Adani: பூரி ஜெகன்னாதர் கோயிலில் அதானி.. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாத சேவை
உலகப் புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு தொழிலதிபர் அதானி சென்றுள்ளார்.

ஒடிசாவில் அமைந்துள்ளது பூரி ஜெகன்னாதர் கோயில். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் வட இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரையில் பங்கேற்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
பூரி ஜெகன்னாதர் கோயிலில் அதானி:
பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரையில் அதானி குழுமம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. கடந்த 26ம் தேதி முதல் வரும் ஜுலை 8ம் தேதி வரை பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பூரி ஜெகன்னாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதானி இன்று ஒடிசா சென்றுள்ளார்.
#WATCH | Odisha: Adani Group Chairperson Gautam Adani arrives in Bhubaneswar. From here, he will head to Puri for Shree Jagannath #RathYatra.
— ANI (@ANI) June 28, 2025
Adani Group has initiated the ‘Prasad Seva’ in Puri Dham and is undertaking a comprehensive 'seva' effort to support both pilgrims and… pic.twitter.com/wFeCWQKbog
விமானம் மூலமாக அவர் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். இவர் இன்னும் சற்று நேரத்தில் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பூரி ஜெகன்னாதர் கோயிலில் ஏற்கனவே பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வரும் நிலையில், அதானி உள்ளிட்ட பிரபலங்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரசாத சேவை:
ஒடிசாவின் தகிக்கும் வெப்பத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை மகிழ்விக்கும் விதமாக 40 லட்சம் மக்களுக்கு உணவுகள், குளிர்பானங்கள் வழங்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. பூரியில் உள்ள மகாசங்காவில் உள்ள கடற்படை வீரர்கள், கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் ஆகியோரையும் சிறப்பிக்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. பூரி செல்லும் அதானி அவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரக்யாராஜில் நடந்த மகாகும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கும் அதானி குழுமம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பூரி ஜெகன்னாதர் கோயில் திருவிழா நடக்கும் வரும் 8ம் தேதி வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போலீசார், தீயணைப்புத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு:
இன்று அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரும் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏராளமான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.





















