Breaking News LIVE: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராய்கான்( 25) என்ற நபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை!
நாமக்கல் : குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தட்டாங்குட்டை என்னும் பகுதியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம். விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
சென்னை அசோக் பில்லர் நோக்கி தண்ணீர் லோடுடன் வந்த டிராக்டர், உதயம் தியேட்டர் 100 அடி சாலை வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷ் என்பவருக்கு கை எலும்பு முறிந்தது.
கே.கே.நகர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதி இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Background
- இஸ்ரேல் மீது நள்ளிரவில் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்
- இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்
- இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவி எண்களை அறிவித்தது இந்தியா
- மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
- போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
- புதுச்சேரியில் பாலியல் புகாரில் காவல்துறை அலட்சியம் – மாவட்ட ஆட்சியரிடம் வேதனை தெரிவித்த குடும்ப தலைவர்
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு – மின் உற்பத்தி பாதிப்பு
- கோவையில் மதுபோதையில் போக்குவரத்து காவலர்களை மிரட்டிய இளைஞர்கள் – தி.மு.க. எம்.பி. கனிமொழி சகோதரர் என கூறி அடாவடி
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று நடக்கிறது – மிகுந்த எதிர்பார்ப்பு
- டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து ரசீது வழங்கும் நடைமுறை – ராமநாதபுரத்தில் அமலுக்கு வந்தது
- சித்தராமையாவுக்கு எதிரான மூடா முறைகேடு வழக்கு; சினேகமாயி கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
- ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு
- தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
- பணம் இருந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -