Breaking News LIVE: ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது - நடிகர் ரஜினிகாந்த்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 01 Sep 2024 07:30 PM
"வீட்டுல இருந்தே பசங்களுக்கு கத்துக் கொடுத்து வளர்க்கணும்.." - நடிகை மலினா

"சினிமாவுல மட்டும் Adjustment இல்ல. நிறைய இடங்களில் இருக்கு. வீட்டுல இருந்தே பசங்களுக்கு கத்துக் கொடுத்து வளர்க்கணும்.." - நடிகை மலினா

அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும்" -'மார்டின்' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜுன் பேச்சு

"சினிமா துறையில் மட்டுமல்ல உலகில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்னை உள்ளது. அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும்" -'மார்டின்' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜுன் பேச்சு

கனமழையால் ரயில் பாதைகள் சேதம்

தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ள நிலையில், அவ்வழியாக சென்னைக்கு வரும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

மலையாள திரைத்துறை தொடர்பான ஹேமா கமிட்டி பற்றி எனக்கு தெரியாது - நடிகர் ரஜினிகாந்த்

இண்டிகோ பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜபல்பூரில் இருந்து ஹைதராபாத் சென்றுகொண்டிருந்த இண்டிகோ பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் நாக்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டு தீவிர சோதனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. 

கொல்லிமலை பகுதியில் தொடர் கனமழை

நாமக்கல்: கொல்லிமலை பகுதியில் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம். நமது அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

பொத்தேரி : மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த மூவரை 15 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு

சென்னையை அடுத்த பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் கைதானவர்களில், ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது. இவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த மூவரை 15 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்தது.

Background


  • தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி உள்பட 25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு

  • கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 4ம் தேதி சுங்கச்சாவடி முற்றுகை – லாரி உரிமையாளர்கள் சங்கம்

  • அனுமதி பெறுவதில் தாமதம்; முதல் நாளில் ஃபார்முலா 4 போட்டிகள் பயிற்சிப் போட்டி மட்டும் நடத்த அனுமதி

  • பாராலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றார் ரூபினா

  • சென்னை – நாகர்கோயில், மதுரை – பெங்களூர் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

  • திருச்சியில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி வன்முறை தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் ஒத்திகை

  • பெங்களூர் – ஓசூர் மெட்ரோ நீட்டிப்புக்கு கன்னட அமைப்பு எதிர்ப்பு

  • மலையாள நடிகர்கள் மீதான பாலியல் புகார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் – மோகன்லால்

  • மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டு

  • பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது – நடிகை ராதிகா வேதனை

  • பீகாரில் மத்திய அமைச்சர் கிரிதாஸ் மீது தாக்குதல் முயற்சி – பெரும் பரபரப்பு

  • கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 90 சதவீதம் உயர்வு – பிரதமர் மோடி பெருமிதம்

  • செப்.8ம் தேதி அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி

  • ஆவணி சனி பிரதோஷம்; சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்

  • பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல் மீது திட்டமிட்டு மோதிய சீன கடற்படை கப்பல்

  • காசா பகுதியில் அச்சுறுத்தும் போலியோ – இன்று முதல் சொட்டு மருந்து விநியோகம் – 3 நாட்களுக்கு போர் நிறுத்தம்

  •  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.