதம்பரம் அவர்கள் இன்று (26.2.2022) காலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
கோவை அதிமுகவின் கோட்டை இல்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி
கோவையை அதிமுகவின் கோட்டை என பொதுமக்கள் ஒருபோதும் கூறவில்லை; இனி எப்போதும் கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு எதிராக மோசமான பதிவு - ஒருவர் கைது
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகளை அடித்து கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என்று மக்களிடம் பீதியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பவர் கயத்தாறு காவல் நிலைய குற்ற எண் 100/22 U/S 153(A), 505(1), 506(1) IPC & Sec 67 IT Act கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டென மாறிய வானிலை.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு அந்தமான் பகுதியில் வரும் 28-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
எஸ்.ஆர்.பி. பிரதான சாலை, காலனி, ராம்நகர் கே.சி.கார்டன், பெப்பர் மில்ஸ் ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
30 நாட்களில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் : மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் 30 நாட்களில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 114-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
IND vs SL: இலங்கை டி20 தொடரிலிருந்து விலகும் ருதுராஜ் கெய்க்வாட்?
இலங்கை தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.