Karnataka Exit Poll 2023 LIVE: கர்நாடகாவில் பாஜகவா? காங்கிரஸா? - கிங் மேக்கராகும் குமாரசாமி!

Karnataka Election Exit Poll Results 2023 LIVE Updates: கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை இங்கு அறியலாம்.

ஆர்த்தி Last Updated: 10 May 2023 08:34 PM
Karnataka Exit Poll 2023 LIVE: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்.. Republic-PMARQ நடத்திய கருத்துகணிப்பில் வெளியான தகவல்

Republic-PMARQ நிறுவனங்கள் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் காங்கிரஸ் கட்சி 94 முதல் 108  இடங்களிலும், பாஜக  85-100 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24-34 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2-6 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karnataka Exit Poll 2023 LIVE: கர்நாடகாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு - Zee News-Matrize  நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துகணிப்பு முடிவுகள்..!

Zee News-Matrize  நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் காங்கிரஸ் கட்சி 103 முதல் 118  இடங்களிலும், பாஜக  79-94 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25-33 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2-5 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karnataka Exit Poll 2023 LIVE: கர்நாடகாவில் ஆட்சியமைப்பது யார்? - JAN KI BAAT நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பு முடிவுகள்

JAN KI BAAT நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பில் காங்கிரஸ் கட்சி 91 முதல் 106  இடங்களிலும், பாஜக  94-117 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 14-24 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Karnataka Exit Poll 2023 LIVE: NEWS NATION-CGS இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் பாஜக முன்னிலை

NEWS NATION-CGS இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் காங்கிரஸ் கட்சி 86 இடங்களிலும், பாஜக 114 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Karnataka Exit Poll 2023 LIVE: கர்நாடகாவில் காங்கிரஸ் 100-112; பாஜக 83-95 இடங்களில் முன்னிலை

 



Seat Prediction




BJP: 83-95




Congress: 100-112




JDS: 21-29 




Others: 2-6




Vote Share




BJP- 38%




Congress- 41%




JDS- 15%




Others- 6%


Karnataka Exit Poll 2023 LIVE: ஹைதராபாத் பகுதியில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி

Hyderabad-Karnataka- 31 seats 




Seat Prediction




BJP: 11-15 




Congress: 13-17




JDS: 0-2




Others: 0-3




Vote Share




BJP- 38%




Congress- 44%




JDS- 13%




Others- 5%


Karnataka Exit Poll 2023 LIVE: கடலோரப் பகுதியில் பாஜக 15-19 இடங்களில் முன்னிலை; காங்கிரஸ் 2-6

 



Coastal Karnataka- 21 seats 




Seat Prediction




BJP: 15-19




Congress: 2-6




JDS: 0-0




Others: 0-0




Vote Share




BJP- 49%




Congress- 37% 




JDS- 8%




Others- 6%


Karnataka Exit Poll 2023 LIVE: கிரேட்டர் பெங்களூரில் காங்கிரஸை விட பாஜக முன்னிலை

 



Greater Bengaluru - 32 seats 




Seat Prediction 




BJP: 15-19




Congress: 11-15




JDS: 1-4




Others: 0-1 




Vote Percentage




BJP- 45%




Congress- 39%




JDS- 13%




Others- 3%


கர்நாடக தேர்தல்: வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல்: வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல்: நிறைவு பெற்றது வாக்குப்பதிவு

கர்நாடக தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 

கர்நாடக தேர்தல்: 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

5 மணி நிலவரப்படி, கர்நாடகாவில் 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களித்த பிரலாத் ஜோஷி..!

நடந்து வரும் கர்நாடக தேர்தலில், மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி, நடிகர் துருவா சர்ஜா ஆகியோர் வாக்களித்துள்ளனர். 

கர்நாடக வாக்குப்பதிவு நிலவரம்..!

3 மணி நிலவரப்படி, கர்நாடக தேர்தலில் 52.03 வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தி எதிர்ப்பை கையில் எடுத்த சித்தராமையா..!

வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், அவரிடம் இந்தியில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்தியில் பதில் அளிக்க மறுத்த அவர், கன்னடத்திலோ, ஆங்கிலத்திலோ கேள்விகளை கேட்குமாறு கூறினார்.

தேர்தல் இயந்திரங்களை உடைத்த கிராமவாசிகள்...வாக்குப்பதிவின்போது பரபரப்பு..!

விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பசவனா பாகேவாடி சட்டப்பேரவை தொகுதியின் கீழ் வரும் மசாபினால் கிராமத்தில், உள்ளூர்வாசிகள் தேர்தல் இயந்திரங்களை போட்டு உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை: ரகசியத்தை போட்டு உடைத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்..!

தேர்தலுக்கு பிறகு, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வாக்களித்த நடிகர் கிச்சா சுதீப்..!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் வாக்களித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரச்னைகள் தனிநபர்கள், தங்கள் பிரச்னைகளை மனதில் வைத்து ஒருவர் வாக்களிக்க வேண்டும். நான் ஒரு பிரபலமாக இங்கு வரவில்லை, நான் ஒரு இந்தியனாக இங்கு வந்துள்ளேன், அது எனது பொறுப்பு" என்றார்.


 
இந்த முறை காங்கிரஸ் தான் - சித்தராமையா

இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ்தான். அதில் நோ டவுட். மோடியும் அமித்ஷாவும் எத்தனை ரோடு ஷோ நடத்தினாலும் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த முறை மக்கள் பாஜகவுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். 

வாக்களித்தார் முன்னாள் பிரதமர் தேவ கவுடா

முன்னாள் பிரதமர் தேவ கவுடா (89) மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோர் ஹாசன் பகுதியில் வாக்களித்தனர்.





135 தொகுதிகள் உறுதி..

Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 தொகுதிளை கைப்பற்றும் என, கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கர்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் 1மணி நிலவரம்

Karnataka Election 2023: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 1 மணி நிலவரப்படி 37.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன

”கிங் மேக்கர் அல்ல, கிங்கும் கூட” - குமாரசுவாமி

Karnataka Election 2023: ஜனதா தளம் (எஸ்) கட்சி கிங் மேக்கர் மட்டுமல்ல கிங்கும் கூட என, வாக்களித்த பிறகு ஜனதா தளம் கட்சி தலைவர் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கடமையாற்றும் திரை பிரபலங்கள்..!

Karnataka Election 2023: கர்நாடக திரைபிரபலங்களான சிவராஜ் குமார், அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான கீதா மற்றும் பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் மகன்களாக மனோ ரஞ்சன் மற்றும் விக்ரம் ஆகியோரும் வரிசிசையில் நின்று வாக்களித்தனர்

காங்கிரஸ் தலைவர் வாக்களித்தார்

Karnataka Election 2023: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது மனைவி ராதாபாய் கார்கே ஆகியோர் கலபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

ஆட்டோ ஓட்டிய சிவக்குமார்..

Karnataka Election 2023: கர்நாடகா காங்கிரஸ் தலைவரான சிவாக்குமார், தான் போட்டியிடும் கனகபுரா தொகுதியில் ஆட்டோ ஓட்டினார்

தமிழ்நாட்டில் கோடை மழை 115% கூடுதலாக பெய்துள்ளது..

தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1ஆம் தேதி முதல் இன்று வரை (மே 10 ஆம் தேதி வரை ) 115  சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 174.1 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் அவதூறு வழக்கு..

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின், சொத்து விவரங்கள் என கூறி அண்ணாமலை அண்ணாமலை பல விவரங்களை வெளியிட்டார். இதை எதிர்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வேகமெடுக்கும் வாக்குப்பதிவு

Karnataka Election 2023: 11 மணி வரையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 21 சதவிகிதம் அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன

இந்தியாவில் மேலும் 2,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. 14 பேர் உயிரிழப்பு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 21,406 பேர் மொத்தமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

எட்டாக்கனியாய் மாறும் தங்கம்.. சவரனுக்கு ரூ. 200 உயர்வு..

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 45,936 க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ரூ.5,742 க்கு விற்பனையாகிறது


அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,215 ரூபாயாகவும், ஒரு சவரன் 49,720 ரூபாயுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது


வெள்ளி விலை


ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூபாய் 82.70 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் 82,700 ஆக விற்பனையாகிறது.

கர்நாடகா வாக்குப்பதிவு - 9 மணி நிலவரம்

Karanataka Election 2023: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்  காலை 9 மணி நிலவரப்படி 7.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 06 மணி நேரத்தில் 5 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று, (மே 10 ஆம் தேதி), காலை  05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கில் சுமார் 540 கி.மீ. தொலைவிலும், காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1460 கி.மீ தொலைவிலும் மற்றும் சிட்வேவிற்க்கு (மியான்மர்) தென்-தென்மேற்கில் 1350 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.  


இது சிறிது நேரம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து இன்று மாலை அதே பகுதியில் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் தொடங்கியது வாக்குப்பதிவு..

உத்தரபிரதேசத்தில் சுவார் மற்றும் சான்பே தொகுதி, ஒடிசாவின் ஜார்சுகுடா, மேகாலயாவின் சோஹியோங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் வந்து வாக்களியுங்கள் - இன்போசிஸ் நாராயண மூர்த்தி

Karnataka Election 2023: ”முதலில் வாக்களியுங்கள், பின்பு எது சரி எது தவறு என்று விமர்சியுங்கள். வாக்களிக்காமல் விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை” என பெங்களூருவில் வாக்களித்த பிறகு இன்போசிஸ் நிறுவனர்  நாராயண மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

3 மாநிலங்களில் இடைதேர்தல்..

Karnataka Election 2023: கர்நாடக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு மத்தியில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்வார் மற்றும் சன்பே ஆகிய தொகுதிகளுக்கும், ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் மேகாலயாவின் சோஹியோங் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைதேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.

அமைச்சர் வாக்களித்தார்

Karnataka Election 2023: கர்நாடக அமைச்சர் அஷ்வத் நாராயண் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.


 


 

வங்க கடலில் இன்று உருவாகிறது புயல்.. எந்த திசையை நோக்கி நகரும் ? வானிலை அப்டேட் இதோ..

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று மாலைக்குள் புயல் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


காற்றழுத்த தாழ்வு மண்டலம் போர்ட் பிளேயரில் இருந்து 510 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.  நாளை தீவிர புயலாக வலுவடைந்து பின்னர் வலுகுறைந்து 14ம் தேதி வங்கதேசம்- மியான்மர் இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் தொடங்கியது வாக்குப்பதிவு.. மும்முனை போட்டியில் மக்கள் ஆதரவு யாருக்கு?

கர்நாடகவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு ஆட்சியை பிடிப்பதற்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) இடையே நேரடியாக கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

Background

கர்நாடகவில் ஒரே கட்டமாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்கு ஆட்சியை பிடிப்பதற்கு தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக கடும் போட்டி நிலவி வருகிறது.


கர்நாடக தேர்தல்:


தென்னிந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலமான கர்நாடகாவில், அவர்களது பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்குள்ள 24 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த மார்ச் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்த அறிவிப்பு வெளியானது முதல் ஆளும் மீண்டும்  ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக ஒரு மாத காலமாக நடைபெற்ற சுறாவளி பரப்புரை, கடந்த திங்கட்கிழமை மாலை நிறைவுற்றது.


2,615 வேட்பாளர்கள்:


கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.


வாக்குப்பதிவு:


 இந்த நிலையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடையை ஆற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க,  5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி பெற்று உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் அடங்குவர். இதில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் ஆவர்.


நீலகிரியில் விடுமுறை:


கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பணியற்றும் அம்மாநில தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் விதமாக நீலகிரி மாவட்ட தொழிலாளர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாக்குச்சாவடிகள்:


கர்நாடக மக்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக வாக்குச்சாவடிகள் சாய் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மொத்தம் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு இயந்திரங்களும், 70 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு இயதிரங்களும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்கான 76 ஆயிரத்து 202 இயதிரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.


பலத்த பாதுகாப்பு:


வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியாக நடத்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளிலும் பலத்த பதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும், வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.