Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 24 Sep 2024 09:44 PM

Background

மனித குலத்தின் வெற்றி என்பது ஒற்றுமையில்தான் உள்ளது – ஐ.நா.சபையில் பிரதமர் மோடி பேச்சுரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி அமெரிக்காவில் நேரில் சந்திப்புலெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...More

இலங்கையின் புதிய அதிபருக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. கடிதம்!

மீனவர்கள் விவகாரம் உள்பட பல பிரச்னைகள் குறித்து இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், "எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மீனவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். மீன்பிடி குக்கிராமங்களில் உள்ள எளிய மக்களின் பொதுச் சொத்து என்பதால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மீன்பிடி கப்பல்களும் அவர்களுடன் விடுவிக்கப்பட வேண்டும்.


அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திரட்டி மீன்பிடி படகுகளை வாங்கியுள்ளனர். எனவே அவை சமூகச் சொத்துக்களாகக் கருதப்பட்டு அப்படியே திருப்பித் தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.