Breaking Live : தமிழ்நாட்டில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானது
கிரைம், அரசியல் உள்ளிட்ட முக்கிய செய்திகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
ABP NADU Last Updated: 17 Apr 2022 07:35 PM
Background
பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு பேசியதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜாவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், இணையற்ற இசைஞானி...More
பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு பேசியதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜாவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே என்று பதிவிட்டுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழ்நாட்டில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானது
தமிழ்நாட்டில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 30ஆக அதிகரித்துள்ளது. 24 பேர் குணமடைந்துள்ளனர்.