அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்: விரைவில் புதிய ரயில்கள்! தமிழக பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
தன்பாத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ரயில் கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எஞ்சிய இரண்டு ரயில்களும் தெற்கு ரயில்வேயின் கீழ் இடம்பெற்றுள்ளது.
ஏழைகளின் வந்தே பாரத் என்று அழைக்கப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 27 வழித்தடங்களில் பயன்பாட்டில் உள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 6 ரயில்கள் அடங்கும். இந்நிலையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது புதிதாக மூன்று அம்ரித் பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பட்டியலில் தாம்பரம் – மங்களூரு, நாகர்கோவில் – சார்லாபள்ளி, தன்பாத் – கோவை ஆகிய எக்ஸ்பிரஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தன்பாத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ரயில் கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எஞ்சிய இரண்டு ரயில்களும் தெற்கு ரயில்வேயின் கீழ் இடம்பெற்றுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரயில் நிர்வாகங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தென் மத்திய ரயில்வே நிர்வாகத்திடம் (SCR) இருந்து முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் – சார்லாபள்ளி இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான ஒப்புதல் கடந்த மார்ச் 5, 2026 அன்று வந்தது. இதுபற்றி விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், வரும் 11ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் எஞ்சிய தாம்பரம் – மங்களூரு, தன்பாத் – கோவை ரயில்களும் மார்ச் 11 முதல் பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் வழித்தடம் என்பது காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தமிழகம், கேரளா, கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கக் கூடியது.இந்த ரயில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது.
வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூர், ஓங்கோலே, சிராலா, பாபட்லா, தெனாலி, குண்டூர், சாட்டனபள்ளி, மிர்யாலகுடா, நல்கொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட் என நான்கு மாநிலங்களை இணைக்கிறது. மொத்தம் 2,797 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. எனவே 45 முதல் 50 மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டி வரும். போகோரா ஸ்டீல் சிட்டி, ராஞ்சி, ரூர்கேலா, டிட்லாகர், ராயகடா, பார்வதிபுரம், ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோலே, நெல்லூர், காட்பாடி, சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியே பயணிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















