தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • ரூ.732 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

  • 10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்; 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

  • அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • மேகதாது அணை கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் அனுமதி வேண்டும், அனுமதி பெறாமல் கட்ட முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • என் மண் என் மக்கள் நிறைவு விழா தேதியில் அரசு நிகழ்ச்சி இருப்பதால், பிரதமரின் வருகை தேதியை உறுதி செய்த பின் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • மதுரையில் வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் வரும் 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா:



  • வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி - தீர்ப்பாயம் நடவடிக்கை

  • டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவர உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

  • வாலட், ஃபாஸ்டாக் உள்ளிட்ட பே-டிஎம் சேவைகளை பயன்படுத்த மேலும் 15 நாள் அவகாசம் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு

  • காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக உத்தர பிரதேச  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

  • கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • டெல்லி ஐஐடி கல்லூரியில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பாரத் ஜடோ நியாய யாத்திரையில் பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தார்.


உலகம்: 



  • ரஷ்ய தம்பதியினர் குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென புதின் வலியுறுத்தியுள்ளார்.

  • ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு புதினே பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  • கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்

  • அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு - 1,000 விமானங்கள் ரத்து


விளையாட்டு:



  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றினார்.

  • டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முன்னேறினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

  • சர்பராஸ் கானின் தந்தை நவுசாத் கானுக்கு கார் பரிசளிப்பதாக ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு