Breaking News LIVE 3rd OCT 2024: பருவமழை முன்னெச்சரிக்கை : சொந்தமாக 36 படகுகள் வாங்கியது சென்னை மாநகராட்சி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது போலீஸ். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தை பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே மிகவும் அருவருப்பாக இருக்கிறது” : சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.. நடிகர் நானி கடும் கண்டனம்
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்! வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 36 படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 3க்கு ஒரு படகும், மண்டலம் 14க்கு இரண்டு படகுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள படகுகள் மற்ற மண்டலங்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
"கலைஞர் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறந்தது யார்? TASMAC என்ற நிறுவனத்தை உருவாக்கியது யார்? ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?" உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரம்:
https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற முகவரியில் சென்னையில் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம்
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர் பதற்றம் காரணமாக டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Background
- விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மது ஒழிப்பு மாட்டில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல – திருமாவளவன் பேச்சு
- தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவதில் தி.மு.க.வுக்கும் உடன்பாடு உண்டு – திருமாவளவன் பேச்சு
- தி.மு.க.வின் வெற்றிக் கூட்டணியைப் பார்த்து எதிரிகளுக்கு வயிற்றெரிச்சல்; எதிரிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறாது – தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
- என் வாழ்நாளில் ஒருநாள் கூட நான் மதுவைத் தொட்டதில்லை – தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி
- தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக மதுக்கடைகளை மூடும் கால அட்டவணையை அறிவிக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
- இஸ்ரேலை இரும்பு கவசம் கொண்டு அமெரிக்க பாதுகாக்கும் – ஜோ பைடன் திட்டவட்டம்
- லெபனானைத் தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு
- ஈரானுக்கு எதிரான போரில் கடவுளின் உதவியால் நாங்கள் வெல்வோம் – இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
- டென்மார்க் அருகே இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – கையெறி குண்டுகளை வீசிய 3 பேர் கைது
- டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு; தடுப்பு வேலி அமைத்து ஏராளமான போலீசார் குவிப்பு
- செஞ்சி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாதிய வன்கொடுமை; பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா
- தி.மு.க. ஆட்சியில் பட்டியலின தலைவர் கிள்ளுக்கீரையாக நடத்தப்படுகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- சேலம் அருகே பேட்டரி மூலம் மிதிவண்டி இயக்கி அரசுப்பள்ளி மாணவர் சாதனை
- தாய்லாந்து, துபாய் நாடுகளில் இருந்து திருச்சிக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல்
- கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி. முகாம் – நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது
- ஆற்காடு அருகே மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பெண்; மக்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தவறிய அதிகாரிகளுக்கு ஆர்.காந்தி எச்சரிக்கை
- வேலூரில் பாதாள சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு; சாலைகளில் வெள்ளம்போல ஓடிய கழிவுநீரால் மக்கள் பாதிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -