ஆந்திராவில் சுண்ணாம்பு குவாரியில் வெடிவிபத்து ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கலசபாடு தொகுதியின் மாமிலப்பள்ளி கிராமத்தில் சுண்ணாம்பு குவாரியில் இன்று  வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 


பலியானவர்கள் அனைவரும் குவாரி தொழிலாளர்கள் ஆவர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி வேகமான நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிவிபத்திற்கான காரணம் இது வரை தெரியாத நிலையில், பலியானவர்கள் யார் என்பது குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 10 பேர் மட்டும் தான் உயிரிழந்துள்ளார்களா? அல்லது கூடுதல் உயிர்பலி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இறந்தவர்களை உடலை அடையாளம் காணும் பணி ஒருபுறம் நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் கடப்பா மாவட்டத்தில் பரபரப்பு நிலவும் சூழலில் அங்கு மேலும் விபரீதம் ஏற்படாமல் தவிர்க்கும் முயற்சியில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.