Breaking News Live : சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை..

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசியல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு ப்ரேக்கிங் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 22 Dec 2021 04:27 PM
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: விவேக் ஜெயராமனிடம் விசாரணை


சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை..

சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம், கோடநாடு கொலை வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது

என்னை தொட முடியவில்லை என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர் - சீமான்


சேலம் - தின்னரை மதுவில் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

சேலம் - கொளத்தூர் அருகே பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை மதுவில் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

பாம்பன் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்


மியான்மர் நாட்டில் மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் நிலச்சரிவு


நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளைவரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி

நெல்லை: பாபநாசம், அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் குளிக்க வனத்துறை அனுமதி



 



கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு : 70 பேர் காணவில்லை என தகவல்

மியான்மரில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் பணியில் இருந்த 70 பேர் காணவில்லை என்றும், ஏற்கனவே பகந்த் என்ற இடத்தில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற நிலச்சரிவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு 

நாடாளுமன்ற இரு அவைகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு 


குளிர்கால கூடடத் தொடரை ஒரு நாளுக்கு முன்பே நிறைவு செய்தது மத்திய அரசு 

ஒமிக்ரான் பரவும் நிலையில் நாளை பிரதமர் மோடி ஆலோசனை


Background

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் 200 ஐ தாண்டி பரவி வருவது தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.