ஆந்திரபிரதேச மாநிலத்தில் ரயில் நிலையத்தில் வைத்து கர்ப்பிணி பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஆந்திரபிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபள்ளே ரயில்நிலையத்தில் இந்த கொடூரம் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் தனது குடும்பத்தினருடன்  ரயிலுக்கு அங்கு காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரைத் தாக்கிவிட்டு அந்தப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்கரம் செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. 



                                         
                                                         


அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் அங்கிருந்து கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு செல்ல இருந்ததும் இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. தற்போது அந்தப்பெண், உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தசம்பவம் தொடர்பாக, சந்தேகம் படும் படியான நபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இது குறித்து  பாபட்லா எஸ்பி வகுல் ஜிந்தால் கூறும் போது, “ரயில் நிலையத்தில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து, சம்பவநாளன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று கூறியுள்ளார்


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண