தமிழ்நாடு:



  • ஜனவரி 9ஆம் தேதி 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 


  • பொங்கலை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 3,000 வரை போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.



  • கரும்பை பொங்கல் பரிசுப்பொருளில் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


  • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை  உத்தரவிட்டுள்ளது. 



  • மகளிர் உயர, மாநிலம் உயரும்’ என்ற தி.மு.க.வின் பரப்புரை ஹாஷ்டாக்கான “தலைநிமிர்ந்த தமிழகம்” ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட். 

  • பொங்கல் பரிசு தொகுப்பை பெற நாளை முதல் டோக்கன் விநியோகம் - தமிழக அரசு தகவல்

  • குடிநீர் விநியோகத்தினை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் 


  • தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வமுரளி என்பவரை கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை நேரில் அழைத்து அவரது திறமையை பாராட்டியுள்ளார்.



  • திருவொற்றியூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 வாலிபர்களில் 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. 

  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வு எதிரொலி: தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

  • கட்சியை வலுப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழ்நாடு வருகை தருகிறார்.

  • சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு 100 சதவீத ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, நாளை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. 


இந்தியா:




  • உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




  • மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




  • ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கடன் மோசடி வழக்கு: வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்று எச்சரிக்கையாக இருந்தால் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தடை வராது - பிரதமர் மோடி அறிவிப்பு

  • ஆந்திராவில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர்.

  • சீனாவில் நிலவும் தீவிரமான கொரோனா நிலை போல இந்தியாவில் ஏற்படாது என மூத்த விஞ்ஞானியும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநருமான வினய் கே நந்திகூரி தெரிவித்துள்ளார்.

  • தங்களது மகள்களையும், தங்கைகளையும் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு, திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய இணையமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

  • இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயிற்சி சோதனை நடத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

  • சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.


உலகம்:



  • அமெரிக்காவில் நிலவி வரும் மோசமான பனிப்புயலால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 40 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். 

  • நேபாளத்தின் நாட்டின் புதிய பிரதமராக பிரசாந்தா மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.

  • நிலையான, உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் - சீனா அமைச்சர் அறிவிப்பு

  • சீனாவில் ஜெஜியாங் நகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவதாக இ-மெயிலை கண்டுபிடித்த தமிழரான சிவா அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


விளையாட்டு:



  • டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

  • இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் ரோகித்திற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.