ரிஷிகேஷில் பஞ்சி ஜம்பிங் கயிறு அறுந்து விழுந்ததில் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
பஞ்சி ஜம்பிங் என்பது ஒரு உயரத்தில் இருந்து இழுபடும் ரப்பர் கயிற்றின் உதவியுடன் கீழே குதித்து, மேலும் கீழும் ஊசலாடும் ஒரு சாகச விளையாட்டாகும். இது உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. என்னத்தான் இந்த விளையாட்டில் த்ரில் மற்றும் உற்சாகத்தை அளித்தாலும் இதில் ஆபத்தும், அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில் ரிஷிகேஷின் சிவபுரி பகுதியில் மற்றொரு பஞ்சி ஜம்பிங் விபத்து நிகழ்ந்துள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி புதன்கிழமை மாலை எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் குதிக்கும் போது கயிறு அறுந்து ஒரு சுற்றுலாப் பயணி விழுவதைக் காட்டுகிறது. சுற்றுலாப் பயணி கீழே விழுந்ததில் காயமடைந்த நிலையில் அவரை உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது முதல் வழக்கு அல்ல. சில நாட்களுக்கு முன்பு, சிவபுரியில் பஞ்ஜி ஜம்பிங் செய்யும் போது ஒரு இளைஞர் காயமடைந்தார். அடிக்கடி நிகழும் இந்த சம்பவங்கள் இது மாதிரியான சாகச விளையாட்டுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. பஞ்ஜி ஜம்பிங் என்பது சிலிர்ப்பை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாகும், ஆனால் சிறிதளவு பாதுகாப்பு குறைபாடு கூட ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.
உற்சாகத்தில் இருக்கும் ஆபத்து:
சமீபத்தில், பஞ்சி ஜம்பிங் மீதான மோகம் இளைஞர்களுக்கு மட்டும் இருப்பதில்லை. சில நாட்களுக்கு முன்பு, பிரிட்டனைச் சேர்ந்த 83 வயது பெண் ஒருவர் சிவபுரியில் உள்ள பஞ்சி மையத்திலிருந்து 117 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது வீடியோ ஆன்லைனில் வைரலானது, மேலும் வயது வெறும் எண் என்று அவர் நம்பியதற்காக மக்கள் அவரைப் பாராட்டினர்.
இதேபோல், பாரா-தடகள வீராங்கனை டாக்டர் நீர்ஜா கோயல் 109 மீட்டர் உயரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் செய்து சாகச உலகில் வரலாற்றைப் படைத்தார். மேலும், அவரது வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பார்க்கப்படுகிறது, மேலும் மக்கள் அவரது மன உறுதியைப் பாராட்டுகிறார்கள். இருப்பினும், இந்த ஊக்கமளிக்கும் வீடியோக்களுக்கு மத்தியில், சமீபத்திய விபத்துக்கள் சாகச விளையாட்டுகள் ஆபத்தானவை போலவே சிலிர்ப்பூட்டும் தன்மை கொண்டவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. பங்கி ஜம்பிங் மையங்கள் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு தரங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.