Breaking News LIVE: தமிழகம் வரும் அமித்ஷா - போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்
சுகுமாறன்Last Updated: 24 Dec 2024 06:12 PM
Background
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? வெளியான தகவலால் பெரும் பரபரப்பு தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார...More
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? வெளியான தகவலால் பெரும் பரபரப்பு தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு என்பது வதந்தி - தமிழக அரசு விளக்கம்வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் உருவாகி தமிழ்நாட்டை குறிவைக்கும் புயல் சின்னமாக மாறும் என கணிப்புதத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும் - விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது நெல்லையில் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் கேரள அதிகாரிகள் குழு தீவிரம்சென்னையில் நடக்கும் உணவுத் திருவிழாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் கூட்டம் - மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்புகிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் - தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெறும் விற்பனைபோக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை - டிசம்பர் 27, 28ம் தேதி நடைபெறும் என தகவல்சித்தேரி மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் 63 கிராம மக்கள் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சிதாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்; நாளை, வரும் 31ம் தேதி இயக்கப்படும் என அறிவிப்பு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த தாம்பரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிஇரண்டு நாள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி மீண்டும் டெல்லி திரும்பினார்வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குசுங்கக் கட்டணத்திற்கு எதிர்ப்பு; கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பேருந்துகள் இயங்காது செல்போன் டவர் கருவிகளை திருடிய கும்பல் கைது; 8 மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம் மத்திய அரசுப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
Breaking News LIVE: தமிழகம் வரும் அமித்ஷா - வரும் 27 காங்கிரஸ் போராட்டம்
வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் மீதும் இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Breaking News LIVE: 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா
வரும் 27ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 28ஆம் தேதி விஜயகாந்தின் முதலமாண்டு நினைவுநாள் ஊர்வலத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 28ஆம் தேதி திருவண்ணாமலையில் பாஜக கட்டட திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
29.12.2024 - சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்று, அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கிறார்.
30.12.2024 தேதி காலை தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்.
31.12.2024 காலை திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, கன்னியாகுமரியில் நடைபெறும் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார்.
Breaking News LIVE: ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க, ரூ.3,657 கோடிக்கு BEML நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டது.
சிதம்பரம் அருகே சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு எதிராக போராட்டம்
புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிதம்பரம் அருகே சுங்கச்சாவடியைத் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் போராட்டடம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை கொலை எதிரொலி: நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
நெல்லையில் நீதிமன்ற வளாகத்திலே நீதிபதி படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரைமணி நேரத்தில் நிதி - அமைச்சர் அன்பில் மகேஷ்
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அடுத்த அரைமணி நேரத்தில் நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டில் சாதனை படைத்த சந்திர பாபு நாயுடு பேரன்
செஸ் விளையாட்டில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் 9 வயது பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை, 175 விதமான செஸ் புதிர்களை மிக வேகமாக முடித்து காட்டி சாதனை படைத்துள்ளார்.