சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜாஷான் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த விபத்துகுறித்து தகவலை தெரிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். காடையமடைந்தவர்கள் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவியை செய்து கொடுப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த விபத்து குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அருகில் இருக்கும் இந்திய அதிகாரிகளிடம் பேசினேன். தேவையான உதவிகளை அவர்கள் செய்து கொடுப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.