Breaking News LIVE: நாளை, 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

Advertisement

சுகுமாறன் Last Updated: 14 Oct 2024 08:04 PM
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்!


சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளை லாரிகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

Background


  • வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என்பதால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

  • சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை – சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

  • கனமழை அபாயம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர்

  • மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் – தொண்டர்களுக்கு தி.மு.க. உத்தரவு

  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, சாலைகளிலும் வெள்ளம்போல தேங்கிய மழைநீர் – மக்கள் பெரும் அவதி

  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டுக்காடு முகத்துவாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

  • நான்கு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் – புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு; முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

  • மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு குறைக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைப்பு

  • 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது

  • தொழில்நுட்ப தேர்வுகளுக்கான போட்டித் தேர்வு இன்று தொடங்குகிறது – 554 பணிகளுக்கு 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

  • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாளை மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம்

  • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

  • பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

  • பாபா சித்திக் கொலைக்கு ஏக்நாத் ஷிண்டே அரசுதான் பொறுப்பேற்பு – ராகுல்காந்தி

  • ஹரியானா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிர ஆலோசனை

  • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்க நடவடிக்கை – அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்த பின் உத்தரவாதம்

  • தொடர் விடுமுறை முடிந்து நேற்று முதல் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்பிய வெளியூர்வாசிகள்

  • இந்தியா – அல்ஜீரியா இடையேயான நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

  • இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் புதிய ஏவுகணை சோதனை மையம் அமைக்க திட்டம்


 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.