பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பெங்களூரு நகரில் 08  மணி நேரத்திற்கு மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

Continues below advertisement

எவ்வளவு நேரம் மின்வெட்டு?

பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள்  திட்டமிட்ட  நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

எந்த பகுதியில் மின் தடை?

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காலாண்டு பராமரிப்பு பணிகளுக்காக பெஸ்காமின் ரெமோ மின் நிலையம் மற்றும் பந்தேமத் மின் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Continues below advertisement

ரெமோ மின் நிலையம்

பாபுஜி நகர், கவிதா லேஅவுட், ரங்கநாத் காலனி, படராயன்பூர் அய்யன்னாஷெட்டி லேஅவுட், கணபதிநகர், பிரைட் அபார்ட்மெண்ட்ஸ், திபாஞ்சலி நகர், படேல் புட்டய்யா தொழில்துறை பகுதி, பிஹெச்இஎல், முட்டாச்சாரி இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜோதி நகர், கங்கொண்டனஹள்ளி, விட்ட்ரோக் லாஅவுட், இண்டஸ்ட்ரேக் லாஅவுட் நாயண்டஹள்ளி, படராயனபூர் மைசூர் சாலை, ஷோபா டென்ட் சாலை, குட்டஹள்ளி விரிவாக்கம், குளோபல் வில்லேஜ் டெக் பார்க், ஆர்ஆர் நகர்
 
பந்தேமத் மின் நிலையம்
 
நியூ கேஹெச்பி காலனி, பந்தேமத், கேஎஸ்டி, கேஹெச்பி, அருந்ததி நகர், ஷிர்கே, ஹொய்சாலா வட்டம், வலகேரஹள்ளி, சிக்கனஹள்ளி, காந்திநகர், ஹுனசெமரடா பாளையம், பைரோஹள்ளி, அர்ச்சகரா லேஅவுட், ஹோசபாளையா, சல்லகட்டா, பெட்டனபாளைய, இன்ஸ்ட்ரயாபல்யா, மலிகலியா, மலிகலியா, மல்லிகால் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. கொம்மாகட்டா, சுளிகேரே, கிருஷ்ண சாகர், மரகொண்டனஹள்ளி

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

 பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்

கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.