Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு

Breaking News LIVE, 11 Sep: உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான முக்கிய நிகழ்வுகள் தொடர்பான, தகவல்களை உடனடியாக பெற ஏபிபி நாடு லைவ் பிளாக்கிள் இணைந்திருங்கள்

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 11 Sep 2024 12:11 PM

Background

வணிகர் சங்கங்கள் பேரவை அமைப்பு தலைவர் த. வெள்ளையன் காலமானார் - முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல்வணிகர் சங்கங்கள் பேரவை அமைப்பு தலைவர் த. வெள்ளையன் மறைவு - வடமாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பிற்கு அழைப்புவிசிக சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில்...More

Breaking News LIVE: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு

 


டெல்லி அளவுக்கு இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், சீனாவுடனான எல்லைப் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி சரியாகக் கையாளவில்லை என்றார்.


“எங்கள் பிரதேசத்தில் சீனப் படைகள் அமர்ந்திருப்பதற்கான காரணம் ஏன் என எனக்கு தெரியவில்லை. லடாக்கில் டெல்லியின் அளவு நிலத்தை சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ளது. அது ஒரு பேரழிவு என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.




"அண்டை நாடு தனது நிலப்பரப்பில் 4,000 சதுர கிலோமீட்டர்களை ஆக்கிரமித்தால் அமெரிக்கா எப்படி நடந்துகொள்ளும்? எந்த ஜனாதிபதியும் அதை நன்றாகக் கையாண்டதாகச் சொல்லித் தப்பிக்க முடியுமா? திரு. மோடி சீனாவை சரியாக கையாண்டார் என்று நான் நினைக்கவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.